தமிழ் ஒலிபரப்புத்துறை
தமிழ் ஒலிபரப்புத்துறை என்பது தமிழில் ஒலிபரப்பு செய்யப்படுவதையும், அத்துறையில் ஈடுபட்டுள்ள தமிழர்களையும், அத்துறைசார் நுட்ப கலைத்துறை புலத்தையும், வரலாற்றையும் குறிக்கின்றது. இது வானொலி அலைகள் மூலம் கம்பியற்ற தகவல்தொடர்பு மேற்கொண்டு அதிக மக்களை சென்றடைய பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமாகும். மார்க்கோனி என்பவரால் முதல் முதலில் வானொலி கண்டுபிடிக்கப்பட்டு 1897 இல் வானொலி நிலையம் ஒன்றை இங்கிலாந்தில் ஆரம்பித்ததார். பின்னர் 1907 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஒலிபரப்பு முன்னோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் 1920 களிலேயே வானொலி ஒலிபரப்பு வடிவம் பெற்றது. முதல் முதலாக தமிழ் மொழியில் வானொலி நிலையம் இலங்கையிலே ஆரம்பிக்கப்பட்டது. 1923 ஆம் ஆண்டில் முதல் ஒலிபரப்பு சோதனை முயற்சிகள் நடைபெற்று, பின்னர் 1925 இல் சீரான ஒலிபரப்பு துவங்கப்பட்டது.[1][2][3] தமிழின் ஒலிபரப்புத்துறை ரேடியோ சிலோனின் மூலமே தொடங்கியது. இதன் பின்னர் தொழிநுட்ப பரிணாம வளர்ச்சியின் காரணமாக படிப்படியாக வளர்ந்து சர்வதேச தமிழ் வானொலி (1990), ரேடியோ மிர்ச்சி (1993), கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (1996), இன்பத்தமிழ் ஒலி (1996), சக்தி பண்பலை (1998), சூரியன் பண்பலை வானொலி (2009), போன்ற தமிழ் வானொலிகள் உலகம் முழுவதும் செய்யப்பட்டு வருகின்றது. நிகழ்ச்சி வடிவங்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia