தாத்தையங்கார்பேட்டை காசிவிஸ்வநாதர் கோயில்
தாத்தையங்கார்பேட்டை காசிவிஸ்வநாதர் கோயில் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இங்கு பஞ்சமுக பைரவர் சன்னதி இருப்பது சிறப்பு வரலாறுஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] கோயில் அமைப்புஇக்கோயிலில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சி சன்னதிகளும், விநாயகர், முருகன், துர்க்கை, தட்சிணாமூர்த்தி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் நான்கு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2] பூசைகள்இக்கோயிலில் காரணாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆடி மாதம் ஆடி கிருத்திகை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் திருவிழாவாக நடைபெறுகிறது. மேற்கோள்கள்![]() த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.
|
Portal di Ensiklopedia Dunia