1901 ஆம் ஆண்டில், திருநெல்வேலி மாவட்ட மக்கள் தொகையானது 2,059,607 ஆகும். இதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் முஸ்லிம் மற்றும் கிறித்தவ மக்களாவர்.
நிர்வாகம்
இந்த மாவட்டமானது நான்கு நகராட்சிகளைக் கொண்டு இருந்தது. அவை: திருநெல்வேலி, ஸ்ரீவில்லிப்புத்தூர், தூத்துக்குடி, பாளையங்கோட்டை ஆகியவை ஆகும்.
துணை கோட்டம்
1901 ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி மாவட்டம் மூன்று துணை கோட்டங்களாக பிரிகப்பட்டது அவை திருநெல்வேலி துணை கோட்டம்:
திருநெல்வேலி வட்டம்
சங்கரநயினார்கோவில் வட்டம்
ஸ்ரீ வில்லிபுத்தூர் வட்டம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கியது ஆகும்
தூத்துக்குடி துணை கோட்டம்:
ஸ்ரீவைகுண்டம் வட்டம்
திருச்செந்தூர் வட்டம்
கோவில்பட்டி வட்டம் ஆகியவற்றை கொண்டது
சேரன்மகாதேவி துணை கோட்டம்:
அம்பாசமுத்திரம் வட்டம்
நாங்குநேரி வட்டம்
தென்காசி வட்டம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கியது
வட்டங்கள்
அம்பாசமுத்திரம் (பரப்பு:1,250 சதுர கிலோமீட்டர்கள் (481 sq mi); தலைமையகம்: அம்பாசமுத்திரம்)
நாங்குனேரி (Area:1,900 சதுர கிலோமீட்டர்கள் (730 sq mi); தலைமையகம்: நாங்குனேரி)
ஒட்டப்பிடாரம் (Area:2,780 சதுர கிலோமீட்டர்கள் (1,072 sq mi); தலைமையகம்: ஒட்டப்பிடாரம்)
சங்கரன்கோவில் (Area:2,000 சதுர கிலோமீட்டர்கள் (770 sq mi); தலைமையகம்: சங்கரநயினார் கோவில்)
சாத்தூர் (Area:1,500 சதுர கிலோமீட்டர்கள் (560 sq mi); தலைமையகம்: சாத்தூர்)
ஸ்ரீவைகுண்டம் (Area:1,400 சதுர கிலோமீட்டர்கள் (542 sq mi); தலைமையகம்: ஸ்ரீவைகுண்டம்)
ஸ்ரீவில்லிபுத்தூர் (Area:1,520 சதுர கிலோமீட்டர்கள் (585 sq mi); தலைமையகம்: ஸ்ரீவிலிபுத்தூர்)
தென்காசி (Area:1,250 சதுர கிலோமீட்டர்கள் (481 sq mi); தலைமையகம்: தென்காசி)
திருநெல்வேலி (Area:850 சதுர கிலோமீட்டர்கள் (328 sq mi); தலைமையகம்: திருநெல்வேலி)