இந்திய குடியரசு தலைவர் சரக்கு மற்றும் சேவை வரி(GST)யை ஜீலை 1 2017 அன்று அறிமுகம் செய்கிறார்.
சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax; GST) ஒரு மறைமுக வரி, இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இது அரசியலமைப்பு சட்டம் 2017 (நூற்று இருபத்து இரண்டாம் திருத்தச் சட்டம்)-ஆக அறிமுகமாகிறது. இந்த ச.சே.வரியானது ஜிஎஸ்டி சபை மற்றும் அதன் தலைவர் மத்திய நிதி அமைச்சர் இந்தியா – நிர்மலா சீதாராமனால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த ச.சே.வரி-யின் கீழ், சரக்கு மற்றும் சேவைகளானது பின்வரும் விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது அவை: 0%, 5%, 12%, 18%, 28% ஆகும். கடினமான விலைமதிப்பற்ற கற்கள் மீது 0.25% சிறப்பு விகிதமும் வடிவமற்ற அரைகுறைவான கற்கள் மற்றும் தங்கம் மீதும் 3% வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டிக்கு முந்தைய, பெரும்பாலான பொருட்களுக்கான சட்டப்பூர்வ வரி விகிதம் சுமார் 26.5% ஆக இருந்தது; GSTக்குப் பிறகு, பெரும்பாலான பொருட்கள் 18% வரி வரம்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[1][2]
இந்திய அரசினால்நூற்று ஒன்றாவது அரசியல் சட்டத்திருத்தம் அமல்படுத்தப்பட்டதன் மூலம் 1 ஜூலை 2017 முதல் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வந்தது. ஜூலை 1 ஜிஎஸ்டி தினமாக கொண்டாடப்படுகிறது.[3] GST ஆனது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் ஏற்கனவே விதிக்கப்பட்ட பல வரிகளை மாற்றியது.
1 ஜூலை 2017 நள்ளிரவு முதல் துவக்கப்படுகிறது. இதனை பிரதமர் மோடி மற்றும் எதிர்க் கட்சிகள் முன்னிலையில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
வரலாறு
இந்தியாவில் மறைமுக வரி ஆட்சி சீர்திருத்த செயல்முறையானது, 1989ல் பிரதமர் விஸ்வநாத் பிரதாப் சிங்கின்ஜனதா தளம் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றப்பட்ட மதிப்பு கூட்டு வரி (MODVAT) மூலம் தொடங்கியது.[4]
அதன் பிறகு முந்தைய (1991–1996) பிரதமர் நரசிம்ம ராவ்காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் பின்னர் (2004–2014) பிரதமர் மன்மோகன் சிங்கின்காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் 2005ல் மாநிலங்களில் மதிப்பு கூட்டு வரி அமலுக்கு வந்தது.
பல்வேறு மத்திய மாநில 17 மறைமுக வரிகள் மற்றும் 13 செஸ் கூடுதல் வரிகள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டது.
மத்தியரசு வரிகள்
விகிதம்
1
மத்திய மதிப்பு கூட்டு வரி (CENVAT) அல்லது மத்திய கலால் வரி
12.36%
2
சேவை வரி
15%
3
மத்திய விற்பனை வரி (CST)
2%
4
சிவிடி (CVD)
12,36%
5
சிறப்பு சுங்க கூடுதல் வரி (SAD)
4%
6. கூடுதல் கலால் வரி(மருத்துவ மற்றும் கழிப்பறை தயாரிப்புகள்)
7. கூடுதல் கலால் வரி(சிறப்பு பொருட்கள்
8. கூடுதல் கலால் வரி(ஜவுளி பொருட்கள்)
மாநில அரசு வரிகள்
விகிதம்
1
மதிப்பு கூட்டு வரி (VAT)
10 - 14.5%
2
விற்பனை வரி (Central sales tax)
0 - 15%
3
நுழைவு வரி
0 - 12.5%
4
ஆடம்பர வரி (Luxary tax)
3 - 20%
5
பொழுதுபோக்கு வரி (Entertainment tax) (கிராம, நகர சபை வரி தவிர்த்து)[15]
15 - 50%
6. ஆக்ட்ரோய் வரி (சில மாநிலங்கள் மட்டும்)
7. விளம்பர வரி
8. கொள்முதல் வரி (Purchase tax)
9. லாட்டரி, சூதாட்ட வரி
10. மாநில செஸ் மற்றும் சர்சார்ஜ்
சரக்குகள் மற்றும் சேவைகளின் விற்பனை, பரிமாற்றம், கொள்முதல், பண்டமாற்று, குத்தகை, இறக்குமதி போன்ற அனைத்து பரிவர்த்தனைகளிலும் ச.சே.வ விதிக்கப்படும். இந்தியா இரட்டை ஜி.எஸ்.டி மாதிரியைப் பின்பற்றும். இதன் பொருள் மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஜிஎஸ்டி வரியானது நிர்வகிக்கப்படும். ஒரே மாநிலத்திற்குள் நடைபெறும் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் மத்திய ஜிஎஸ்டி(ஆங்: Central GST (CGST)) ஒன்றிய அரசாலும், மாநில ஜிஎஸ்டி (ஆங்:State GST (SGST)) மாநில அரசினாலும் விதிக்கப்படும். வெவ்வேறு மாநிலங்களுக்கிடையே நடைபெறும் பரிவர்த்தனைகள் மற்றும் சரக்கு அல்லது சேவை இறக்குமதிக்கு, ஒருங்கினைந்த ஜிஎஸ்டி (ஆங்:Integrated GST (IGST)) ஒன்றிய அரசினால் விதிக்கப்படும். GST ஒரு நுகர்வு அடிப்படையிலான வரியாகும், இதனால் சரக்கு மற்றும் சேவைகள் உற்பத்தி செய்யப்படும் மாநிலத்தில் வரி வசூலிக்கப்படாது மாறாக நுகரப்படும் மாநிலத்தில் வரி வசூலிக்கப்படும். IGST மாநில அரசுகள் வரி வசூலிப்பதை சிக்கலாக்குகிறது. முந்தைய அமைப்பில் வரி வசூலிப்பது மாநில அரசின் வரையறைக்குட்பட்டிருந்தது.[16]
விளைவுகள் & தாக்கம்
ஜூலை 1, 2017 அன்று வெளியிடப்பட்ட தேசிய அளவிலான ஜிஎஸ்டி வரி, கலால் வரி, சேவை வரி மற்றும் வாட் போன்ற 17 மறைமுக வரிகள் மற்றும் 23 செஸ்களை உள்ளடக்கியது.
ஜிஎஸ்டி வரியானது மிகவும் சிக்கலான மறைமுக வரி அமைப்புகளை கணிசமாக எளிதாக்கியுள்ளது, மேலும் முன்பு ஒவ்வொரு மாநிலத்திலும் வணிகம் செய்ய விரும்பும் ஒரு நிறுவனம் 495 வெவ்வேறு சமர்ப்பிப்புகளைச் செய்ய வேண்டியிருந்தது. ஜிஎஸ்டியின் கீழ், அந்த எண்ணிக்கை வெறும் 12 ஆக குறைந்துள்ளது.[17]
விலக்கு வரம்புகள்: தற்போதைய மற்றும் முன்மொழியப்பட்டது[18]
ஜிஎஸ்டிக்கு முன்பு
முன்மொழிவு
தற்போதைய
ஜிஎஸ்டிக்கு முந்தைய உற்பத்தி பொருள்
ஜிஎஸ்டிக்கு முந்தைய சேவைகள்
ஜிஎஸ்டிக்கு முந்தைய சேவைகள் கூட்டு
பொருட்கள் & சேவைகள்
கூட்டு
பொருட்கள்
பொருட்கள் கூட்டு வரி
சேவைகள்
சேவைகள் கூட்டு வரி
மத்திய அரசு
1.5 கோடி; ஏற்றுமதி மற்றும் விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் வரம்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளன
10 இலட்சம்
பொருந்தாது
25 லட்சம் விதிவிலக்குகள் இல்லாமல் சட்டப்பூர்வ நிறுவன அளவில் திரட்டப்பட்டது
முடிவு செய்ய வில்லை; ஆனால் விலக்கு வரம்பிலிருந்து (25 லட்சம்) 1 கோடி வரை கூட்டும் வாய்ப்பு
40 லட்சம் வரையிலான வருடாந்திர வருவாய் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
1.5கோடி வருட வருவாய் கொண்டோர் கூட்டு வரி திட்டத்தினை தேர்வு செய்வதன் மூலம் 1 % வரி செலுத்த வேண்டும்
20 லட்சம் வரையிலான வருடாந்திர வருவாய் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
50 இலட்ச வருட வருவாய் கொண்டோர் கூட்டு வரி திட்டத்தினை தேர்வு செய்வதன் மூலம் 6 % வரி செலுத்த வேண்டும்
மாநில அரசுகள்
5 - 10 இலட்சம்
பொருந்தாது
சில மாநிலங்களில் சில பொருட்களுக்கு மற்றும் மாறுபட்ட விலைகளில் அனுமதிக்கப்படுகிறது
ஜிஎஸ்டிக்கு முன்பு இந்தியாவில் தளவாட செலவுகள் பெரும் சுமையாக இருந்தது, பொருட்களின் மொத்த மதிப்பினில் சுமார் 14% போக்குவரத்து செலவாக இருந்தது, ஜிஎஸ்டிக்கு பின்பு இது 10-12%மாக குறையும். இதுவே மற்ற பெரிய நாடுகளில் பொருளின் மதிப்பினில் 6-8% போக்குவரத்து செலவே உள்ளது.[20]
ஜிஎஸ்டிக்கு முன்பு சரக்கு போக்குவரத்து துறையானது 50-60% தொழிற்வளங்களை பல்வேறு மாநிலங்களுக்கிடையேயான சிக்கலான வரி அமைப்பு மற்றும் காகித வேலைகளுக்கு செலவிடவேண்டும்.
ஜிஎஸ்டிக்கு முன்பு சரக்கு வாகனமானது தினமும் சராசரியாக 225கி.மீ பயண் செய்தது, இது தற்பொழுது 300-325கி.மீ அதிகரித்துள்ளது. இதனால் வேகம் மட்டும் அதிகரிக்கவில்லை கூடுதலாக சுற்றுப்புறச்சுழலையும் மேம்படுத்தியுள்ளது.
வருவாய் நடுநிலை விகிதம்:
வருவாய் நடுநிலை விகிதக் குழு 15.3% வருவாய் ஜிஎஸ்டி மூலம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருந்த நிலையில் அது ஜிஎஸ்டி வரி அமுல்படுத்தப்பட்ட பின்பு 11.6% மாக குறைந்தது, இதன் மூலம் வருடத்திற்கு 1லட்ச ரூபாய் சேமிப்பு இருக்கும்.[21][22][23][24][25]
வருவாய் நடுநிலை விகிதம்
வருடம்
சதவீதம் (%)
2015 RNR committee
15.3
2017 மே
14.4
2017 நவ
12.6
2018 ஜன
12.2
2018 ஜீலை
11.8
2018 திச
11.6
2019 ஜீலை - செ
11.6
2023 செப்
12.2
ஜிஎஸ்டி வரி விதிப்பினால் வருவாய் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு ஐந்து வருடங்களுக்கு வருவாய் பாதிப்பினை மத்திய அரசு ஈடுசெய்யும்.[26][27][28][29]
ஒத்திசைவு பெயரிடும் முறை (HSN: Harmonized System of Nomenclature) என்பது ஜி.எஸ்.டி வரிவிகிதத்திற்கு உட்பட்டு பல்வேறு பொருள்களுக்கான வரிவிகிதத்தினை அடையாளம் காணக்கூடிய எட்டு இலக்க குறியீடாகும்.
ரூ1.5கோடிக்கு கீழே கடந்த நிதியாண்டில் விற்றுமுதல் கொண்ட நிறுவனம் ஓ.பெ.மு குறியீட்டினை(HSN code) தனது விலைப்பட்டியலில் குறிப்பிடவேண்டாம்.
ரூ1.5 கோடி முதல் 5கோடி வரை கடந்த நிதியாண்டில் விற்றுமுதல் கொண்ட நிறுவனம் இரண்டு இலக்க எண்ணிலான ஓ.பெ.மு குறியீட்டினை(HSN code) தனது விலைப்பட்டியலில் குறிப்பிடவேண்டும்.
ரூ5 கோடிக்கும் மேலே கடந்த நிதியாண்டில் விற்றுமுதல் கொண்ட நிறுவனம் நான்கு இலக்க ஓ.பெ.அ குறியீட்டினை(HSN code) தனது விலைப்பட்டியலில் குறிப்பிடவேண்டும்.[32]
மின்னணு வழி ரசீது (E-Way Bill)
சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டத்தின் (GSTN) கீழ், 10 கிலோ மீட்டர்(6.2 மைல்)-க்கு மேல் மற்றும் ₹50,000-க்கும் அதிகமாக சரக்குகள் எடுத்து செல்லப்படும்பொழுது, கட்டாயமாக மின்னணு வழி ரசீது உருவாக்கப்படவேண்டும். இது ஜீன் மாதம் 2018 முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.[33]
தங்குதடையற்ற மற்றும் விரைவான சரக்கு போக்குவரத்தினை நாடு முழுவதும் உறுதிசெய்யும் வகையில் தணிக்கை நிலையங்கள் நீக்கப்பட்டன..[34]
சட்டம்
ஜிஎஸ்டி சட்டத்தினை அமலுக்குகொண்டு வர 21- உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.[35] ஜீலை 1 2017 முதல் ஜிஎஸ்டி சட்டம் தேசம் முழுவதும் அமலுக்கு வர இருப்பதால், முன்னதாகவே மாநில மற்றும் யூனியன் பிரதேச ஜிஎஸ்டி சட்டமானது, சம்மு காசுமீர் தவிர்த்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இயற்றப்பட்டது.[36] பத்திரங்கள் கொள்முதல் மற்றும் விற்பனைகளூக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது பத்திரங்கள் பரிவர்த்தனை வரிகள் மூலம் தொடர்ந்து கையாளப்படும்.[37]
சரக்கு மற்றும் சேவைகள் வரி பிணையம் (GSTN)
"சரக்குகள் மற்றும் சேவைகள் வரி பிணையம்" (GSTN) ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாக அனைவரும் பங்குபெறும் வகையில் அதாவது அதன் பங்குதாரர்களாக அரசு, வங்கிகள் மற்றும் வரி செலுத்துவோர் இணைந்து செயல்படும் ஒரு தளமாக உருவாக்கப்பட்டது. ஒன்றிய அரசினால் இந்த வரி அமைப்பின் கீழே உள்ள அனைத்து பரிவர்த்தனைகளையும் எளிதாக கண்காணிக்கப்படும் வகையிலும், வரி செலுத்துவோர் அவர்களின் அனைத்து விதமான வரி பரிவர்த்தனை மற்றும் தகவல்களை சேகரிக்கப்பட்டு சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த பிணையமானது மத்திய மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கீட்டில் ₹10 கோடி (ஐஅ$1.2 மில்லியன்) முதலீட்டில் தொடங்கப்பட்டது. இதில் ஒன்றிய அரசு 24.5 சதவீத பங்குகளிலும், மாநில அரசு 24.5 சதவீத பங்குகளிலும் மேலும் மீதமுள்ள 51 சதவீத பங்குகளில் தனியார் வங்கி நிறுவனங்களாலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.[38]
சரக்கு மற்றும் சேவைகள் வரி சீர்திருத்தக் குழுக்கள்
27 செப்டம்பர் 2021 அன்று இந்திய நிதி அமைச்சகம் சரக்கு மற்றும் சேவைகள் வரிகள் குறித்து மறு பரிசீலனை செய்து நிதித்துறைக்கு பரிந்துரைகள் வழங்க, மாநில அமைச்சர்கள் கொண்ட இரு குழுக்கள் அமைத்துள்ளது. சரக்கு மற்றும் சேவைகள் வரி விகிதங்கள் குறித்து பரிந்துரைகள் செய்ய ஒரு குழுவும், வரி ஏய்ப்புகளை கண்டறிந்து ஆலோசனைகளை பரிந்துரை செய்ய ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.[39]
மின்னனு ரசீது
ஜிஎஸ்டியின் கீழ், அக்டோபர் 1, 2020 முதல் ₹500 கோடிக்கு மேல் விற்றுமுதல் உள்ள நிறுவனங்களுக்கு B2B பரிவர்த்தனைகளுக்கான மின்-விலைப்பட்டியல் கட்டாயமாக்கப்பட்டது.
ஜனவரி 1, 2021 முதல் ₹100 கோடிக்கு மேல் விற்றுமுதல் உள்ளவர்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
ஏப்ரல் 1, 2021 முதல், ₹50 கோடிக்கு மேல் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் B2B இ-இன்வாய்ஸ்களை உருவாக்கி வருகின்றன,
ஏப்ரல் 1, 2022 முதல் வரம்பு ₹20 கோடியாகக் குறைக்கப்பட்டது.
ஜனவரி 1, 2023 முதல் ₹5 கோடிக்கு மேல் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் B2B இ-இன்வாய்ஸ்களை உருவாக்க வேண்டும்.[40]
ஜிஎஸ்டி மின்னனு ரசீது இணைய முணையம்:
ஜிஎஸ்டியின் மின்னனு ரசீது, உலகிலேயே முதன்முறையாக ஜிஎஸ்டி வரிகட்டுவோர் தங்களுடைய பி2பி(B2B) விலைப்பட்டியலை அரசாங்கத்தின் இணையமுகப்பின் மூலம் உருவாக்குவதினால் அரசாங்கத்திற்கு தேவைப்படும் அறிக்கைகள் மின்னணு முறையில் தரவு பரிமாற்றம் செய்ப்படுகிறது. இதனால் ஜிஎஸ்டி வரிதாக்கல், வரி செலுத்தும் செயல்முறை எளிதாகிறது, மேலும் பயனர்கள் தங்கள் வாடிக்ககையாளர்களூக்கு தேவையான ரசீதை அரசாங்கத்தின் இணைய போர்டல் மூலம் தனித்துவமான விலைப்பட்டியல் குறிப்பு எண் (IRN) ஆகப்பெறமுடியும், கையொப்பமிடப்பட்ட விலைப்பட்டியல், QR குறியீட்டையும் பெறமுடியும். இந்த இணைய முகப்பு ஏபிஐ ஒருங்கிணைப்பில் பெரும் உந்துதலைக் கொண்ட முகமற்ற அமைப்பு, இது சர்வதேச தரநிலை (UBL/PEPPOL) அடிப்படையில் உருவாக்கப்பட்டது, இதனால் இயந்திர வாசிப்பும் பல்வேறு கட்டமைபுகளுக்கிடையே இயங்கும்தன்மை ஆகருக்கு உருவாக்கி வழங்குகிறது.[41]