சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி
சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி (Bank for International Settlements) என்பது சுவிட்சர்லாந்து பேசெல் நகரில் 17ம் தேதி மே மாதம் 1930 முதல் இயங்கிவரும் ஒரு சர்வதேச அமைப்பு ஆகும். இந்த அமைப்பு உலகில் உள்ள அனைத்து நடுவண் வங்கி வங்கிகளுக்கும் உற்ற துணைவனாக விளங்குகிறது. அனைத்து வங்கிகளுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்துதல், நிதி மற்றும் பணத்துறைகளில் நிலைப்புத்தன்மையை ஏற்படுத்துதல் போன்ற வேலைகளைச் செய்கிறது. இவ்வகைச்செயல்களினால் அனைத்து வங்கிகளுக்கும் இந்த நிறுவனம் நடுவண் வங்கி என்று அழைக்கப்படுகிறது.[2] சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி நடுவண் வங்கிகள் அனைத்தும் குறைந்தபட்சம் எவ்வளவு பணம் கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்று விவாதித்து முடிவு செய்து கூறுகிறது. சுவிட்சர்லாந்து பேசெல் நகரைத் தலைமையிடமாக கொண்டிருந்தாளும் இந்த அமைப்பின் பிரதிநிதி அலுவலகங்கள் ஆங்காங், மற்றும் மெக்சிக்கோ நகரம் ஆகிய இடங்களிலும் அமைந்துள்ளது. வரலாறு1930 ஆண்டு மே மாதம் 17ம் தேதி சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி செருமனி, பெல்ஜியம், பிரான்சு, ஐக்கிய இராச்சியம், வட அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் அரசுகளுக்கிடையிலான உடன்பாடுகளின் மூலம் துவங்கப்பட்டது. [3][4] இந்த அமைப்பானது முதல் உலகப் போரின் போது உறுவாக்கப்பட்ட வெர்சாய் ஒப்பந்தத்தின் மூலம் உலக நாடுகள் செருமனி மீது திணிக்கப்பட்ட இழப்பீட்டு முடிவுகளை திட்டமிட உதவியது. [5] 1929ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கர் யங் (Owen D) என்பவரின் தலைமையில் டென் ஹாக் நகரில் கூடி யங் ஒப்பந்தம் (Young Young Committee) ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின் இதன் இரண்டாவது சர்வதேச வங்கியாளர்கள் மாநாட்டில் ஜனவரி 20 1930ம் ஆண்டு செருமனி நாட்டின் பாடன் பாடன் (Baden-Baden) நகரில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நோக்கங்கள்
மத்திய வங்கிகள் அமைப்பு![]() இந்த அமைப்பு 58 நடுவண் வங்கிகளுக்கும் பணவியல் கொள்கைகளை வகுக்கிறது. இந்த அமைப்பானது அனைத்துலக நாணய நிதியம்,சர்வதேச ஒரே நேரத்தில் கொள்கை அமைப்பு போன்றவற்றின் மூலமாக பொருளாதாரத்தின் வெளிச்சந்தையைக் கவனித்துக்கொள்கிறது. உறுப்பு நாடுகள்இந்த அமைப்பில் 60 உறுப்பு நாடுகளின் மத்திய வங்கிகள் இணைந்துள்ளன.
மேலும் பார்க்கமேற்கோள்
மேலும் படிக்க
புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia