இந்திய வான்படையின் ஏஎன்-32 காணாமல்போனமை, 2016
வானூர்தி நிலையங்களின் ஆரம்ப, இறுதி இடங்கள் 2016 சூலை 22 அன்று இந்திய வான்படையின் அன்டனோவ் ஏஎன்-32 வானூர்தி ஒன்று 29 பேருடன் அந்தமான் நிக்கோபாரின் பிளேர் துறையை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது வங்காள விரிகுடாப் பகுதியில் காணாமல் போனது. சென்னையில் இருந்து 280 கிமீ கிழக்கே காலை 9:12 மணிக்கு இவ்வானூர்தி ரேடாரில் இருந்து மறைந்தது.[2][1] பயணிகள்இவ்வானூர்தியில் 6 பணியாளர்கள், 12 வான்படை வீரர்கள், ஒரு கடற்படை, ஒரு எல்லைக் காவல்படை, ஒரு தரைப்பட வீரர்கள், மற்றும் 8 பொதுமக்கள் உட்பட மொத்தம் 29 பேர் இருந்துள்ளனர்.[3][4] 8 பொதுமக்களும் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.[5] மீட்புப் பணிகள்இந்தியக் கடற்படையினர் தேடல், மற்றும் மீட்புப் பணிகளை ஆரம்பித்துள்ளனர். நீருக்கடியில் சமிக்கைகளை அறிவதற்காக நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, 12 கப்பல்கள், 2 டோர்னியர் வானூர்திகள் ஆகியன தேடல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia