2025 இயாஃபர் தொடருந்து கடத்தல்
2025 இயாஃபர் தொடருந்து கடத்தல் (2025 Jaffar Express hijacking) என்பது 2025 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 11 ஆம் தேதியன்று பாக்கித்தான் நாட்டில் நடந்த கடத்தல் நிகழ்வாகும். பாக்கித்தானின் தென்மேற்கு பலுசிசுத்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவிலிருந்து 9 பெட்டிகளில் சுமார் 500 பயணிகளுடன் இயாஃபர் விரைவுத் தொடருந்து, கைபர் பக்துன்வாவில் உள்ள பெசாவருக்கு சென்று கொண்டிருந்த போது இந்நிகழ்வு நடந்தது.[3] இந்தத் தொடருந்து பலுசிசுத்தான் மாகாணம், போலன் மாவட்டத்தின் முசுகாப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது தண்டவாளம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. பாக்கித்தானிடமிருந்து பலூசிசுத்தானுக்கு விடுதலை கோரும் பலுசிஸ்தான் விடுதலைப்படை என்ற கிளர்ச்சிப்படையினர் இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால், தொடருந்து தடம் புரண்டது. தொடருந்தில் துப்பாக்கிகளுடன் ஏறிய கிளர்ச்சிப்படையினர் பயணித்த ஐநூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளையும் பிணைக் கைதிகளாக பிடித்தனர்.[4][5] பின்னணிபலூசிசுத்தான் மாகாணம், குறைந்தபட்சம் 1947 ஆம் ஆண்டு முதல் பாக்கித்தான் அரசாங்கத்திற்கு எதிராக பலூச்சு பிரிவினைவாதிகள் மற்றும் இசுலாமிய போராளிக் குழுக்களால் கிளர்ச்சிகள் மற்றும் மோதல்களில் ஈடுபட்டுள்ளது.[6][7] இந்தப் பகுதி மிகவும் வறுமை மற்றும் வளர்ச்சியடையாத உள்கட்டமைப்பைக் கொண்டுள்ளது. 2001 ஆம் ஆண்டு முதல், இங்குள்ள ஆயுதக் குழுக்கள், பிற மாகாணங்களுக்கு பயனளிக்கும் என்று அவர்கள் நம்பும் பிராந்தியத்தில் ஏற்படும் பெரிய வளர்ச்சியைத் தடுக்க பல்வேறு தொடர் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றன.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia