இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதிதுரைராஜா (எ) முத்துராமலிங்க சேதுபதி அல்லது இரண்டாம் முத்துராமலிங்க சேதுபதி (கி.பி. 1841 - 1873) என்பவர் இராமநாதபுரம் ஜமீனின் ஜமீந்தார் ஆவார். இவர் இராணி பர்வதவர்த்தனி நாச்சியாரால் தன் வாரிசாக நியமிக்கப்பட்டவராவார். இவர் இராணி பர்வதவர்த்தனி நாச்சியாரின் தங்கையான வீராயி என்பவரின் மகன் ஆவார். வாரிசாக நியமிக்கப்படுதல்இராணி பர்வதவர்த்தனி நாச்சியார் 24. மே 1847இல் தனது வாரிசாக முத்துராமலிங்க சேதுபதியை ஏற்றிருந்தார். ஐந்து வயது பாலகரான முத்துராமலிங்கத்தை இராணி பர்வதவர்த்தனி நாச்சியார் தனது மகனாகவும். இராமநாதபுரம் சீமை மன்னராகவும் ஏற்றுக்கொண்ட பொழுதிலும், இராணியாரது உறவினர்களும், ஆங்கிலக் கம்பெனியாரும், அவரது நியமனத்தை அங்கீகரிக்கவில்லை. தங்களது ஒப்புதல் இல்லாமல் இந்தச் சிறுவனது சுவீகாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதால் அதனை அவர்கள் ஆட்சேபணை செய்து பல வழக்குகளை மதுரை, சென்னை வழக்கு மன்றங்களில் தாக்கல் செய்தனர். இறுதியாக மன்னரது சார்பாக இங்கிலாந்து நாட்டு லண்டன் மாநகரப் பிரிவி கவுன்சில் அளித்த சாதகமான தீர்ப்பினைக் கொண்டு இளைஞர் முத்துராமலிங்கம் சேது நாட்டின் மன்னராக அங்கீகரிக்கப்பட்டார். வாழ்கைக் குறிப்புஇந்த மன்னர் இளமைக்காலத்தில் அரசியல் அலுவல்களில் சிறிதும் அக்கறை இல்லாதவராக இருந்து வந்தார். ஆனால் அதே சமயம் இவர் இயல் தமிழின் இலக்கண, இலக்கியங்களிலும், இசைத் தமிழின் இராகம், மேளம் ஆகியவைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்தார். அன்றைய தமிழ்ப்புலவர்கள் இவரை ‘நிமிசகவி’ என அழைத்தனர். நிமிட நேரத்தில் சிறந்த தமிழ்க் கவிதை ஒன்றை இலக்கண முறைப்படி இயற்றி முடிக்கும் தன்மை வாய்ந்த காரணத்தால், இவருக்கு இந்தப் பெயர் வழங்கப் பெற்றது. முந்தைய சேது மன்னர்கள் இராமேஸ்வரம் இராமநாதசுவாமியிடம், பக்தியும் ஈடுபாடும் கொண்டிருந்தனர். ஆனால் இவர் முருகன் மீது குறையாத பக்தி கொண்டவராக இருந்தார். மேலும் முருகனைத் தவிர வேறு தெய்வம் இல்லை என வாதிட்டும் வந்தார். இவர் இயற்றிய 7 சிற்றிலக்கியங்களில் மூன்று முருகனைப் பற்றியது ஆகும். வள்ளி மணமாலை', ‘சரசசல்லாப மாலை', ‘சடாக்கரப் பதிகம்’ என்பன அவை. இவரது பிற படைப்புக்கள் பாலபோதம், நீதிபோதம் என்பனவாகும். ஏறத்தாழ 1000 பாடல்கள் இவர் இயற்றியுள்ளார். மேலும் ஏராளமான தமிழ் இசைப்பாடல்களையும், பிறமொழிப் பாடல்களையும் இவரே இயற்றியுள்ளார். அவை, காயகப்பிரியா, ரசிகரஞ்சனம் என்ற இரு தொகுப்புக்களாக 1860இல் அச்சில் வெளிவந்துள்ளன. இயற்றிய இலக்கியங்கள்[1]
தனிப்பாடல்கள்
தமிழ்ப் பணிகள்
இறப்புஇவருக்கு பாஸ்கர, தினகர் என்ற இரண்டு ஆண் மக்களும், இராணி பானுமதி என்ற பெண் மகளும் இருந்த நிலையில் தமது 32-வது வயதில் கி.பி. 1873-ல் காலமானார்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia