சுசில் கொய்ராலா நினைவு அறக்கட்டளை
சுசில் கொய்ராலா நினைவு அறக்கட்டளை (Sushil Koirala Memorial Foundation) நேபாளத்தின் மறைந்த பிரதமர் சுசில் கொய்ராலாவின் நினைவாக 2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சனநாயகம், சமூக-பொருளாதார சீர்திருத்தம் மற்றும் திறந்த சமுகக் கொள்கைகளின் அடிப்படையில் மூலோபாய சிந்தனைக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஆலோசனையை பிரச்சாரத்தின் மூலம் சமூகங்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன் இந்த அறக்கட்டளை நிறுவப்பட்டது.[1] [2] [3] பணிகள்சுசில் கொய்ராலா நினைவு அறக்கட்டளையானது கலந்துரையாடல் நிகழ்ச்சி போன்ற பல நிகழ்வுகளை தீவிரமாக ஏற்பாடு செய்து ஆதரவளித்துள்ளது. பல்வேறு விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்துள்ளது. [4] பிப்ரவரி 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மதன் பண்டாரி விளையாட்டு அகாடமியுடன் இணைந்து நேபாளத்தின் 1 ஆவது கிராண்டு துடுப்பாட்டத் திருவிழாவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்தது. இப்போட்டிகளின்போது திறமையானவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு துடுப்பாட்ட உபகரணங்களை வழங்குவதன் மூலம் அறக்கட்டளை தன் பங்கை ஆற்றியது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia