இந்திய செஞ்சிலுவைச் சங்கம்
இந்திய செஞ்சிலுவைச் சங்கம் (Indian Red Cross Society, IRCS) என்பது இந்தியாவில் வாழும் மனித வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் ஒரு தன்னார்வ மனிதாபிமான அமைப்பு.[1] இது சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை இயக்கத்தின் ஒரு பகுதியாகும், எனவே சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பகிர்ந்து கொள்கிறது. பேரழிவுகள்/அவசர காலங்களில் நிவாரணம் அளிப்பது, பாதிக்கப்படக்கூடிய மக்கள், சமூகங்களின் ஆரோக்கியம், பராமரிப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதே இச்சங்கத்தின் நோக்கம். இந்தியா முழுவதும் 700 க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது.[1] பிற சர்வதேசச் செஞ்சிலுவை சங்கங்களுக்குரிய பொதுவான முத்திரையை இந்தியச் செஞ்சிலுவை சங்கமும் பயன்படுத்துகிறது. 1920ஆம் ஆண்டில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தொடக்கத்திலிருந்து தன்னார்வத் தொண்டு, இளைஞர், இளைய தன்னார்வத் திட்டங்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.[2] இந்த சங்கம் இந்தியாவின் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் உடன் நெருக்கமான தொடர்புடையது. வரலாறு![]() முதல் உலகப் போரின்போது இந்தியாவில் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கான நிவாரண சேவைகள் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ், பிரித்தானிய செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டுப் போர் குழுவின் கிளையால் வழங்கப்பட்டது. 3 மார்ச் 1920 அன்று, இந்திய சட்டமன்றத்தில் சர் கிளாட் ஹில் ( வைசிராயின் நிர்வாக கவுன்சில் உறுப்பினர், இந்தியாவில் கூட்டுப் போர் குழுவின் தலைவராகவும் இருந்தார்), இந்திய செஞ்சிலுவைச் சங்கம், பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரமாக உருவாக்கப்பட்டது. இந்த மசோதா இந்திய செஞ்சிலுவைச் சங்கச் சட்டம், 1920 மார்ச் 17, 1920 இல் நிறைவேற்றப்பட்டது, மேலும் 20 மார்ச் 1920 அன்று கவர்னர் ஜெனரலின் ஒப்புதலுடன் 1920 ஆம் ஆண்டு நாடாளுமன்ற சட்டம் XV [3] 7 ஜூன் 1920இல் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தை கூட்டுப் போராட்டக் குழுவின் இந்திய கிளையின் உறுப்பினர்களிடமிருந்து ஐம்பது உறுப்பினர்கள் முறையாக நியமிக்கப்பட்டனர்.[3] சர் வில்லியம் மால்கம் ஹெய்லி தலைவராக முதல் நிர்வாக குழு அவர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. போருக்குப் பின்1947ஆம் ஆண்டில் சில ஐஆர்சிஎஸ் சொத்துக்கள் பாகிஸ்தான் செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பிக்க வழங்கப்பட்டன. இப்போது அது பாகிஸ்தான் செம்பிறைச் சங்கம் என வழங்கப்படுகின்றது. ஐஆர்சிஎஸ் -ஐ நிர்வகிக்கும் சட்டம் கடைசியாக இந்திய செஞ்சிலுவைச் சங்கம் (திருத்தம்) மசோதா, 1992 -ல் திருத்தப்பட்டது.[1][3] அமைப்பு
இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் செயலாளர் நாயகங்களின் பட்டியல்
இதையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia