எத்தியோப்பியன் ஏர்லைன்சு வானூர்தி 302
எத்தியோப்பியன் ஏர்லைன்சு வானூர்தி 302 (Ethiopian Airlines Flight 302) என்பது 2019 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் நாள் நடந்த வான் விபத்து ஆகும். எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் 302 (போயிங் - 737 இரக விமானம்) எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபாவில் இருந்து கென்யா நாட்டின் தலைநகரான நைரோபி நோக்கி சென்ற போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 149 பயணிகளும், 8 விமானப் பணியாளர்களுமாக 157 பேர் உயிரிழந்துள்ளனர்.[1][2] இந்த விமானம் காலை 8.38 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. புறப்பட்ட 6 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்தது. பிசாப்டூ என்ற நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானதாக எத்தியோப்பியா விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.[3] இந்த விபத்தில் கென்ய நாட்டைச் சேர்ந்த 32 பேர், எத்தியோப்பியாவைச் சேர்ந்த 9 பேர், சீனா, இத்தாலி, அமெரிக்காவைச் சேர்ந்த தலா 9 பேர், பிரான்சு, இங்கிலாந்தைச் சேர்ந்த தலா 7 பேர், எகிப்து நாட்டைச் சேர்ந்த 6 பேர், நெதர்லாந்தைச் சேர்ந்த 5 பேர், இந்தியாவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia