ஏ சைலன்ட் வாய்சு (சப்பானியம்-காஞ்சி: 映画 聲の形) (தமிழ்: கோய் னோ கத்தாச்சி - அமைதிக்குரல்) 2016 இல் வெளிவந்த ஒரு சப்பானியஅனிமே திரைப்படமாகும்.
கதைக்கரு
காதுகேளாத சிறுமியான சோக்கோ நிசிமியா, இடைநிலைபள்ளியில் பயிலும் போது சகமாணவன் சோயா இசிதாவால் கொடுமைப் படுத்தப்படுகிறாள். விளையவாக, நிசிமியா பள்ளியை விட்டுச்செல்ல, சகமாணவர்களால் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்படுகிறான் இசிதா. நண்பர்களே இல்லாமல் தனிமையில் நாட்களை நகர்த்தி வாழ்க்கையை வெறுக்கிறான்.
சில ஆண்டுகள் கழித்து, தற்போது உயர்நிலைப்பள்ளியில் பயிலும் இசிதா தற்கொலை முயற்சி செய்து தோற்றுவிடுகிறான். இறுதியாக நிசிமியாவைச் சந்தித்து மன்னிப்பு கோர விழைபவனை நிசிமியா மன்னித்தாளா இசிதாவின் வாழ்க்கையைச் சூழ்ந்திருந்த தனிமை விலகியதா என்பது கதை.
குரல் கொடுத்தவர்கள்
சோயோ இசிதா (石田 将也)
என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் மியு இரினோ[3]
கழிவிரக்கம் கொள்ளும் ஒரு உயர்நிலை மாணவனாக இந்த கதாப்பாத்திரம் உள்ளது.
சோக்கோ நிசிமியா' (西宮 硝子)
என்கிற கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் சவோரி அயாமி
இசிதா என்ற கதாப்பாத்திரத்தால் கொடுமைப் படுத்தப்படுவதும், பின்னால் மன்னிப்பு கேட்டு வருபவனை எதிர்கொள்வதுமான இந்த கதாப்பாத்திரம் ஒரு காதுகேளா மாற்றுத்திறனாளியாக உள்ளது.
தயாரிப்பு
இதே பெயரில் 2014 ஆம் ஆண்டு வெளியான மங்கா தொடரின் அனிமே வடிவமே இந்தத் திரைப்படம்.[4] 2015 ஆம் ஆண்டு வெளியான சோனென் பத்திரிக்கை, கியோட்டோ அனிமேசன் இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும் நாவுக்கோ யமடா இயக்க இருப்பதாகவும் அறிவித்தது.[5] இத்திரைப்படத்தின் முகப்புப்பாடல் கோய் வோ சீட்டா நோ வாவை ஐக்கோ பாடினார். இத்திரைப்படத்தை ஆங்கில மொழிமாற்றம் செய்யும்போது காதுகேளா மாற்றுத்திறனாளி நடிகையான எலெக்சி கௌடென் நிசிமியாவின் கதாப்பாத்திரத்திற்கு குரல் கொடுத்தார்.[6]