ஈவா துயர்த்தே கோப்பைஈவா துயர்த்தே கோப்பை (Copa Eva Duarte) என்பது எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட கால்பந்துப் போட்டியாகும்; இது லா லீகா வெற்றியாளருக்கும் கோபா டெல் ரே வெற்றியாளருக்கும் இடையே நடத்தப்பட்டது. 1940-இல் இப்போட்டி வாகையர் கோப்பை - Copa de Campeones என்ற பெயருடன் இருந்தது; ஆனால், 1945 வரை நடத்தப்படவில்லை. 1945-இல் அர்ஜென்டினாவின் தூதர் எசுப்பானிய இராணுவ அரசுடன் இருந்த நல்லுறவின் சின்னமாக கோபா டி ஓரோ அர்ஜென்டினா ("Copa de Oro Argentina") என்ற கோப்பையை பரிசளித்தார், அதன்பின்னர் போட்டிகள் நடத்தப்பட்டன.[1] ஆயினும், இவை அதிகாரபூர்வமான போட்டிகள் அல்ல. 1947-ஆம் ஆண்டில் கோபா ஈவா துயர்த்தே டி பெரோன் ("Copa Eva Duarte de Perón") என்று அதிகாரபூர்வமாக எசுப்பானிய கால்பந்துக் கூட்டமைப்பினால் போட்டி ஆரம்பிக்கப்பட்டது; இது ஆண்டுக்கொரு முறை நடத்தப்படும் வண்ணம் செயல்பட்டது. செப்டம்பர்-திசம்பர் மாதங்களுக்கிடையே இப்போட்டி நடத்தப்பட்டது; இறுதிப் போட்டி ஒற்றைப் போட்டியாக நடத்தப்பட்டது. இக்கோப்பையே தற்போதைய எசுப்பானிய உன்னதக் கோப்பைக்கு முன்னோடியாகும். ஈவா துயர்த்தே கோப்பைக்கு முன்னோடிகள்
ஆண்டுவாரியாக ஈவா துயர்த்தே கோப்பை வெற்றியாளர்கள்
* 1952 மற்றும் 1953-ஆகிய இரு ஆண்டுகளில் லா லீகா மற்றும் கோபா டெல் ரே ஆகிய இரண்டையும் வென்றதால் பார்சிலோனா அணிக்கு ஈவா துயர்த்தே கோப்பை வழங்கப்பட்டது. அணிகள் வென்ற ஈவா துயர்த்தே கோப்பைப் பட்டங்கள்
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia