கால்பந்து கூட்டிணைவுக் கோப்பை
கால்பந்து கூட்டிணைவுக் கோப்பை (Football League Cup), அல்லது பொதுவாக அறியப்படும் கூட்டிணைவுக் கோப்பை (League Cup), ஆனது இங்கிலாந்தின் கால்பந்து கூட்டமைப்புப் போட்டியாகும். எஃப் ஏ கோப்பையைப் போன்றே இதுவும் தோற்றால் வெளியே (ஒற்றை வெளியேற்றம்) முறையில் நடத்தப்படுகிறது. ஆனால் எஃப் ஏ கோப்பையைப் போலன்றி, 2008-09 பருவத்தில் 762 அணிகள் பங்குபெற்றன, இதில் 92 அணிகள் மட்டுமே பங்கேற்கும் - 20 முதன்மை கூட்டிணைவு அணிகளும், இப்போட்டியை நடத்தும் கால்பந்து கூட்டிணைவிலிருந்து 72 அணிகளும் பங்கேற்கும். மேலும் எஃப் ஏ கோப்பையைப் போலன்றி, இதன் அரையிறுதிப் போட்டிகள் இரண்டு கட்டங்களில் நடைபெறுகிறது. அதில் வெற்றிபெறுவோர், கூட்டிணைவு அட்டவணைப்படி யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவுக்கு தகுதிபெறவில்லையெனில், யூஈஎஃப்ஏ யூரோப்பா கூட்டிணைவுக்குத் தகுதிபெறுவர். அங்ஙனம் அரையிறுதியில் வெற்றிபெற்றவர் யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவுக்கு தகுதிபெற்றிருந்தால், ஐரோப்பியப் போட்டிகளுக்குத் தகுதிபெறாமல் கூட்டிணைவுப் பட்டியலில் உயர் நிலையில் இருப்பவர், ஐரோப்பிய போட்டிக்குத் தகுதிபெற்றவராகிவிடுவர். கால்பந்து கூட்டிணைவுக் கோப்பையின் நடப்பு வாகையர் லிவர்பூல் கால்பந்து கழகத்தினராவர். |
Portal di Ensiklopedia Dunia