கேரள கோயில் திருவிழாக்கள்![]() 'கடவுளின் சொந்த நாடு' என்று அழைக்கப்படும் கேரளத்தில் பல இந்து கோவில்கள் உள்ளன. பல கோயில்களில் தனித்துவமான மரபுகள் உள்ளன. பெரும்பாலான கோயில்களில் ஆண்டின் குறிப்பிட்ட நாட்களில் திருவிழாக்களை நடக்கின்றன. கோயில் திருவிழாக்கள் பொதுவாக பல நாட்கள் நடக்கின்றன. இந்த திருவிழாக்களின் பொதுவான பண்பாக விழாவின் துவக்கமாக கோயிலில் கொடியை ஏற்றுவதும், பின்னர் திருவிழாவின் இறுதி நாளில் அது கீழ் இறக்கப்படுவதும் வழக்கம். கேரளத்தின் மிகப்பெரிய திருவிழா திரிபுனிதுரா ஸ்ரீ பூர்நாத்ராயீச கோவிலின் விருச்சிகோல்சம் ஆகும். சில திருவிழாக்களில் பூரம் நடக்கிறது. இவற்றில் மிகவும் பிரபலமானவை திரிச்சூர் பூரம். இது நடக்ககும் கோயில்கள் வழக்கமாக விழாக்களின் ஒரு பகுதியாக குறைந்தது ஒரு ஆடம்பரமான கேப்பரிசன் யானையை கொண்டதாக இருக்கும். கோயிலில் உள்ள உற்சவரின் சிலையானது இந்த யானையின் மேல் ஏற்றி கிராமப்புறங்களைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். ஊர்வலம் கோயிலைச் சுற்றியுள்ள வீடுகளுக்கு அருகில் செல்லும்போது, மக்கள் பொதுவாக அரிசி, தேங்காய் போன்ற பிற பிரசாதங்களை கடவுளுக்கு வழங்குவார்கள். ஊர்வலத்தின்போது பெரும்பாலும் பஞ்சரி மேளம் அல்லது பஞ்ச வாத்தியம் போன்ற பாரம்பரிய இசைக்கருவிகள் இசைக்கப்படும். கேரளத் திருவிழாக்களில் உள்ள பன்முகத்தன்மை அனுபவமானது உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது.[1] முக்கிய கோயில் திருவிழாக்கள்கேரளம் முழுவதும் கொண்டாடப்படும் பொதுவான சமய-கலாச்சார விழாக்கள்:
கேரளத்தின் முக்கிய கோயில் திருவிழாக்கள்: [2]
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia