தர்மலிங்கமலை தர்மலிங்கேசுவரர் கோயில்
தர்மலிங்கமலை தர்மலிங்கேசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மதுக்கரை புறநகர்ப் பகுதியில் தர்மலிங்கமலை மீது அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] தர்மர் சிவபெருமானை வழிபட்ட தலமாக இக்கோயில் கருதப்படுகிறது.[2] கோயம்புத்தூரின் திருவண்ணாமலை என்றும் இத்தலம் போற்றப்படுகிறது.[3] கடல் மட்டத்திலிருந்து சுமார் 558 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தர்மலிங்கமலை தர்மலிங்கேசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 10°54′16″N 76°55′57″E / 10.904575°N 76.932585°Eஆகும். இக்கோயிலில் மூலவர் தர்மலிங்கேசுவரர் ஆவார். இக்கோயிலின் தலவிருட்சம் வில்வமரம் ஆகும். தர்மலிங்கேசுவரர், விநாயகர், முருகன், நந்தி மற்றும் நவக்கிரகங்கள் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர்.[4] மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிசேகம், சித்ரா பௌர்ணமி, தைப்பூசம், மார்கழி திருவாதிரை, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், நவராத்திரி மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்குகிறது.[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia