சேர்வராயனின் இயற்கை வளம்![]() சேர்வராயனின் இயற்கை வளம் (The natural resources of Shevaroy Hills) என்பது சேர்வராயான் மலைகளில் இயற்கையாக உள்ள வளங்களைக் குறிக்கிறது. பொருளாதார அடிப்படையில், ஒரு குறிப்பிட்டப் பகுதிகளில் அமைந்து இருக்கும் நிலம், மூலப்பொருட்கள், கச்சா பொருட்கள் எனப்படுபவை ஆகும். ஒப்பிட்டளவில் மனிதத் தலையீடுகளின்றி, தன் இயல்பு நிலையில், சூழல் தொகுதிகளில் காணப்படும் பொருட்களைக் குறிக்கின்றன. இயற்கை வளங்களின் பண்புகள், அவைகளை சுற்றி அமைந்து இருக்கும், குறிப்பிட சுற்றுப்புற சூழ்நிலைகளைப் பொறுத்து, அதன் உயிரின வகைகளையும், அச்சுற்றுப்புற சூழ்நிலை பண்புகளின் வேறுபாடுகளையும் பொருத்து மாறுபடுகின்றன. வள முகாமைத்துவம்ஒரு பெரிய இயற்கை அமைப்பின் நிலம், நீர், மண்வகைகள், செடிகள், விலங்குகள் ஆகியவைகளின் தாக்கம், எவ்வாறு நடைமுறையில், வாழ்க்கைத் தரத்தையும், எதிர்கால வாழ்க்கை தரத்தையும் பாதிக்கின்றன என்பதை முகாமைத்துவம் செய்வது ஆகும். இயற்கை வள முகாமைத்துவமானது, நிலைப்பேறான, உற்பத்தி நிலைப்பேறான முன்னேற்ற கருதுகோள்களுடன், அவ்வளங்களைக் கையாளும் முறைகளையும், அம்முறைகளுடன் தொடர்புடையச் சுற்றுச் சூழல்களையும் கையாள்வதே ஆகும். இந்த இலக்கிற்கு, இயற்கை வளங்களை பற்றி நுணுக்கமாக தெரிந்து கொள்வதும், அவற்றை பேணி காக்க உதவும் ஆதாரங்களையும் புரிந்து கொள்வதும் தேவைப் படுகின்றன.[1] சேர்வராயன் மலைகளின் இருப்பிடம்தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்திற்கு அருகில் காணப்படும், இம்மலைத்தொடர் உள்ளது. இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதி ஆகும். இது அம்மலைத்தொடர்ச்சியிலிருந்து விலகி, தனக்கென 400 ச. கி.மீ. பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இவை கடல் மட்டத்திலிருந்து, 4000 - 5000 அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது. மலைப் பழங்குடிகள் அதிகம் வாழ்கின்றனர் என்பதால் இயற்கை வளங்கள் பேணப்படுகின்றன.[2].இப்பொழுது வெகுவாக பழங்குடிகளின் ஆளுமைகள் குறைந்துள்ளன. இயற்கைச் செல்வங்கள்![]() ![]() இருப்புப் பாதை திட்டம்சேலம் மாவட்டத்தில் இருப்புப் பாதைத் திட்டத்தை, ஆங்கிலேயர் செயற்படுத்தினர். 1859-60ஆம் ஆண்டுகளில் மட்டும் இருப்புப்பாதை அமைப்பதற்காக வாங்கப்பட்ட கிடைமட்ட மரங்களின் எண்ணிக்கை 2,45,743. அவைகளைக் காடுகளில் வெட்டிக் கொடுக்கப் பட்டது. இங்கு கிடை மரங்கள் என்பது, நன்கு வளர்ந்த ஒரு பெரிய மரத்தின் அடி மரமாகும். இந்த கிடைமரங்களின் மேல்தான் தண்டவாளம் அமைக்கப்படும். தற்போது அவை பழமையானதாலும், மீட்டர் பாதையிலிருந்து, அகல பாதையாக மாற்றப் பட்டுள்ளன. இப்பொழுது செயற்கையாக சிமெண்டு கற்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதால், மற்றொரு பேரழிவுகள் தடுக்கப் பட்டன. தோட்டப்பயிர் ஆய்வுதேயிலை, இரப்பர், காஃபி தோட்டங்களை அமைக்க நடத்திய சோதனையிடங்களில், இயற்கை வளம் அழிக்கப்பட்டன. புகை வண்டிகள் ஓடுதலுக்கும், மக்களின் எரிபொருட்களையும் இக்காடுகள் அவ்வப்போது அழிக்கப் பட்டன. அப்போது சேலம் மாவட்ட ஆட்சியராக (Collector) பிரேசியர் (Mr. Brasier) ஆவார். இவர் காலத்து அழிவுகள், உயர்ந்த திட்டமில்லாததால் நடந்தன. சட்ட நடவடிக்கைகி. பி. 1886-ஆம் ஆண்டு ஆங்கில அரசுக்குக் காடுகளைப் பாதுகாக்கவேண்டும் என்ற அக்கறை ஏற்பட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள காடுகளை யெல்லாம் அளந்தனர். சேர்வராயன் மலைகள் மீதும், அவற்றைச் சூழ்ந்துள்ள அடிவாரங்களிலும் உள்ள காடுகளும் அளக்கப்பட்டு, அவைக் காவலுக்கு (Reserved forests) உட்படுத்தப்பட்டன. அவ்வாறு அளக்கப்பட்ட சேர்வராயன் மலைக்காடுகள் 113 சதுரமைல் பரப்புள்ளவை. வன (Forest Officers)அதிகாரிகளும், காவலர் (Rangers) களும் அமர்த்தப் பட்டனர். காடு திட்டமான முறையில் பயன்படுத்த முடிவு எடுக்கப் பட்டன. மரவள அறுவடைகி. பி. 1892-ஆம் ஆண்டிலிருந்து, திங்கள்தோறும் அதற்கென 200 டன் நிறையுள்ள மரங்கள் வெட்டி அனுப்பப் பட்டன. கி. பி. 1894-ஆம் ஆண்டு அந்த அளவானது, திங்களுக்கு 500 டன்களாக உயர்ந்தது. 1896-ல் 1200 டன்களும், 1899-இல் 2200 டன்களும் திங்கள்தோறும் வெட்டி அனுப்பப்பட்டன. 1906-இல் நிலக்கரி நிறையக் கிடைக்கத் தொடங்கியதும் மரக் கட்டையின் தேவை குறைந்தது.
தனித்துவ வளங்கள்![]()
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
இப்பக்கங்களையும் காணவும் |
Portal di Ensiklopedia Dunia