2005 காஷ்மீர் நிலநடுக்கம்
![]() 2005 காஷ்மீர் நிலநடுக்கம் (2005 Kashmir earthquake) 8 அக்டோபர் 2005 அன்று பாகிஸ்தான் நேரப்படி காலை 8:50:39 மணிக்கு, 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்க மையமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரின் தலைமையிடமான முசாஃபராபாத் இருந்தது. இந்நிலநடுக்கத்தால் முசாஃபராபாத், பாலகோட் நகரங்கள் 70% அளவிற்கு பலத்த சேதமுற்றது.[8][9] மேலும் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் மூன்று மாவட்டப் பகுதிகள் பலத்த சேதமடைந்தது. பாகிஸ்தானின் மலைப்பாங்கான பகுதிகளில் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் நிலச்சரிவாலும், கட்டிட இடிபாடுகளாலும், மக்கள் இறப்பு எண்ணிக்கை 86,000 –87,351 அளவிலும்; காயமடைந்தோர் எண்ணிக்கை 69,000 – 75,266 அளவிலும் இருந்தது. மேலும் 2.8 மில்லியன் மக்கள் இடம் பெயர்ந்தனர். ஆப்கானிஸ்தான் மற்றும் திபெத் பகுதிகளிலும் இந்நிலநடுக்கத்தின் தாக்கங்கள் உணரப்பட்டது. இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia