இரகி சீவன் சர்னோபட்டு
இரகி சீவன் சர்னோபட்டு (Rahi Jeevan Sarnobat) ஓர் இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கனையாவார். இவர் 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி பிறந்தார். 25 மீட்டர் கைத்துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 2013 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பன்னாட்டு துப்பாக்கி சுடுவோர் கூட்டமைப்பு நடத்திய உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன் பட்டப் போட்டியில் இவர் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 2019ஆம் ஆண்டு செருமனியின் முனிச் நகரத்தில் நடந்த பன்னாட்டு துப்பாக்கி சுடுவோர் கூட்டமைப்பு உலகக் கோப்பை வெற்றியின் மூலம் 2021ஆம் ஆண்டு டோக்கியோ கோடைகால ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார். ஆசிய விளையாட்டு மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை இவர் வென்றுள்ளார்.[1] தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணிஇந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள கோலாப்பூரில் சர்னோபட் பிறந்தார். பள்ளி நாட்களில் தேசிய மாணவர் படை பயிற்சியின் ஒரு பகுதியாக துப்பாக்கிகளுக்கு அறிமுகமானார். சிறுவயதிலிருந்தே துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதில் தனது இயற்கையான திறன்களை வெளிப்படுத்தினார்.[2] 2006ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தனது பள்ளியைச் சேர்ந்த யசாசுவினி சாவந்த் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதை கவனித்தபின், சர்னோபட்டின் கவனம் தீவிரமாக துப்பாக்கிச்சுடுதல் பக்கம் திரும்பியது. சர்னோபட் முதன்முறையாக ஒரு துப்பாக்கியை எடுத்தபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்து அதுவே தனது வாழ்க்கையின் நோக்கம் என்று உணர்ந்தார்.[2] துப்பாக்கிச்சுடுதல் பயிற்சியை தொடங்கிய ஆரம்ப நாட்களில், சர்னோபட்டு தனது சொந்த ஊரான கோலாப்பூரில் போதிய உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் இல்லாததை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே மும்பையில் பயிற்சி பெற முடிவு செய்தார்[2] சாதனைகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia