தானுந்துத் தொழிற்றுறை
2007 ஆம் ஆண்டில், மொத்தம் 79.9 மில்லியன் புதிய ஊர்திகள் உலகம் முழுவதும் விற்கப்பட்டன: 22.9 மில்லியன் புதிய ஊர்திகள் ஐரோப்பாவிலும், 21.4 மில்லியன் புதிய ஊர்திகள் ஆசிய-பசுபிக்கிலும், 19.4 மில்லியன் புதிய ஊர்திகள் அமெரிக்கா மற்றும் கனடாவிலும், 4.4 மில்லியன் புதிய ஊர்திகள் இலத்தீன் அமெரிக்காவிலும், 2.4 மில்லியன் புதிய ஊர்திகள் மத்திய கிழக்கிலும் மற்றும் 1.4 மில்லியன் புதிய ஊர்திகள் ஆப்ரிக்காவிலும் விற்கப்பட்டன.[2] தென் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் மற்ற பகுதிகளில் உள்ள சந்தைகள் நன்கு வளர்ந்து வந்த நிலையில், வட அமெரிக்கா மற்றும் சப்பான் (நிப்பான்) சந்தைகள் மந்தமாக இருந்தன. சீனா, ரஷ்யா, பிரேசில், இந்தியா போன்ற நாடுகளின் பெரும்பாலான சந்தைகள் மிக விரைவாக வளர்ச்சி கண்டன. கிட்டத்தட்ட 250 மில்லியன் ஊர்திகள் அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளன. 2007 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 806 மில்லியன் தானுந்துகள் மற்றும் எடைகுறைந்த சுமையுந்திகளை சாலைகளில் காண முடிந்தது; அவை ஆண்டுதோறும் 260 பில்லியன் கேலன்களுக்கும் அதிகமான பெட்ரோல் மற்றும் டீசல் எண்ணெயை எரித்திருக்கின்றன. குறிப்பிடும்படியாக சீனாவில் புதிய ஊர்திகளின் எண்ணிக்கை மிக விரைவாக உயர்ந்துள்ளது.[3].[4][5][6] ஊர்திகளால் ஏற்படும் பல சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் போக்குவரத்து இயக்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2008 ஆம் ஆண்டில், எண்ணெய் விலை விரைந்து உயர்த்தப்பட்ட நிலையில் வாகனத் தொழில்துறை உள்ளிட்ட பல தொழில்துறைகள், மூலப்பொருள் செலவுகளின் காரணமாக ஏற்பட்ட விலேயற்ற நெருக்கடிகள் மற்றும் நுகர்வோர் தங்களின் வாங்கும் பழக்கத்தை மாற்றிக்கொண்டது போன்ற பல பிரச்சினைகளை எதிர்கொண்டன. நுகர்வோர்கள் தங்களின் சொந்த ஊர்திப் பயன்பாட்டை மறுமதிப்பீடு செய்வது உள்ளிட்ட பல வேடிக்கையான நிகழ்வுகளை அந்தத் தொழில்துறை எதிர்கொண்டது.[7] அமெரிக்காவில் 51 குறையெடை வாகனத் தொழிற்சாலைகளில் பாதி தொழிற்சாலைகள் வரும் ஆண்டுகளில் நிலையாக மூடத் திட்டமிட்டுள்ளன, இதன் காரணமாக இந்தத் துறையில் 200,000 வேலை இழப்புகள் ஏற்படுவதுடன், இந்தப் பத்தாண்டில் வேலையிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 560,000 என்ற எண்ணிக்கையில் இருக்கும்.[8] 2009 ஆம் ஆண்டின் பெருமளவு வளர்ச்சிக்குப் பின், சீனா உலகின் மிகப்பெரிய ஊர்திப் படைப்பு நாடாகவும் (உற்பத்தியாளராகவும்), மிகப்பெரிய சந்தையைக் கொண்டிருக்கும் நாடாகவும் ஆனது. வரலாறு1885 ஆம் ஆணடு, இடாய்ச்சுலாந்தில் உள்ள மேன்ஃகைமில், கார்ல் பென்சு என்பவர் பெட்ரோல் இயந்திரத்துடன் கூடிய முதல் ஊர்தியை (வண்டியை) உருவாக்கினார். 1886 ஆம் ஆண்டு சனவரி 29 ஆம் தேதி, பென்சு தனது ஊர்திக்கான காப்புரிமையைப் பெற்றதுடன், 1888 ஆம் ஆண்டு முதன் முதலில் ஊர்திப் படைப்பை (உற்பத்தியைத்) தொடங்கினார். அவரது மனைவி பெர்த்தா பென்சு 1888 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் மேன்ஃகைமில் இருந்து பிபுரோசெய்ம் வரையிலும், பின்னர் பிபுரோசெய்மில் இருந்து மீண்டும் மேன்ஃகைம் வரையிலுமான முதல் நீண்ட தொலைவுப் பயணத்தை செய்து காட்டினார், மேலும் அந்தச் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட குதிரையில்லாத பெட்டி நாள்தோறும் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இருந்தது. 2008 ஆம் ஆண்டிலிருந்து பெர்தா பென்சு மெமோரியல் ரூட் இந்த நிகழ்ச்சியை சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. அதன் பிறகு, குதிரை பூட்டப்பட்ட இயந்திரத்தைக் காட்டிலும் ஊர்தியாகப் பயன்படும் ஒன்றை 1889 ஆம் ஆண்டு இசுடுட்கார்ட்டில், காட்லீப் டைம்லர் மற்றும் வில்ஃகெல்ம் மேபேக் இருவரும் வடிவமைத்தனர். 1886 ஆம் ஆண்டு அவர்கள் இருசக்கர(ஈராழி) வாகனத்தை முதன் முதலில் கண்டுபிடித்தவர்கள் என்ற பெருமையைப் பெற்றனர், ஆனால் 1882 ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டின் படுவா (Padua) பல்கலைக்கழகத்தைச் சார்ந்த என்ரிக்கோ பெர்னார்டி என்பவர், ஓர்-உருளையினாலான பெட்ரோல் இயந்திரத்திற்கான காப்புரிமையைப் பெற்றிருந்தார் என்பதுடன், அதைத் தன்னுடைய மகனின் முச்சக்கர (மூவாழி, மூவுருளி) மிதிவண்டியில் பொருத்தியிருந்தார். இந்த நிகழ்வே அவரை முதல் ஊர்தி, மற்றும் முதல் இருசக்கர ஊர்தியைக் கண்டறிந்தவராக பறைசாற்றியது; 1892 ஆம் ஆண்டு பெர்னார்டி இரண்டு நபர்கள் பயணம் செய்வதற்கு ஏற்றார் போல் அந்த மூவுருளி மிதிவண்டியைப் பெரிதாக்கினார். 1897 ஆம் ஆண்டு ஆத்திரேலியா முதன் முதலில் தானுந்து உற்பத்தியைத் தொடங்கியது என்பதுடன், அந்தக் கார்கள் டாரன்ட் மோட்டார் & எஞ்சினியரிங் கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்டது.[9] ஹோல்டனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் முதன் முதலில் கார்களைப் பெருமளவில் தயாரித்த நிறுவனம் போர்ட் மோட்டார் கம்பெனி ஆப் ஆஸ்திரேலியா ஆகும். பிரேசில்2009 ஆம் ஆண்டு, பிரேசில் நாட்டைச் சார்ந்த வாகனத் தொழில்துறை 3.5 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை உற்பத்தி செய்தது. பியேட், வோல்ஸ்வேகன் குரூப், போர்ட், ஜெனரல் மோட்டார்ஸ், நிசான் மோட்டார்ஸ், டொயோட்டோ, மேன் எஸ்இ, மிட்சுபிசி, மெர்சிடஸ்-பென்ஸ், ரெனால்ட், ஹோன்டா, ஹூன்டாய் போன்ற பல பெரிய உலகளாவிய நிறுவனங்கள் பிரேசிலில் அமைந்துள்ளன. மேலும் டிராலர், மார்கோபோலோ எஸ்.ஏ., ஆக்ரேல், ரேன்டன் எஸ்.ஏ. போன்றவை பிரேசிலில் உள்ள மற்ற தேசிய நிறுவனங்களாகும். 1956 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அசோசியேசேவ் நேசினல் டஸ் பேஃப்ரிக்னேட்ஸ் தி வெய்குலஸ் ஆட்டோமோட்டரெஸ் (ஆன்ஃபேவியா) என்ற அமைப்பு பிரேசில் நாட்டின் தொழில்துறையை ஒழுங்குபடுத்துகிறது. அது வாகன உற்பத்தியாளர்கள் (வாகனங்கள், இலேசான வாகனங்கள், சுமையுந்தி மற்றும் பேருந்துகள்) மற்றும் பிரேசில் நாட்டைச் சார்ந்த விவசாய சம்பந்தமான இயந்திரங்களைக் கொண்ட நிறுவனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஆன்ஃபேவியா பேரிஸில் அமைந்துள்ளது என்பதுடன், அது ஆர்கானிசேஷன் இன்டர்நேஷனலி டஸ் கன்ஸ்ட்ரக்டியர்ஸ் த ஆட்டோமொபைல்ஸ் (ஓசிஐஏ) என்பதன் ஒரு பகுதியாகும். தற்போது கனடா உலகின் 11வது இடத்தில் இருக்கும் மிகப்பெரிய ஊர்தி படைக்கும் நாடு என்பதுடன், சில ஆண்டுகளுக்கு முன்பு ஏழாவது இடத்தில் இருந்தது தற்போது கீழிறங்கி வந்துள்ளது. அண்மையில் முதன் முறையாக பிரேசில் மற்றும் எசுப்பானியா (ஸ்பெயின்) இரண்டு நாடுகளும் கனடா நாட்டின் உற்பத்தியை விஞ்சியது. 1918 ஆம் ஆண்டு முதல் 1923 வரை உலகின் இரண்டாவது மிகப்பெரிய படைப்புநாடாக (உற்பத்தியாளராக) இருந்தது கனடாவின் மிகச் சிறந்த சாதனையாகக் கருதப்படுகிறது. 1904 ஆம் ஆண்டில், கனடாவின் வின்சருக்கு (Windsor) அருகிலுள்ள ஓன்ட்டாரியோ என்ற இடத்தில் முதன் முதலில் மிகப்பெரிய அளவிலான ஊர்தி உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. கார்டன் மேக்கிரிகர் மற்றும் வாலஸ் கேம்பெல் ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களுடன் இணைந்து வால்கர்விலே வேகன் ஓர்க்ஸ் தொழிற்சாலையில் 117 மாதிரியிலான “சி” போர்ட் ஊர்திகளை உற்பத்தி செய்தனர். புரூக்ஸ் ஸ்டீம், ரெட்பாத், டதோப், மேக்கே, கால்ட் கேஸ்-எலக்ட்ரிக், கிரே-டார்ட், புராக்விலே அட்லஸ், சி.சி.எம்., மற்றும் மேக்லாஃப்லின் போன்ற முக்கிய மாதிரிகளின் மூலமாக, கனடா பல உள்நாட்டு ஊர்தி உற்பத்தியை மேற்கொண்டது. 1918 ஆம் ஆண்டில், அமெரிக்க நிறுவனமான செனரல் மோட்டார்சு, மேக்லாஃப்லின் நிறுவனத்தை வாங்கியதுடன், செனரல் மோட்டர்சு ஆப் கனடா என்று பெயர் மாற்றம் செய்தது. முதல் உலகப்போரின் தேவைகள் காரணமாக, 1923 ஆம் ஆண்டிற்குள் கனடாவின் ஊர்தித் தொழில்துறை உலகிலேயே இரண்டாவது மிகப்பெரியது என்ற அளவிற்கு வளர்ச்சி பெற்றது, இருந்தபோதும் அது போதுமான இயந்திரச் சாதனங்களைக் கொண்டிருக்காத காரணத்தினால் உயர்ந்த விலையுடன் கூடிய தரத்திலான வாகனங்களை உற்பத்தி செய்வதில் இன்றளவும் பின்தங்கியுள்ளது. அதிக விலை மற்றும் போதுமான உற்பத்தியின்மை ஆகியவற்றின் காரணமாக கனடா நாட்டு ஊர்தித் தொழில்துறை 1965 ஆம் ஆண்டிற்கு முன்பாக அமெரிக்காவுடன் வணிக ஒப்பந்தம் செய்துகொண்டது. 1964 ஆம் ஆண்டின் “ஊர்தி ஒப்பந்தம்” கனடா நாட்டு ஊர்தித் தொழில்துறை இன்று எதை உற்பத்தி செய்கிறது என்பதைத் தனிப்பட்ட முறையில் விரிக்கிறது. தொழில்துறையில் மேக்னா (Magna) இன்டர்நேசனல் கனடாவின் மிகப்பெரிய உள்நாட்டு நிறுவனம் என்பதுடன், ஆத்திரியாவின் மேக்னா இசுட்டெயர் தொழிற்சாலைகளில் படைக்கப்படும் அதன் மொத்த ஊர்திகளுக்கும் ஊர்தி உதிரிகளைத் தயாரித்து அளிக்கும் உலகின் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமாகும். சீனாவின் ஊர்தித் தொழில்துறை 2000 ஆம் ஆண்டிலிருந்து சீராக வளர்ந்து வருகிறது. 2009 ஆம் ஆண்டில், 19.83 மில்லியன் மோட்டார் வாகனங்கள் சீனாவில் படைக்கப்பட்டன என்பதுடன், மிகப்பெரிய ஊர்தி படைப்பாளர் என்ற சாதனையைக் கொண்டிருந்த சப்பானை சீனா முறியடித்தது. மேலும் 13.64 மில்லியன் மொத்த ஊர்தி விற்பனையின் காரணமாக, 2009 ஆண்டு முழுவதும் சீனா உலகின் மிகப்பெரிய ஊர்திச் சந்தையைக் கொண்டிருக்கும் நாடாக மாறியதுடன், அமெரிக்காவையும் விஞ்சியது. ஃவோல்க்ஃசுவேகன், செனரல் மோட்டார்சு, ஹூன்டாய், நிசான் மோட்டார்சு, பிஒய்டி, செரி, ஹோன்டா (ஃகோண்டா), டொயோட்டோ மற்றும் கீலி ஆகிய நிறுவனங்கள் 2009 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது கார் விற்பனையாளர்களாவர்.[10] இடாய்ச்சுலாந்து (செருமனி)![]() இடாய்ச்சுலாந்து (செருமனி) நாட்டைச் சார்ந்த கார்ல் பென்சு என்பவரால் பெட்ரோல் இயந்திர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இன்று உலகம் முழுவதும் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் நான்கு-வீச்சு உள் எரி பொறியிலால் உந்தப்படும் ஊர்திகள் இடாய்ச்சுலாந்தை சார்ந்த நிக்கோலசு ஓட்டோ என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கூடுதலாக, டீசல் இயந்திரத்தை இடாய்ச்சுலாந்தைச் சார்ந்த ரடால்ஃப் டீசல் என்பவர் கண்டுபிடித்தார். இடாய்ச்சுலாந்தைச் சார்ந்த போர்சுக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் உயர்ந்த செயல்பாடு மற்றும் தரத்திலான விளையாட்டுத் தானுந்துகள் (கார்கள்) மிகவும் புகழ் வாய்ந்தவை. மெர்சிடிசு, ஆவ்டி (அல்லது ஔடி, Audi) மற்றும் பிஎம்டபிள்யூ (BMW) ஆகிய நிறுவனங்கள் தங்களின் தானுந்துகளின் தரம் மற்றும் புதுமையான தொழில்நுட்பத்தின் காரணமாகப் புகழ்பெற்று விளங்குகின்றன. டைம்லர்-பென்சின் முந்தைய நிறுவனமான டய்ம்லர்-மோட்டோரென்-கெசல்ஸ்கேப்ட் தொழில்துறையின் பழைய நிறுவனம் என்பதுடன், அந்த நிறுவனம் 1926 ஆம் ஆண்டிலிருந்து டைம்லர்-பென்சு என்று பெயர் மாற்றம் பெற்றது. 1998 ஆம் ஆண்டில், அந்த நிறுவனம் அமெரிக்க ஊர்திப் படைப்புநிறுவனமாகிய கிரைசுலெர் என்ற நிறுவனத்தை வாங்கியது, மேலும் 2007 ஆம் ஆண்டு ஏற்பட்ட அதிக நட்டத்தின் காரணமாக அந்த நிறுவனம் கிரைசுலெரை விற்றது, இந்நிகழ்விலிருந்து அந்த நிறுவனம் நீண்ட கால இலாபத்திற்கான ஒப்பந்தத்தை ஒருபோதும் நடைமுறைப்படுத்துவது இல்லை என முடிவெடுத்துள்ளது. ![]() புகழ்பெற்ற சந்தைகளில், ஓப்பெல் (Opel) மற்றும் ஃவோல்சுவேகன் போன்ற நிறுவனங்கள் புகழ் இட்டியவை. ஓப்பெல் ஒரு காலத்தில் மிதிவண்டி படைக்கு நிறுவனமாக இருந்தது, பின்னர் 1898 ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் தானுந்துகளை (கார்களை) படைக்கத் தொடங்கியது; 1929 ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தை செனரல் மோட்டார்சு (GM) வாங்கியது, ஆனால் நாட்ஃசி (Nazi) அரசாங்கம் அதன் அதிகாரத்தை எடுத்துக்கொண்டது, மேலும் செனரல் மோட்டார்சு தனது மொத்த முதலீடுகளையும் நாட்ஃசி அரசாங்கத்திற்கு எழுதிக் கொடுத்தது. 1948 ஆம் ஆண்டில், செனரல் மோட்டார்சு ஓப்பெல் நிறுவனத்தைத் திரும்பப் பெற்றது. புகழ்பெற்ற சந்தைகளில் ஃவோல்க்ஃசுவேகன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது; 1964 ஆம் ஆண்டு, வோல்ஸ்வேகன் ஆவ்டி நிறுவனத்தை வாங்கியது, அதே சமயம் ஆவ்டி நிறுவனம் இன்றைய ஃவோல்க்ஃசுவேகன் குழுமத்தைச் சிறந்த முறையில் வழிநடத்தி வருகிறது. ஃவோல்க்ஃசுவேகனின் புகழ்பெற்ற தானுந்தான சிறிய வண்டு போல் தோறம் கொண்ட, பின்புறம் உயர்த்தப்பட்ட, குளிரூட்டப்பட்ட காற்றினை உடைய இயந்திரத்திலான சிக்கனமான “மக்களின் தானுந்து” ஆகும். தானுந்து ஆர்வலரான அடால்ஃப் இட்லரின் ஆணையைத் தொடர்ந்து, 1930 ஆம் ஆண்டு அந்தக் கார் பெர்டினென்ட் போர்சு என்பவரால் வடிவமைக்கப்பட்டது. இருந்தபோதும், உற்பத்தி செய்யப்பட்ட மாதிரிகள் முதல் உலகப்போருக்குப் பின்னரே வெளியிடப்பட்டன; அதுவரை இடாமானியப் பணக்காரர்கள் மட்டுமே இவ்வகையான வண்டிகளைப் பயன்படுத்தி வந்தனர். 1950 ஆம் ஆண்டிற்குள், ஃவோல்க்ஃசுவேகன் இடாய்ச்சுலாந்தின் மிகப்பெரிய படிப்புநிறுவனமாக மாறியது.[11] இன்று, அந்த நிறுவனம் உலகின் ஊர்தித் தொழில்துறையில் மிகப்பெரிய மூன்று நிறுவனங்களுள் ஒன்றாக இருப்பதுடன், ஐரோப்பாவின் மிகப்பெரிய நிறுவனமாகவும் விளங்குகிறது; தற்போது அந்த நிறுவனத்தின் ஒரு பகுதி போர்சுக் ஆட்டோமொபில் ஓல்டிங் எசுஇக்குச் சொந்தமானது.[12] அதே சமயம், போர்சுக் ஏசி', ஃவோல்க்ஃசுவேகன், ஔடி ஏசி', புகாத்தி ஆட்டோமொபைல்சு எசுஏஎசு, ஆட்டோமொபிலி லேம்போர்கினி எசு.பி.ஏ., பென்ட்லே மோட்டார்சு லிமிட்டெட், சியேட், எஸ்.ஏ., ஸ்கோடா ஆட்டோ, சுமையுந்தி தயாரிப்பாளர்களான எம்ஏஎன் ஏசி' மற்றும் ஸ்கேனியா ஏபி உள்ளிட்டோர் முக்கிய கார் உற்பத்தியாளர்கள் ஆவர். இடாய்ச்சுலாந்து தனது ஆடம்பரமான சலூன்களுக்குப் பெயர் பெற்றது. பாதுகாப்பு காரணங்களுக்காக பல உற்பத்தியாளர்கள் தங்களின் வண்டிகளை விரைவாக ஓட்டுவதற்கு சில எல்லைகளை வகுத்துள்ளனர். கூடுதலான தொகையைச் செலுத்துவதன் மூலம், மெர்சிடஸ் பென்சின் மெர்சிடசு-ஏஎம்ஜி, குவாட்ரோ ஜிஎம்பிஎச்சின் ஆவ்டி ஆர்எஸ், மற்றும் பிஎம்டபிள்யூ எம் ஜிஎம்பிஎச்சின் பிஎம்டபிள்யூ எம் போன்ற தொழிற்கூட வடிவமைப்பு மாதிரிகளைப் பெற முடியும் என்பதால், அவைகளின் அதி வேகத்தைக் கட்டுப்படுத்தாமல் போவதற்குச் சாத்தியமுள்ளது. இந்தியாஇந்தியா கார்களை உற்பத்தி செய்யவதற்கு ஏற்ற மிகச் சிறந்த ஆற்றலைக் கொண்டுள்ளது. 1940 ஆம் ஆண்டு வளர்ச்சியடையாத நிலையில் வாகனத் தொழில்துறை இந்தியாவில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்த 50 ஆண்டுகளில், தொழில்துறையின் வளர்ச்சியானது பொதுவுடமைக் கொள்கைகள் மற்றும் அரசாங்கத்தின் அதிகாரத் தடை போன்றவற்றால் கட்டுப்படுத்தப்பட்டது. 1991 ஆம் ஆண்டு இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கையைத் தொடர்ந்து, தொழில்துறையின் கட்டுப்பாடுகள் படிப்படியாகக் குறைந்தது. அந்தச் சமயத்தில் இந்தியாவின் வாகன உற்பத்தியின் ஆண்டு வளர்ச்சி 17 சதவீதமாகவும், வாகன உதிரிகள் மற்றும் வாகன ஏற்றுமதியின் வளர்ச்சி 30 சதவீதமாகவும் இருந்தது. தற்போது இந்தியா இரண்டு மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மாருதி சுசூகி, ஹூன்டாய் மோட்டார் இந்தியா, டாட்டா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்தரா & மஹிந்தரா ஆகியவை இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய நிறுவனங்களாகும். இந்திய வாகனத் தொழில்துறையின் மொத்த வருவாயானது 2006 ஆம் ஆண்டின்படி 34 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்பதுடன், 2016 ஆம் ஆண்டிற்குள் 122 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[13] 2200 அமெரிக்க டாலர் மதிப்பிலான உலகின் மிகக் குறைந்த விலையிலான டாட்டா நேனோ காரை டாட்டா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.[14] ஜெனரல் மோட்டார்ஸ், போர்ட், ஹூன்டாய், ஹோன்டா, சுசூகி, நிசான் மோட்டார்ஸ், டொயோட்டோ, வோல்ஸ்வேகன், ஆவ்டி, ஸ்கோடா, பிஎம்டபிள்யூ, பியாட், மெர்சிடஸ் பென்ஸ் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஒருங்கிணைக்கும் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளன. 2009 ஆம் ஆண்டில், இந்தியா சீனாவைக் காட்டிலும் அதிக அளவில் சிறிய வகைக் கார்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்தது. சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன், ஹூன்டாய் மோட்டார் கார்ப்பரேஷன், மற்றும் நிசான் மோட்டார் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவை சிறிய கார்களை உற்பத்தி செய்யும் முக்கிய நாடாக உருவாக்கி வருகின்றன. ஈரான்2001 ஆம் ஆண்டின்படி, 13 பொது மற்றும் தனியார் வாகன உற்பத்தியாளர்கள் ஈரானில் இருந்தனர், அவர்களில் ஈரான் கோட்ரோ மற்றும் சாய்பா ஆகிய இரண்டு உற்பத்தியாளர்கள் மிக முக்கியமானவர்கள் என்பதுடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 94 சதவீதத்தை தங்களின் பங்காகக் கொண்டிருந்தனர். ஈரான் கோட்ரோ நிறுவனம் பேகன் என்ற பெயரில் நாட்டிலேயே மிகுதியான அளவில் கார்களை உற்பத்தி செய்தது என்பதுடன், 2005 ஆம் ஆண்டில் சேமண்ட் கார்கள் பேகனை பதிலீடு செய்தது, இருந்தபோதும் 2001 ஆம் ஆண்டு பேகன் கார்கள் சந்தைகளில் 61 சதவீதத்தை ஆக்ரமித்தன, அதே ஆண்டில் சாய்பா கார்கள் ஈரான் நாட்டின் மொத்த உற்பத்தியில் 33 சதவீதத்தை தனது பங்களிப்பாகக் கொண்டிருந்தன. பேஹம் குரூப், கெர்மன் மோட்டார்ஸ், கிஷ் கோட்ரோ, ரேனிரன், டிராக்டோர்சசி, ஷாஹப் கோட்ரோ போன்ற கார் உற்பத்தியாளர்கள் மொத்தத்தில் ஆறு சதவீதத்திலான உற்பத்தியைத் தங்களின் பங்களிப்பாகக் கொண்டிருந்தனர்.[15] நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், தனிப்பட்ட நடவடிக்கைகளுக்குப் பயன்படும்படியான இருசக்கர வாகனங்கள், சாபியாவின் மினியேச்சர் போன்ற பயணிகள் கார்கள், வேன்கள், சிறிய சுமையுந்திகள், நடுத்தர அளவிலான சுமையுந்திகள், கனரக சுமையுந்திகள், சிறிய பேருந்துகள், பெரிய அளவிலான பேருந்துகள் மற்றம் பிற கனரக வாகனங்கள் போன்ற அதிக அளவிலான வாகனங்களை வாகன உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்தனர். 2006 ஆம் ஆண்டில், ஈரான் உலகிலேயே 16வது மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர் என்ற பெருமையைப் பெற்றதுடன், நாட்டில் பத்து நபர்களுக்கு ஒரு கார் என்ற விகிதத்தில் கிட்டத்தட்ட ஏழு மில்லியன் கார்களை உற்பத்தி செய்தது.[16][17][18] 2005 ஆம் ஆண்டு ஈரானின் வாகன உற்பத்தி ஒரு மில்லியன் அளவைத் தாண்டியதுடன், 2009 மார்ச் மாதத்திற்குள் ஒரு பில்லியன் கார்களை ஏற்றுமதி செய்ய ஈரான் திட்டமிட்டிருந்தது.[19][20] இத்தாலி1899 ஆம் ஆண்டில், ஜியோவன்னி அக்னெலி என்பவரால் முதன் முதலில் பியாட் (பேஃப்ரிகா இத்தாலியனா ஆட்டோமொபிலி டோரினோ) தொழிற்கூடம் நிறுவப்பட்டபோது, இத்தாலியில் வாகனத் தொழில்துறை தொடங்கியது என்று கூறலாம். அந்த வருடத்தைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 50 உற்பத்தியாளர்கள் உருவாகினர் என்பதுடன், 1900 ஆம் ஆண்டின் இசாட்டோ பிராஸ்கினி, 1906 ஆம் ஆண்டின் லேன்சியா, 1910 ஆம் ஆண்டின் ஆல்ஃபா ரோமியோ, 1914 ஆம் ஆண்டின் மாசெராட்டி, 1939 ஆம் ஆண்டின் ஃபெராரி, மற்றும் 1963 ஆம் ஆண்டின் லம்போர்கினி போன்றோர்கள் அவர்களுள் குறிப்பிடத்தக்க உற்பத்தியாளர்கள் ஆவர். முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள், மற்றும் 1970 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றின் காரணமாக, பல நிறுவனங்கள் காணாமல் போய்விட்டதுடன, அத்துடன் சில நிறுவனங்கள் பியாட் அல்லது வெளிநாட்டு உற்பத்தியாளர்களால் வாங்கப்பட்டன. இன்று இத்தாலியின் வாகனத் தொழில்துறை மிகச்சிறிய கார்களில் இருந்து பெராரி மற்றும் மாசெராட்டி போன்ற மிகப்பெரிய விளையாட்டுக் கார்கள் வரை உற்பத்தி செய்யும் திறனைப் பெற்று முன்னேறியுள்ளது. 2009 ஜூன் மாதத்தின்படி, பியாட் நிறுவனம் அமெரிக்காவின் கிரிஸ்லெர் நிறுவனத்தின் 20% பங்குகளை வைத்திருக்கிறது. ஜப்பான்மிகவும் அடர்த்தியான நகரங்களில் மிகப்பெரிய மக்கள்தொகையோடு சிறந்த போக்குவரத்து வசதியைக் கொண்டிருக்கும் ஜப்பான் பலமான போக்குவரத்தான சாலை வழிகளை வரம்புக்கு உட்படுத்தியிருக்கிறது. இருந்தபோதும், பெரும்பாலான வாகனங்கள் அளவில் சிறயதாகவும், எடை குறைவாகவும் காணப்படுகிறது. எளிமையான தொடக்கத்தைக் கொண்டிருந்த ஜப்பான், இன்று உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தி செய்யும் நாடாக உயர்ந்துள்ளது. 1914 ஆம் ஆண்டு நிசான் மோட்டார்ஸ் சுமையுந்தியை உற்பத்தி செய்யத் தொடங்கியதுடன், 1980 ஆம் ஆண்டு தன்னுடைய கார்களை நிசான் என்று பெயர் மாற்றம் செய்யும் வரை, அந்த நிறுவனம் டேட்சன் என்ற பெயரில் கார்களை விற்பனை செய்து வந்தது. 1980 ஆம் ஆண்டிற்கு முன்னதாக அந்த நிறுவனம் டென்னஸியில் தனது முதல் அமெரிக்கத் தொழிற்கூடத்தை நிறுவியது என்பதுடன், 1986 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் தனது முதல் தொழிற்கூடத்தை நிறுவியது. வட அமெரிக்கச் சந்தைகளில், அதன் சொகுசான மாதிரிகள் இன்பினிட்டி என்ற பெயரில் விற்கப்பட்டன. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, ஹோன்டா நிறுவனம் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்கத் தொடங்கியது. வட அமெரிக்கச் சந்தைகளில், ஹோன்டாவின் சொகுசு வாகனங்கள் அக்யூரா என்ற பெயரில் விற்கப்பட்டன. ஆர்எக்ஸ் வரிசையில் தொடங்கும் ஒரே மாதிரியான அச்சு இயந்திரங்களை வெற்றிகரமான முறையில் இணைத்த முதல் நிறுவனம் மாஸ்டா என்பதுடன், 323, 626, 929 போன்ற எம்எக்ஸ் வரிசையிலான வாகனங்கள் வெளிவந்த சமயத்தில் மாஸ்டா நிறுவனத்தின் ஒரு பகுதியை போர்ட் நிறுவனம் வாங்கியது. அதே போல பி வரிசையிலான சுமையுந்திகள் போர்ட் நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டின் கடைசியில் மாஸ்டா நிறுவனம் தனது பங்குகளை போர்ட் நிறுவனத்தில் இருந்து திரும்பப் பெற்ற பின்னர் பி வரிசையிலான சுமையுந்திகள் போர்ட் நிறுவனத்தால் கட்டமைக்கப்படுவதில்லை, அத்துடன் மாஸ்டா 3 போன்ற தற்போதைய மாதிரிகள் போர்ட் நிறுவனத்துடன் குறைந்த அளவிலான உறவுமுறையை வைத்துள்ளது. 1936 ஆம் ஆண்டில் டொயோட்டோ நிறுவனம் கார்களை உற்பத்தி செய்யத் தொடங்கியது என்பதுடன், தற்போது உலகிலேயே மிகப்பெரிய உற்பத்தியாளராக விளங்குகிறது. டொயோட்டோ கரோலா பெயரிலான கார்கள் உலகில் சிறந்த முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் சொகுசு மாதிரியானது லெக்ஸஸ் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டொயோட்டோ அதன் புதுமை, தர உணர்வு நிர்வாக பாணிக்கும் மற்றும் அதனுடைய வீரிய வாயு மின்னணு வாகனங்களுக்காகவும், குறிப்பாக 1997 ஆம் ஆண்டு அறிமுகப்பபடுத்தப்பட்ட பிரியஸிற்காகவும் பிரபலமானதாக இருக்கிறது. 2010 ஆம் ஆண்டின் தொடக்க நாட்களில், பல பாதுகாப்பு தோல்விகளுக்காக டொயோட்டோ நிறுவனம் பொறுப்பேற்றுக் கொண்டதுடன், அது இந்த பிராண்டிற்கு புதிய முகவரியானது. சுபாரு, மிட்சுபிசி, மாஸ்டா, தைஹட்சு, சுசூகி, மற்றும் இசூசு போன்றவை மற்ற பெரிய நிறுவனங்களாகும். அமெரிக்கக் கார்களின் தேவைகள் வீழ்ச்சியடைந்த சமயத்தில், 1970 மற்றும் 1980 ஆண்டுகளுக்கு இடையில் ஜப்பானின் கார் உற்பத்தி 3.179 மில்லியன் என்ற எண்ணிக்கையில் இருந்து 7.038 மில்லியன் எண்ணிக்கையாக உயர்ந்துள்ளது.[21] நம்பகத்தன்மை, ஆதரவு, செயல்திறன், மற்றும் உயர்ந்த தொழில்நுட்பம் ஆகியவற்றின் காரணமாக ஜப்பானியக் கார்கள் புகழ்பெற்று விளங்குகின்றன. பாகிஸ்தான்பாகிஸ்தானில் வாகனத் தொழில்துறை செயல்திறன் பெற்றிருப்பதோடு, நீண்ட காலமாக வளர்ந்து வரும் துறையாகவும் இருக்கிறது, இருந்தபோதும் வாகனத் தொழில்துறைகளின் வரிசையில் சிறந்த முறையில் புகழ்பெற்று விளங்கும்படியான நிறுவனங்கள் எதுவும் அங்கு இல்லை. சில நபர்களின் ஆதிக்கம், வாகனத் தொழில்துறையில் காணப்படும் குறைந்த அளவிலான போட்டி, மற்றும் இறக்குமதி செய்வதற்கு அதிக அளவிலான வரிகள் போன்ற கட்டுப்பாடுகளால், நாட்டில் கார்களின் விலை மிகவும் உயர்ந்து காணப்படுகிறது. தற்போது டொயோட்டோ, ஹோன்டா, சுசூகி, நிசான் மோட்டார்ஸ் போன்ற உலகளாவிய வாகன உற்பத்தியாளர்கள் அங்கே ஒருங்கிணைப்புத் தொழில்கூடங்களை நிறுவியோ அல்லது உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்தோ செயல்பட்டு வருகின்றனர். 2007 ஆம் ஆண்டில் வாகனத் தொழில்துறையின் மொத்தப் பங்களிப்பானது ஜிடிபி இல் 2.8 சதவீதமாக இருந்தது, மேலும் வரும் ஆண்டுகளில் அது 5.6 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உற்பத்தித் துறைக்கு 16 சதவீதப் பங்களிப்பை அளித்து வரும் வாகனத் துறை, அடுத்த 7 ஆண்டுகளில் 25 சதவீதப் பங்களிப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் கொரியா![]() தென் கொரிய வாகனத் தொழில்துறை தற்போது உற்பத்தி அளவில் உலகிலேயே ஐந்தாவது இடத்தையும், ஏற்றுமதி செய்வதில் ஆறாவது இடத்தையும் பெற்று விளங்குகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு, தொடக்க காலத்தில், ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரப் பாகங்களை ஒருங்கிணைக்கும் வேலையை அந்நாடு மேற்கொண்டது. டொயோட்டோவிற்குப் பிறகு, ஹூன்டாய் கியா ஆட்டோமேடிவ் குரூப் தற்போது ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய வாகன உற்பத்தி செய்யும் நிறுவனமாக விளங்குகிறது. 1988 ஆம் ஆண்டின் உள்நாட்டு உற்பத்தியின் மொத்த அளவு ஒரு மில்லியன் யூனிட்டிற்கும் அதிகமாகும். 1990 ஆம் ஆண்டில், அந்தத் தொழில்துறை பல எண்ணிக்கையிலான மாதிரிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்தது. இது அதன் திறமையை மட்டும் விவரிப்பதாக இல்லை, மாறாக பத்தாண்டுகளுக்கும் மேலாக நாட்டின் உள்கட்டமைப்பிற்காகச் செலவிடப்படும் பெரும் தொகைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படியாக இருந்தது. அந்நாட்டு வாகனங்களின் தரமானது சமீப ஆண்டு காலமாக துரிதமாக உயர்ந்து வருவதுடன், சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது. ஸ்பெயின்2009 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் வாகனத் தொழில்துறை நாட்டின் வளர்ச்சியில் ஜிடிபி இல் 3.5 சதவீதமாக இருந்ததுடன், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட ஒன்பது சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. கார்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஸ்பெயின் எட்டாவது இடத்தில் இருக்கிறது, ஆனால் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டிற்கிடையில் அந்நாட்டின் கார் உற்பத்தியின் அளவு குறைந்தது. தொடர்ந்து வந்த பல அரசுகளின் அக்கறையின்மை காரணமாக, பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே அதன் உற்பத்தியளவு குறையத் தொடங்கியது. இதனால் ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த அனைத்துக் கார் உற்பத்தியாளர்களும் பெரும் இழப்பைச் சந்தித்தனர் என்பதுடன், தற்போது அனைவரும் வெளிநாட்டு நிறுவனங்களின் பிடியில் உள்ளனர். தற்போது வோல்ஸ்வேகன் குரூப் இன் துணை நிறுவனமான சியேட், எஸ்.ஏ. ஸ்பெயினின் மிகப்பெரிய உள்நாட்டு நிறுவனமாகும். தாய்லாந்துதாய்ரங் அல்லது டிஆர் தாய்லாந்து நாட்டைச் சார்ந்த வாகன உற்பத்தியாளர் என்பதுடன், தாய்ரங் யூனியன் கார் கார் பப்ளி்க் கார்ப்பரேஷன் லிமிட்டெட் ( பரணிடப்பட்டது 2010-07-26 at the வந்தவழி இயந்திரம்டிஆர்யூ) பரணிடப்பட்டது 2010-07-26 at the வந்தவழி இயந்திரம் ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது. 1967 ஆம் ஆண்டு தாய்லாந்தில் உள்ள பேங்காக் இல் அந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் உண்மையான பெயர் தாய் ரங் என்ஜினியரீங் கார்ப்பரேஷன் லிமிட்டெட் என்பதாகும், பின்னர் 1973 ஆம் ஆண்டு அதன் பெயரானது தாய் ரங் யூனியன் கார் கார்ப்பரேஷன் லிமிட்டெட் என்று மாற்றப்பட்டது. 1994 ஆம் ஆண்டு டிஆர்யூ தாய்லாந்தின் பங்கு சந்தையில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. உற்பத்தியை வடிவமைத்தல், விரிவாக்குதல், வாகன உதிரிகளின் உற்பத்தி, தொழில்துறை உபகரணங்கள் உற்பத்தி, கார் ஒருங்கிணைப்பு வழிமுறை மற்றும் நிதி சம்பந்தமான வர்த்தகம் ஆகியவை டிஆர்யூ வர்த்தகத்தின் நிலைகளாகும். தொடர்ந்து இயங்காத சில டிஆர் வேன்களை தாய்லாந்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட லேண்ட் ரோவர் இயந்திரத்தின் மூலம் ஆற்றலைச் செலுத்தி இயங்க வைக்க இயலும். டிஆர் இன் தொழில்நுட்பம், வடிவமைப்பு, விரிவாக்கம் மற்றும் ஒருங்கிணைக்கும் ஆற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்தி, சிறிய அல்லது நடுத்தர அளவிலான விசையுந்தியை அடிப்படையாகக் கொண்ட நவீன டிஆர் கார்களை, எஸ்யூவியாகவோ அல்லது பல பயன்பாடுகளுடன் கூடிய ஏழு-இருக்கையைக் கொண்ட வாகனமாகவோ உருவாக்க இயலும். 2009 டிஆர் அட்வென்சர் மற்றும் டிஆர் ஆல்ரோடர் ஆகியவை நடைமுறையிலுள்ள மாதிரிகளாகும். துருக்கிதுருக்கியின் வாகனத் தொழில்துறை அதன் உற்பத்தித் துறையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 1959 ஆம் ஆண்டு ஓடோசேன் ஒருங்கிணைப்புத் தொழிற்சாலையை நிறுவியது மற்றும் 1961 ஆம் ஆண்டு ஆனடோல் என்ற உள்நாட்டு கார்களைப் பெருமளவில் உற்பத்தி செய்தது ஆகிய நிகழ்வுகளுடன் துருக்கியின் வாகனத் தொழில்துறை தொடக்கம் பெற்றது. 2008 ஆம் ஆண்டு, துருக்கி 1,147,110 இயந்திர வாகனங்களை உற்பத்தி செய்ததுடன், ஐரோப்பாவின் ஆறாவது மிகப்பெரிய உற்பத்தியாளராக ஆனது, அத்துடன் உலகின் 15வது மிகப்பெரிய உற்பத்தியாளராகவும் விளங்கியது. கார் உற்பத்தியாளர்கள் மற்றும் உபகரணங்களை வழங்குபவர்கள் ஆகியோர்களுடன் இணைந்த துருக்கியின் வாகனத் துறை உலகளாவிய உற்பத்தியாளர் அமைப்பில் முக்கிய அங்கமாக மாறியது, அத்துடன் 2008 ஆம் ஆண்டு 22,944,000,000 அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்பிலான இயந்திர வாகனங்கள் மற்றும் உபகரணங்களை அந்நாடு ஏற்றுமதி செய்தது. பியாட்/டோஃபாஸ், ஓயக்-ரெனால்ட், ஹூன்டாய், டொயோட்டோ, ஹோன்டா மற்றும் போர்ட்/ஓடோசேன் ஆகியவை உற்பத்தித் தொழிற்கூடங்களைக் கொண்ட உலகளாவிய கார் உற்பத்தியாளர்களாவர். இங்கிலாந்து![]() இங்கிலாந்தின் இயந்திரத் தொழில்துறை ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டது. தற்போது அது கிட்டத்தட்ட 800,000 அதிகமான தொழிலாளர்களைக் கொண்டிருப்பதுடன், சென்ற ஆண்டில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் கார்களையும், 120,000 வணிகரீதியான வாகனங்களையும் உற்பத்தி செய்தது. அவற்றில் 75 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிசான் மோட்டார்ஸ், டொயோட்டோ, ஹோன்டா, மினி மற்றும் லேண்ட் ஓவர் ஆகியவை இங்கிலாந்தின் முதல் ஐந்து கார் உற்பத்தியாளர்களாவர். இருந்தபோதும், 1990 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து கார்கள் சர்வதேச அளவிலான போட்டிகளில் பின்தங்கியுள்ளது. ஜெர்மனி அல்லது பிரான்ஸ் ஆகிய நாடுகளின் உற்பத்தியால் இங்கிலாந்து மிகவும் பாதிப்படைந்துள்ளது. 2000 ஆம் ஆண்டிலிருந்து, அதன் இயந்திர வாகன உற்பத்தி 1,813,894 என்ற எண்ணிக்கையில் இருந்து குறைந்துள்ளது.[22] பிரேசில், இந்தியா மற்றும் மெக்ஸிகோ போன்ற நாடுகளின் வேகமான தொழில்துறைப் பொருளாதார வளர்ச்சியால் இங்கிலாந்து பின்னுக்குத் தள்ளப்பட்டு உள்ளது.[22] இங்கிலாந்து உலகின் 13வது மிகப்பெரிய வாகன உற்பத்தியாளராக விளங்குகிறது.[22] நிறுவனங்களின் உறவுமுறைகள்வாகன உற்பத்தியாளர்கள் மற்ற வாகன உற்பத்தியாளர்களின் பங்குகளை வைத்திருப்பது ஒரு பொதுவான நிகழ்வாகும். தனிப்பட்ட நிறுவனங்களின் இந்த உரிமைகள் கீழே விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. நடைமுறையில் குறிப்பிடும்படியான உறவுமுறைகள் பின்வருமாறு:
சிறந்த வாகன உற்பத்தியாளர்கள் குழு (அளவுகளின் அடிப்படையில்)கீழே உள்ள அட்டவணை, உலகின் மிகப்பெரிய மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், மற்றும் அவை ஒவ்வொன்றும் உற்பத்தி செய்யும் மாதிரிகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த அட்டவணை சர்வதேச மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் அமைப்பில் (ஓஐசிஏ) [23] இருந்து பெறப்பட்ட விவரத்தை அடிப்படையைக் கொண்டதுடன், 2008 ஆம் ஆண்டின் முடிவில் உற்பத்தி செய்யப்பட்ட விவரத்தைக் கொண்டும், மாதிரிகளின் அகர வரிசை முறையைக் கொண்டும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்புகள்போர்ஸ்க் ஆட்டோமொபில் ஹோல்டிங் எஸ்இ, வோல்ஸ்வேகன் குழுமத்தின் 50.7 சதவீதப் பங்குகளை வைத்திருக்கிறது.[12] இருந்தபோதும், வோல்ஸ்வேகன் குழுமம், புதிய “ஒருங்கிணைக்கப்பட்ட வாகனப் பிரிவின்” கட்டுப்பாட்டில் உள்ள போர்ஸ்க் ஏஜி வாகன உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆதாயத்தைப் பெறும். இந்த ஒருங்கிணைப்பு/ஆதாயமானது 2011 ஆம் ஆண்டின் மத்தியில் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[24][25] போர்ட் நிறுவனம் வால்வோவை கீலி ஆட்டோமொபைல் நிறுவனத்திற்கு விற்றது. சிறிய வாகன உற்பத்தியாளர்கள்உலகளாவிய பெரிய நிறுவனங்களைத் தவிர மற்ற பல வாகன உற்பத்தியாளர்கள் சந்தைகளில் காணப்படுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் மண்டல அல்லது புகழ்பெற்ற சந்தைகளில் செயல்படுபவர்களாக இருந்தனர். மேலும் காண்க
குறிப்புகள்
வெளிப்புற இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia