ஏண்டிக் மகளிர் கல்லூரி
ஏண்டிக் மகளிர் கல்லூரி என்பது கவுகாத்தி பல்கலைக்கழகத்தினுடன் இணைவு பெற்ற ஒரு கல்லூரி ஆகும். [1] இது இந்திய மாநிலமான அசாமில் அமைந்துள்ள பழமையான கல்லூரிகளில் ஒன்றாகும். இங்கு கலை மற்றும் அறிவியலில் இளங்கலை படிப்புகள் வழங்கப்படுகிறது. வரலாறுஇக்கல்லூரி துவக்கத்தில் பன்பஜார் மகளிர் உயர்நிலைப் பள்ளியாக வேர்கொண்டு இருந்தது. பின்னர், அண்டிக் மகளிர் கல்லூரி 1939 ஆம் ஆண்டு கவுகாத்தி மகளிர் கல்லூரியாக நிறுவப்பட்டது. திருமதி ராஜபால தாஸ் கல்லூரியின் நிறுவனர் முதல்வர் ஆவார். இந்த கல்லூரி துவக்கத்தில் கவுகாத்தி நகரின் பன்பஜார் பகுதியில் அமைந்திருந்தது. 1940 இல் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, கல்லூரி அண்டிக் மகளிர் கல்லூரி என பெயர் மாற்றப்பட்டது (குறிப்பிடப்பட்ட கொடையாளியான ஆர். கே. அண்டிக்கின் நினைவாக பெயரிடப்பட்டது), மேலும் கல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது. 1948 இல் கௌகாத்தி பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து கல்லூரி கௌகாத்தி பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றது [2] கல்லூரி முதல்வர்கள்கல்லூரியில் பதினொரு முதல்வர்கள் பணியாற்றி உள்ளனர்: [2]
கல்லூரி வளாகம்குவஹாத்தியில் திகாலிபுகுரி குளத்தின் மேற்குக் கரையில் இந்தக் கல்லூரி அமைந்துள்ளது. [2] தற்போதைய வளாகம் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. எதிர்கால விரிவாக்கத்திற்காக அசாம் அரசு கூடுதலாக நான்கு ஏக்கர் நிலத்தை கல்லூரிக்காக ஒதுக்கீடு செய்துள்ளது. [2] கல்லூரி மாணவர்கள் தங்கி பயில்வதற்காக அமைக்கபட்டுள்ள நிர்மல் ப்ரோவா போர்டோலோய் விடுதி திகாலிபுகுரி குளத்தின் கிழக்குப் பகுதியில் அதாவது கல்லூரி வளாகத்திற்கு எதிரே அமைந்துள்ளது. [3] இந்த மாணவர் விடுதியானது விடுதி காப்பாளர் மற்றும் பிற பணியாளர்களுக்கான கூடுதல் குடியிருப்பு வளாகத்துடன் கூடிய மூன்று மாடி கட்டடமாக உள்ளது. [3] துறைகள்இந்தக் கல்லூரியானது பதினெட்டு துறைகளைக் கொண்டதாக உள்ளது. அதில் பெரிய மற்றும் பொதுப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. [4] இக்கல்லூரி கலை மற்றும் அறிவியல் பீடங்களில் உயர் பட்டப்படிப்பு வரையிலான படிப்புகளை வழங்குகிறது. [5] பயிற்று மொழியாக ஆங்கிலம் உள்ளது. இருப்பினும், அசாமிய மொழியும் ஆங்கிலத்திற்கு துணையாகப் பயன்படுத்தப்படுகிறது. தேசிய கல்வி முறைக்கு இணங்க, அசாம் மாநிலத்தில் 10+2+3 அமைப்பு பின்பற்றப்பட்டு. 1984-85 கல்வி ஆண்டில் இருந்து மூன்றாண்டு பட்டப்படிப்பு (TDC) அறிமுகப்படுத்தப்பட்டது. [5] கல்லூரியில் வழங்கப்படும் படிப்புகள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு: [4] சங்கங்கள்கல்லூரியில் செயல்பட்டு வரும் சங்கங்களின் பட்டியல் பின்வருமாறு: [6]
விழாக்கள்கல்லூரி ஆண்டு அமர்வின் போது இரண்டு முக்கிய விழாக்களைக் கொண்டாடப்படுகிறது: [3]
மாணவர் சங்கம்அண்டிக் மகளிர் கல்லூரி மாணவர் சங்கம் என்பது கல்லூரி மாணவிகளின் பேரவை ஆகும். கல்லூரியில் சேரும் ஒவ்வொரு மாணவியரும் அதன் உறுப்பினராக கட்டாயம் இருபார்கள். சங்கத்தின் நிர்வாகிகள் ஆண்டுதோறும் தேர்தல் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாணவர் சங்கமானது மாணவர்களிடையே விளையாட்டு, விவாதம், பண்பாட்டு நிகழ்வுகள், சமூக சேவை போன்ற பல்வேறு செயல்பாடுகளை ஏற்பாடு செய்கிறது. மாணவர்களின் திறன்களை வளர்க்கும் ஊடகமாக ஆண்டுதோறும் இதழ்களை வெளியிடுகிறது. [6] குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவிகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia