2023 நாக்பூர் வெள்ளம்2023 நாக்பூர் வெள்ளம் (2023 Nagpur Flood) என்பது 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 அன்று இந்திய மாநிலமான மகாராட்டிராவில் உள்ள நாக்பூர் நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிகழ்வாகும். இந்த வெள்ளம் நகரின் பல்வேறு பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற்றியதோடு இறப்புகளையும் பொருளாதார அழிவையும் ஏற்படுத்தியது. காரணம்நாக்பூர் நகரில் 109 மி.மீ கனமழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது, இதனால் நாக் நதி அருகிலுள்ள பகுதிகளில் பெருக்கெடுத்து ஓடியது, வீடுகள், பள்ளிகள் வணிக பகுதிகள் மற்றும் மருத்துவமனைகள் வெள்ளத்தில் மூழ்கின. [1] தவறான திட்டமிடப்பட்ட மழைநீர் வடிகால் அமைப்பு மற்றும் நாக் ஆற்றின் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் ஆற்றின் ஓட்டம் தடைபடுகிறது. [2] கூடுதலாக, அம்பாசாரி ஏரியில் உள்ள ஐகோர்னியா எனப்படும் ஆகாயத் தாமரை வகை களைச் செடியின் வளர்ச்சி நாக் ஆற்றின் குறுக்கே பெரிய வெளியேற்ற புள்ளிகளை தடுப்பதால் வெள்ளத்திற்கு மேலும் பங்களித்தது. [3] பின்விளைவுநான்கு பதிவு செய்யப்பட்ட இறப்புகள் மற்றும் 400 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர் [4] தேசிய பேரிடர் பதில் படை மற்றும் மாநில பேரிடர் பதில் படை உட்பட மீட்பு மற்றும் நிவாரண குழுக்கள் [5] 10000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிட்டுள்ளன. [6] பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ₹10,000 நிவாரண நிதியும், பாதிக்கப்பட்ட வணிக உரிமையாளர்களுக்கு ₹5,00,0000 நிதியும் அறிவிக்கப்பட்டது. [7] நாக் ஆற்றின் மீது ஒரு பாலம் இடிந்து, நகரின் முக்கிய நெடுஞ்சாலையைத் தடுக்கிறது. நாக் ஆற்றின் தடுப்புச்சுவர் பல்வேறு இடங்களில் இடிந்து விழுந்தது. [8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia