இடைக்காலத் தமிழ்

தஞ்சாவூர் தமிழ்க் கல்வெட்டு

இடைக்காலத் தமிழ் (Middle Tamil) என்பது 8ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரை இருந்த தமிழின் வடிவமாகும். பழந்தமிழிலிருந்து இடைக்காலத் தமிழ் பொதுவாக 8 ஆம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படுகிறது. [1] பழந்தமிழுடன் இலக்கணம், கட்டமைப்பு தொடர்ச்சியைப் பேணினாலும், பல ஒலியியல் மற்றும் இலக்கண மாற்றங்கள் ஏற்ப்பட்டன. ஒலியியல் அடிப்படையில், மிக முக்கியமான மாற்றங்கள் ஆயுதம் (ஃ) ஒலியன் அடிப்படையில் மெய்நிகரில் காணாமல் போனது. [2] பல்லீற்றொலி மற்றும் நாசி ஒலி ஒருங்கிணைப்பு, [3] மற்றும் பல்லீற்றொலி வெடிப்பொலி போன்றவை மாற்றம் பெற்றன. [4]

இடைக்காலத் தமிழின் துவக்ககால தமிழானது தற்காலத் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளுக்கும் மூதாதையாகும். [5] இரு மொழிகளும் இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த பல பொதுவான அம்சங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, பழந்தமிழில் கள் (kaḷ) என்ற விகுதியோடு முதல் மற்றும் இரண்டாவது நபர் பன்மை பிரதிபெயர்கள் இருக்கவில்லை. கள் (kaḷ) என்ற அந்த விகுதி இடைக்காலத் தமிழின் துவக்ககாலக் கட்டத்தில் தோன்றியது: [6]

மொழி பன்மை பிரதிபெயர்கள்
பழந்தமிழ் யாம், நாம், நீர், நீவீர்
இடைக்காலத் தமிழ் நாங்கள், நாம், நீங்கள், எங்கள்
மலையாளம் ñaṅṅaḷ, nām, niṅṅaḷ, nammaḷ

உண்மையில், மலையாள கேட்பொலியியக்க இயல்புகளில் பெரும்பாலான அம்சங்கள் இடைக்காலத் தமிழின் துவக்ககாலத் தமிழுடன் தொடர்புடைய பேச்சு வழக்கத்திலிருந்து வந்தவை. [7]

பல்லவ ஆட்சிக் காலத்திலிருந்து, சமசுகிருத்ததிலிருந்து பல சொற்கள் தமிழில் நுழைந்தன, குறிப்பாக அரசியல், சமயம், மெய்யியல் தொடர்பான சொற்கள் நுழைந்தன. [8]

தமிழின் எழுத்து வடிவங்கள் பல ஆண்டுகளாக வளர்ந்துள்ளன. [9] இடைக்காலத் தமிழ் எழுத்துமுறையும் மாறியது. தமிழ் பிராமி மற்றும் வட்டெழுத்து ஆகியவை பழந்தமிழ் கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்ட முக்கிய எழுத்துகளாகும். இருப்பினும், 8 ஆம் நூற்றாண்டிலிருந்து, பல்லவர்கள் சமசுகிருதத்தை எழுதப் பயன்படுத்திய பல்லவ கிரந்த எழுத்துமுறையிலிருந்து வந்த ஒரு புதிய எழுத்துமுறையைப் பயன்படுத்தத் தொடங்கினர். [10]

இடைக்காலத் தமிழின் பல கல்வெட்டுகள், சமயச்சார்பற்ற மற்றும் சமய இலக்கியங்களின் குறிப்பிடத்தக்க அளவுக்கு சான்றாக உள்ளன. [11] பக்தி இயக்கக் கவிஞர்களின் சமயக் கவிதைகள், பாடல்கள், சைவம் குறித்த தேவாரம் மற்றும் வைணவம் குறித்த திவ்யப் பிரபந்தம், [12] மற்றும் கம்பர் இயற்றிய 12 ஆம் நூற்றாண்டு தமிழ் ராமாயணம் மற்றும் 63 நாயன்மார்களின் கதையைக் கூறும் பெரியபுராணம் போன்ற சமயப் புராணத் தழுவல்கள் ஆகியவை இதில் அடங்கும். [13] காதல் கவிதைகள் பற்றிய இலக்கணமான இறையனார் அகப்பொருள், இலக்கியத் தமிழின் நிலைத்த இலக்கணமாக மாறிய 12 ஆம் நூற்றாண்டின் இலக்கண நூலான நன்னூல் ஆகியவையும் இடைக்காலத் தமிழைச் சேர்ந்தவை. [14] பழந்தமிழ், இடைக்காலத் தமிழ், நவீன தமிழ் ஆகியவற்றுக்கு இடையே குறிப்பிடத்தக்க அளவு இலக்கண, தொடரியல் மாற்றம் இருந்தபோதிலும், தமிழ் இந்த நிலைகளில் இலக்கணத் தொடர்ச்சியை நிரூபிக்கிறது: மொழியின் பிற்கால நிலைகளின் பல பண்புகள் பழந்தமிழின் அம்சங்களின் வேர்களையும், தொடர்ச்சியையும் கொண்டுள்ளன. [1]

என்ற புகழ்பெற்ற பழமொழி ஒன்று உண்டு

' திருவாசகத்தில் இதயம் உருகாதவர் வேறு எந்த வாசகத்தாலும் உருக மாட்டார்கள் என்பது இதன் பொருள். திருவாசகம் இடைக்காலத் தமிழ் ஆளுமையான மாணிக்கவாசகரால் இயற்றப்பட்டது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Lehmann 1998
  2. Kuiper 1958
  3. Meenakshisundaran 1965
  4. Kuiper 1958
  5. Ayyar, Ramaswami (1936). The Evolution of Malayalam Morphology (1st ed.). Cochin, Kerala: Cochin government press. p. 1-37.
  6. Ayyar, Ramaswami (1936). The Evolution of Malayalam Morphology (1st ed.). Cochin, Kerala: Cochin government press. p. 35-37.
  7. Ayyar, Ramaswami (1936). The Evolution of Malayalam Morphology (1st ed.). Cochin, Kerala: Cochin government press. p. 2.
  8. Meenakshisundaran 1965
  9. Meenakshisundaran 1965
  10. Mahadevan 2003
  11. Meenakshisundaran 1965
  12. Varadarajan 1988
  13. Varadarajan 1988
  14. Zvelebil 1992
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya