கண்டியூர் ஸ்ரீ மகாதேவர் கோயில்
கண்டியூர் ஸ்ரீ மகாதேவர் கோயில் (Kandiyoor Sree Mahadeva Temple) என்பது கேரளாவிலுள்ள மிகப் பழமையான சிவன் கோவில் ஆகும். கண்டியூருக்கு அருகே உள்ள அச்சன்கோவில் ஆற்றங்கரையில் உள்ள மாவேலிக்கரை என்னும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. கண்டியூர் ஒரு காலத்தில் ஓடநாடு ராச்சியத்தின் தலைநகராக விளங்கியது.[2]கோயிலும் இப்பகுதியும் கேரளாவின் பண்டைய பௌத்த வரலாற்றோடு தொடர்புடையவையாகும். (சிவ நாடா) என்றும் அழைக்கப்படும் மட்டம் ஸ்ரீ மஹாதேவா கோயில், மாநில நெடுஞ்சாலை 6க்கு வடக்கே மாவேலிகரை நகருக்கு மேற்கே 1 கிலோமீட்டர் (0.62 மைல்) தொலைவில் 7.5 ஏக்கர் (3.0 எக்டர்) பரப்பளவில் பரவியுள்ளது. ![]() ![]() தலபுராணம்கோயிலுடன் தொடர்புடைய பல புராணக்கதைகள் உள்ளன. பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பண்டைய கேரளாவின் 108 பெரிய சிவன் கோவில்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.[3] மற்றொரு புராணத்தின் படி, மார்கண்டேய முனிவரின் தந்தையான மிருகண்டு முனிவர், கங்கையில் நீராடும் போது கிராதமூர்த்தி வடிவத்தில் சிவபெருமானின் சிலையைப் பெற்றார். சிலையை ஒரு புனிதமான மற்றும் பொருத்தமான இடத்தில் வைக்க வேண்டும் என்று அவர் ஒரு மறையுரையைக் கேட்டார். பொருத்தமான இடத்தைத் தேடிய முனிவர், கேரளாவுக்கு வந்து அச்சன்கோவில் கரையில் உள்ள கண்டியூரில் கோயிலை நிறுவினார். மற்றொரு புராணத்தின் படி, சிவபெருமான் பிரம்மாவின் தலையை வெட்டிய இடத்தில் கோயில் அமைந்துள்ளது. கண்டியூர் என்ற பெயர் சிவ சிறீகாந்தனின் பெயரால் வந்தது. பரசுராமர் கோவிலை புதுப்பித்து, தாரணநல்லூர் குடும்பத்திற்கு தந்திரிக உரிமை வழங்கியதாக நம்பப்படுகிறது.[4] தெய்வம்முதன்மை தெய்வமான கண்டியூரப்பன், கிராதமூர்த்தி வடிவத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. இத்தெய்வம் காலையில் தட்சிணாமூர்த்தி, மதியம் உமாமகேசுவரன், மாலையில் கிராதமூர்த்தி எனவும் வழிபடப்படுகிறது. கோயிலின் துணை தெய்வங்களில் விஷ்ணு, பார்வதீசன், நாகராஜா மற்றும் நாகயாட்சி, கோசலா கிருஷ்ணன், சாஸ்தா, சங்கரன், ஸ்ரீகந்தன், வடக்குமநாதன், அன்னபூமேஸ்வரி, கணபதி, சுப்பிரமணியன், மூல கணபதி மற்றும் இந்த கோவிலில் ஆறு சிவலிங்க பிரதிஷ்டைகள் உள்ளன.[5] வரலாறுகேரள வரலாற்றில் கண்டியூர் மற்றும் கோவிலுக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. ராஜசேகர வர்மன் ஆட்சியின் போது கி.பி 823 இல் அதன் தோற்றம் பற்றி ஒரு கல்வெட்டு உள்ளது.[6] கோயில் உருவானது முதல் கொல்ல ஆண்டு அறிமுகமாகும் வரை "கண்டியூரப்தம்" என்ற சகாப்தப் பெயர் இருந்துள்ளது. கண்டியூர் (கண்ணங்கரா பணிக்கர் குடும்பம்) இந்த இடம் பெயர்ந்த சிவன் தான் அருகிலுள்ள நெல் வயல்களில் இருந்து மீட்டெடுக்கப்பட்டு மாவேலிக்கரை ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலுக்கு (புத்தர் சந்திப்பு) அருகில் சமீப காலங்களில் வைக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.[7] 1218 ஆம் ஆண்டு கண்டியூர் கல்வெட்டு (KE 393) ஓடநாட்டின் ராம கோத்த வர்மாவால் கண்டியூர் கோயில் புனரமைக்கப்பட்டதாகவும், கலசம் விழாவில் மூவருக்கும் இடையேயான ஆலோசனைக்குப் பிறகு வேணாட்டின் ரவி கேரள வர்மாவின் மனைவி தேவடிச்சி உன்னி கலந்து கொண்டதாகவும் கூறுகிறது.[8][9] கண்டியூர் காயங்குளம் ராஜாவால் காயங்குளத்துடனும், பின்னர் மார்த்தாண்ட வர்மாவால் திருவிதாங்கூருடனும் இணைக்கப்பட்டது. ஓடநாடு மற்றும் காயங்குளத்திற்கு இடையே நடந்த போரின் போது தோற்கடிக்கப்பட்ட காயம்குளம் அரசன் தனது வாளை கோயிலில் ஒப்படைத்து பின் கதவு வழியாக வெளியேறியதாக நம்பப்படுகிறது. அது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் மூடப்பட்டுள்ளது.[4] 14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட உன்னுநீலி சந்தேசத்தில் இக்கோயில் குறிப்பிடப்பட்டுள்ளது. லலிதா சகஸ்ரநாமம், லலிதா திரிஷதி போன்றவற்றுக்குப் பல பாஷ்யங்களை எழுதிய சமசுகிருத அறிஞர் கண்டியூர் மகாதேவ சாஸ்திரிகள் கண்டியூரில் வாழ்ந்தவர். கோவில் அமைப்புஇக்கோயிலின் முதன்மைக் கடவுள் கண்டியூரப்பன் (கண்டியூர் ஆளும் தெய்வம்) என்று அழைக்கப்படும் சிவன் ஆவார். தெய்வம் கிழக்கு நோக்கி உள்ளது. கருவறை இரண்டு அடுக்குகளைக் கொண்டது. பக்தர்களுக்காக முன்பக்கத்தில் ஒரு மேடையும் உள்ளது, இது போசள பாணியில் உள்ளது. கீழ் அடுக்கு ஓவல் வடிவத்திலும் மேல் அடுக்கு செவ்வக வடிவிலும் இருக்கிறது. 10 அடி (3.0 மீ) கஜபிருஷ்ட பாணி சுவர் சிவனின் பூத கணங்கள்பூத கணங்களால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.[4] இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் தல புராணக் கல் உள்ளது.[10] இதனையும் பார்க்கவும்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia