2024 லிடோ கடற்கரை தாக்குதல்
2024 லிடோ கடற்கரை தாக்குதல் (2024 Lido Beach attack) என்பது ஆகஸ்ட் 2,2024 அன்று, சோமாலியா தலைநகரான முக்தீசூவில் உள்ள லிடோ கடற்கரையில் அல்-சபாப் என்ற தற்கொலை குண்டுதாரி தாக்கிய நிகழ்வைக் குறிக்கிறது. இந்தத் தாக்குதல் தற்கொலைக் குண்டுவெடிப்புடன் தொடங்கியது, அதைத் தொடர்ந்து ஒரு உணவு விடுதிக்குள் பெருமளவிலான துப்பாக்கிச் சூடு நடந்தது.[2] குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச் சூடு கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு உணவகத்தை உலுக்கியது, அப்பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் குறிவைக்கப்பட்டன. கடற்கரையைப் பார்த்தவாறு உணவருந்தும் உணவு விடுதிக்கு அருகே ஒரு தற்கொலை குண்டுதாரி வெடிபொருளை வெடிக்கச் செய்தார், இதனால் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர். [3][4][5][6] பின்னணிலிடோ கடற்கரை முக்தீசூவில் உள்ள ஒரு பிரபலமான இடமாகும், குறிப்பாக வெள்ளிக்கிழமை இரவுகளில் சோமாலியர்கள் தங்கள் வார இறுதியில் மகிழ்விக்க கூடுகிறார்கள். இந்தப் பகுதி இதற்கு முன்பு அல்-ஷபாப் தீவிரவாதிகளால் குறிவைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மிக சமீபத்திய தாக்குதல் ஜூன் 2023 இல் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.[7] தாக்குதல்வெள்ளிக்கிழமை இரவு மக்கள் மகிழ்ச்சியாக இருந்தபோது நெரிசலான லிடோ கடற்கரையில் தற்கொலை குண்டுதாரியால் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. குண்டுவெடிப்புக்குப் பிறகு, அடையாளம் தெரியாத எண்ணிக்கையிலான அல்-ஷபாப் துப்பாக்கிதாரிகள் கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு உணவகத்தைத் தாக்கி, சீரற்ற முறையில் மக்களை சுட்டுக் கொன்றனர். பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர், சில போராளிகளைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. [8][9] விளைவுவெடிபொருட்கள் நிரம்பிய வாகனத்தை பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர். இந்தத் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 150 பேர் காயமடைந்தனர். தாக்குதலின் போது ஐந்து தாக்குதல்தாரிகள் கொல்லப்பட்டனர், அவர்களில் ஒருவர் தன்னைத்தானே வெடிக்கச் செய்தவர் ஆவார். இவர், மொத்தம் ஆறு தாக்குதல்தாரிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார்.[10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia