2022 வட அமெரிக்க குளிர்காலப் புயல் (2022 North American winter storm) காரணமாக ஏற்பட்டுள்ள தொடர் பனிப்பொழிவு, இடைவிடாத மழை மற்றும் குளிர் காற்று காரணமாக அமெரிக்கா முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல அழுத்தம் திடீரென குறைந்ததால் ஏற்பட்ட பனிப்புயல் எதிரொலியாக பனிப்புயலின் தாக்கம் இதுவரை இல்லாத வகையில் கனடாவில் இருந்து வட அமெரிக்க கண்டத்தின் தென்கோடியில் உள்ள இரியோ கிராண்டோ வரையிலும் காணப்படுகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் குவிந்து சாலைகள் மூடப்பட்டன. விமானம், சாலை மற்றும் இரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனிகட்டிகள் குவிந்துள்ளதால் மக்கள் கடும் குளிரால் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கியுள்ளனர். நியூயார்க்கில் உள்ள பஃபலோவில் உள்ள தேசிய வானிலை சேவை நிறுவனம் இப்புயலை "தலைமுறைக்கு ஒருமுறை வரும் புயல்" என்று கணித்துள்ளது.[1][2]
வானிலை வரலாறு
டிசம்பர் 22, 2022 அன்று தேசிய வானிலை சேவை வழங்கிய எச்சரிக்கைகள், அவதானிப்புகள் மற்றும் ஆலோசனைகள்
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று புயல் உருவாகத் தொடங்கியது. வடக்கு சமவெளியில் வலுப்பெற்றது.[3] அடுத்த நாள் இப்புயல் தீவிரமடையத் தொடங்கியது. தி வெதர் சேனல் என்ற தொலைக்காட்சி இது வெடிகுண்டு சூறாவளியாக மாறும் என்று கணித்தது.[4] டிசம்பர் 23 அன்று, தேசிய வானிலை சேவையானது, பனிப்புயல் எச்சரிக்கை எதுவும் விடுக்காத போதிலும், ஓகையோவின்சின்சினாட்டியில் பனிப்புயல் நிலைமைகள் ஏற்பட்டதை உறுதிப்படுத்தியது.[5] புயல் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியதும், அது போர்ட்லேண்டில் உள்ள மைனேக்கு 4 ஆவது அதிக உயர் அலைகளை பதிவு செய்தது.[6] சிறிது நேரத்திற்குப் பிறகு, நியூயார்க் நகரம் மற்றும் நீள் தீவுகளுக்கு கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடப்பட்டது.[7] புயல் பஃபலோ நகரில் சாதனைய்யான ஏரி விளைவு பனியைத் தூண்டியது. முதலில் 1.98 அங்குலம் (மி.மீ) மழை பெய்தது. ஆனால் பின்னர் பனியாக மாறி 43 அங்குலம் (110 செ.மீ) ஆக குவிந்தது. மேலும் பஃபலோவின் 37.25 மணிநேர பனிப்புயல் நிலைமைகள் நகர வரலாற்றில் மிக நீண்ட பனிப்புயலாக பதிவாகியது.[8] மறுநாள், புயலின் பின்னணியில் விட்டுச்செல்லப்பட்ட குளிர்ந்த காற்று, கேப் கோடு தீபகற்பத்திற்கு கடல்-விளைவான பனியைக் கொண்டு வந்தது.[9]
ஒன்றாரியோவில், காற்றின் வேகம் மற்றும் தெரிவுநிலையைத் தெரிவிக்கும் விமான நிலைய வானிலை நிலையங்களில் (சர்னியா, லண்டன், கிச்சனர், டொராண்டோ, ஆமில்டன், செயின்ட் கேத்தரைன்சு, வியர்டன், பீட்டர்பரோ, கிங்சுடன், ஒட்டாவா), வீசும் பனியால் பார்வைத் திறன் பெரிதளவு குறைக்கப்பட்டது.[10] வியர்டன் நகரத்தில் டிசம்பர் 23 அன்று நண்பகல் முதல் இரவு 9:00 மணி வரை பனிப்புயல் நிலை இருந்தது.[11] சாத்தம் நகரத்திலும் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை இந்நிலை நீடித்தது.[12] பெரிய நகரமான செயிண்ட் கேத்தரீன் நகரமும்[13]ஆமில்டன் நகரமும்[14] வெகுவாகப் பாதிக்கப்பட்டன. நயாகரா பிராந்தியத்தின் தெற்குப் பகுதி, போர்ட்டு எரி உட்பட, டிசம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் பனிப்புயல் நிலைகள் அதிகமாக இருந்தன. இதன் விளைவாக ஒரு பிராந்திய அவசர நிலை அறிவிக்கப்பட்டது. பல கார்கள் சாலைகளில் சிக்கிக்கொண்டதால் பனி உழவுகள் உழுவதை நிறுத்திவிட்டன.[15]
புயல் காற்று காரணமாக எரி ஏரியில் ஒரு மேற்பரப்பு அதிர்வு உருவானது. இதன் விளைவாக ஏரியின் மேற்குப் படுகையில் நீர்மட்டம் குறைந்தது.[16]
தயாரிப்புகள்
சனாதிபதி ஜோ பைடன் அமெரிக்கர்களிடம் டிசம்பர் 22, 2022 அன்று, "தயவுசெய்து இந்தப் புயலை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.[17]
டிசம்பர் 21 அன்று, சியார்ச்சியா மாநில கவர்னர் பிரையன் கெம்ப் அவசர நிலையை அறிவித்து பொதுமக்களை எச்சரித்தார்.[18] டிசம்பர் 22 அன்று, தெற்கு டகோட்டா கவர்னர் கிறிசுட்டி நோம் மாநிலத்தில் குளிர்கால புயல் அவசரநிலையை அறிவித்து தேசிய காவலரை செயல்படுத்தினார்.[19]
தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு ஒன்றாரியோவின் ஒரு பெரிய பகுதிக்கு (குறிப்பாக டொராண்டோ மற்றும் கிரேட்டர் கோல்டன் ஆர்ச்சூ உட்பட), தெற்கு நயாகரா பிராந்தியம், சியார்சியா விரிகுடாவின் கிழக்கே உள்ள பகுதிகள் மற்றும் கிங்சுடன் உட்பட ஒன்றாரியோ ஏரியின் கிழக்குப் பகுதிக்கு சுற்றுச்சூழல் கனடா பனிப்புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே சமயம் தெற்கு ஒன்றாரியோவின் எஞ்சிய பகுதிகளுக்கு குளிர்கால புயல் எச்சரிக்கைகள் விடப்பட்டன.[21]
கார் விபத்துக்கள், கிளைகள் விழுதல், மின்கசிவு மற்றும் கார்பன் மோனாக்சைடு நச்சு போன்ற பல காரணங்களால் புயல் தொடர்பான இறப்புகள் நிகழ்ந்தன.[38]
ஓக்லகோமாவில், புயலால் ஏற்பட்ட ஆபத்தான சாலை நிலைகள் பல விபத்துக்களை ஏற்படுத்தி, ஒருவர் உயிரிழந்தார்.[39] கென்டக்கியில் மூன்று பேர் இறந்தனர்; இருவர் கார் விபத்துகளின் விளைவாக இறந்தனர், மற்றவர் "வீடு பாதுகாப்பற்றதாக" இருந்ததால் இறந்தார்.[25] ஓகைய்யோவில் 50 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளானதால் நெடுஞ்சாலையை பல மணி நேரம் மூடிவிட்டு 4 பேர் உயிரிழந்தனர்.[40] நியூயார்க்கின் பஃபலோ பகுதியில் கடுமையான பனிப்புயல் காரணமாக 28 பேர் இறந்தனர். அவர்களில் பலர் திசைதிருப்பப்பட்ட பாதசாரிகள் மற்றும் ஓட்டுநர்கள் இரண்டு நாட்களுக்கும் மேலாக தங்கள் கார்களில் சிக்கினர்.
உள்கட்டமைப்பு
பயண இடையூறுகள்
பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் அனைத்து முறைகளிலும் பரவலான பயண இடையூறுகள் ஏற்பட்டன.
சியாட்டில் பகுதியில், கிங் மாகாண மெட்ரோ மற்றும் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் பனிக்கட்டி சாலை நிலைமைகள் காரணமாக ரத்து செய்யப்பட்டன. சியாட்டில் மைய மோனோரயிலும் நிறுத்தப்பட்டது.[41]