புகையிலை பிடித்தல், மரபு வழி நோய்கள், முந்தைய கதிரியக்கச் சிகிச்சைகள், அடிக்கடி சிறுநீர்ப்பையில் ஏற்படும் தொற்றுகள் மற்றும் சில வேதியல் பொருட்களால் இவ்வகையான புற்றுநோய்கள் ஏற்படுகின்றன.[1] பைநோக்கியல் சிகிச்சை மூலம் இதனைக் கண்டறியலாம்.[3]
இந்தப் புற்றுநோயின் நிலைகளைப் பொறுத்து அதற்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.[1]அறுவைச் சிகிச்சை, வேதிச்சிகிச்சை, கதிரியக்கச் சிகிச்சை அல்லது நோயெதிர்ப்புச் சிகிச்சை போன்ற பல வழிகளில் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அறுவைச் சிகிச்சைகளின் போது பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சிறுநீர்ப்பையினை நீக்க வேண்டியிருக்கும்.[1] இந்த நோயினால் பாதிக்கப்பட்ட அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள 77 விழுக்காடு மக்கள் ஐந்து வருட உயிர்வாழும் வீதத்தில் உள்ளனர்.[2]
2015 ஆம் ஆண்டின் நிலவரப்படி சிறுநீர்ப்பை புற்றுநோயினால் 3.4 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டனர். 430,000 மக்கள் ஆண்டுதோறும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது[8]. 2015 இல் 188,000 பேர் இதனால் இறந்தனர்[5]. பெரும்பானமையாக 65 மற்றும் 85 வயதுடைய மக்கள் இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.[2] பெண்களைக் காட்டிலும் ஆண்களே இந்த நோயினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.[2]2018 ஆம் ஆண்டில் 81.000 மக்கள் இந்தப் புற்றுநோயினால் பாதிக்கப்படுவார்கள் எனவும் 17,000 மக்கள் இறக்க நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.[2]
அறிகுறிகள்
சிறுநீரில் குருதி வடிதலின் மூலம் இதனைக் கண்டறியலாம். மேலும் நுண்நோக்கி மூலம் இதனைக் கண்டறியலாம். இருந்த போதிலும் சிறுநீரில் குருதி வடிதலே பெரும்பான்மையானதாக காணப்படுகிறது. ஆனால் இது வலியற்றதாகும். சிறுநீரில் குருதி வடிதல் குறைவான காலங்கள் கொண்டதாகவே இருக்கும். மேலும் சிறுநீரகச் சோதனையின் மூலம் சிறுநீரில் குருதி வராதபோதிலும் இதனை உறுதிபடுத்தலாம். 80முதல் 90 விழுக்காடு பேர் குருதி வடிதலின் மூலமே இந்த நோயானது கண்டறியப்படுகிறது.[9] சிறுநீரகத் தொற்று , சிறுநீரக நோய்கள் மற்றும் சிறுநீரகக் கல் போன்ற பல காரணங்களினாலும் குருதி வரலாம்.