இசுக்கொட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு, 2014இசுக்கொட்லாந்து விடுதலை பெற்ற தனிநாடாக இருக்க வேண்டுமா என்பதைக் கண்டறிவதற்கான பொது வாக்கெடுப்பு 2014 செப்டம்பர் 18 வியாழக்கிழமை நடைபெற்றது.[1] மொத்தம் 55.3% மக்கள் விடுதலைக்கு எதிராக வாக்களித்தனர்.[2] இசுக்கொட்லாந்தில் மொத்தமுள்ள 32 பிரதேசங்களில் டண்டி, கிளாஸ்கோ, நார்த் லங்கன்ஷெர் மற்றும் வெஸ்ட் டன்பர்ட்டன்ஷெர் ஆகிய நான்கு பிரதேசங்களில் ஆதரவாகவும், மீதமுள்ள பிரதேசங்களில் எதிராகவும் வாக்குகள் பதிவாகின.[3] இசுக்கொட்லாந்து அரசுக்கும், ஐக்கிய இராச்சிய அரசுகளுக்கும் இடையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன்பாடு ஒன்றின் படி,[4] ஸ்காட்லாந்து விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு சட்டமூலம் 2013 மார்ச் 21 இல் ஸ்காட்லாந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு,[5] 2013 நவம்பர் 14 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. 2013 டிசம்பர் 17 இல் இச்சட்டம் பிரித்தானிய முடியாட்சியால் அங்கீகாரம் பெற்றது.[6] ஐக்கிய இராச்சியத்தின் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, பொது வாக்கெடுப்பிற்கான கேள்வி "ஸ்காட்லாந்து, விடுதலை பெற்று தனிநாடாவதா?" என்பதாகும். வாக்காளர்கள் ஆம் என்றோ இல்லை என்றோ தெரிவிக்க வேண்டும்.[7] ஸ்காட்லாந்தின் குடியுரிமை உள்ள 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் (4 மில்லியனுக்கும் அதிகமானோர்) இவ்வாக்கெடுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். விடுதலைக்கான ஆதரவுக்கு சாதாரண பெரும்பான்மை (50% + 1 நபர்) மட்டுமே போதுமானது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia