இராத்து அக்கேலி ஏய் (2020 இந்தி திரைப்படம்)
இராத்து அக்கேலி ஏய் (தமிழாக்கம்: இரவு தனிமையானது) 2020 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய இந்தி மொழித் திகில் திரைப்படம் ஆகும்.[1] இது ஒரு நெட்பிளிக்சு பிரத்யேகத் திரைப்படம். கதைக்கருசெல்வந்தர் இரகுவீர் சிங்கின் கொலையை விசாரிக்கச் செல்லும் நேர்மையான காவல் அதிகாரி சடில் யாதவ், இரகுவீரின் இரண்டாம் மனைவி இராதாவின் மீதான காதலுக்கும் அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களால் ஏற்படும் குழப்பத்திற்கும் நடுவே கொலையாளி யார் என்று கண்டுபிடிப்பாரா என்கிற நோக்கில் கதை நகர்கிறது.[2] நடிகர்கள்
இத்திரைப்படத்தில் சுவேதா திரிபாதி, திக்கமன்சு தூலியா, சிவானி இரகுவன்சி, ஆதித்யா சிரீவசுட்டவா, இலா அருண் மற்றும் பத்மாவதி இராவ்வு ஆகியோரும் நடித்திருந்தனர்.[3] தயாரிப்பு மற்றும் வெளியீடுஇத்திரைப்படத்தை உத்தரப் பிரதேசத்தின் இலக்னோ மற்றும் கான்பூர் ஆகிய இடங்களில் படமாக்கினர்.[4] இத்திரைப்படம் நெட்பிளிக்சின் பிரத்யேகத் திரைப்படமாக 31 சூலை 2020 அன்று வெளியானது. வரவேற்புஎன்டிடிவியின் சைபல் சட்டர்சி இத்திரைப்படத்திற்கு ஐந்துக்கு நான்கு மதிப்பெண்கள் கொடுத்தார். [5] இந்தியன் எக்சுபிரசின் சுபுரா குப்தா ஐந்துக்கு மூன்று மதிப்பெண்கள் அளித்தார். [6] ஐ. எம். டி. பி இணையத்தளத்தில் இத்திரைப்படத்திற்கு பத்துக்கு ஏழுப்புள்ளி மூன்று மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.[7] ஒலிப்பதிவு
மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia