திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில்
ஸ்ரீ பத்திரகாளி மாரியம்மன் திருக்கோவில் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தின் தென்கோடி எல்லையாக அமைந்துள்ள திருமங்கலம் நகரில் உள்ளது. இது திருமங்கலத்தில் தெற்கில் குண்டாற்றின் கரையோரம் அமைந்துள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பழமையான கோயில்களுள் இதுவும் ஒன்றாகும். இந்தக் கோயிலில் வழிபட்டுச் செல்பவர்களுக்கு அம்மை உட்பட அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்கிற நம்பிக்கை இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது. தலவரலாறு![]() இருநூற்றாண்டுகளுக்கு முன்பு வரை திருமங்கலம் பாண்டிய குல க்ஷத்ரிய நாடார் இன மக்களின் முயற்சியால், அவர்களுக்கென்று ஒரு மாரியம்மன் கோவில், சில மளிகைக் கடைகள், கல்வி நிறுவனங்கள் என தானே நிறுவினர். அப்படி 18ம் நூற்றாண்டின் இடையில்[சான்று தேவை] நிறுவப்பட்டது தான், மதுரை மாவட்டம் திருமங்கலத்திலுள்ள பத்திரகாளி மாரியம்மன் கோவில். ஆரம்பத்தில் தற்போதய திருமங்கலம் பள்ளிக்கூடத் தெருவில் தண்டல்முறை எனும் இடத்தில் சிறு விநாயகர் கோவிலாக இருந்து வந்தது. பின்னர், நாடார் சமூக மக்களின் நிலத்தைப் பெற்று அதனை கோவில் கட்ட தானமாக நல்லதம்பி நாடார் என்பவர் வழங்கினார். இங்கு கோவிலை உருவாக்க அடித்தளம் தோண்டும்போது கிடைக்கப் பெற்ற விநாயகர், அகோர வீரபத்திரர் ஆகியவற்றோடு மூலவராக மாரியம்மன், முருகர், தண்டாயுதபாணி, விசாலாட்சி சமேத காசி விசுவநாதரைக் கொண்டு 1872ம் ஆண்டு சித்திரை மாதம் 11ம் நாள், கோவிலின் முதல் குடமுழுக்கு நடைபெற்றது. கோயிலுக்கான இடத்தை தானமாக அளித்த நல்லதம்பி நாடார் மற்றும் அவரது துணைவியாரின் சிலைகள், கோவில் கொடிமரத்தின் வலதுபுறமுள்ள தூணில் அமைத்தனர். பின்னர் வந்த ஆண்டுகளில், அன்றைய கோவில் தர்மகர்த்தா P.P. பூச்சி நாடார், கோவிலுக்கு பின்புறம் செயல்பட்டு வந்த தனது சுருட்டுப் பேட்டையை தானமாக அளித்ததில் கோவில் மேலும் விரிவடைந்தது. இக்கோவிலை கட்டுவதற்கு, இதே ஊரில் உள்ள பழைய மாரியம்மன் கோவிலில் இருந்து பிடி மண் எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. குடமுழுக்குஇக்கோவிலில் இதுவரை ஆறு குடமுழுக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. 1850ம் ஆண்டு இக்கோவில் கட்ட ஆரம்பித்து 3 பலிபீடங்களுடன் 1852ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பின்னர் 1872ம் ஆண்டு சித்திரை மாதம் 11ம் நாள் கோயிலின் முதல் குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் 1922ம் ஆண்டு இரண்டாவது குடமுழுக்கும், 1934ல் மூன்றாவது குடமுழுக்கும், 1964ம் ஆண்டு தை மாதம் 20ம் நாள் நான்காவது குடமுழுக்கும், 1994ம் ஆண்டு சித்திரை மாதம் 11ம் நாள் ஐந்தாவது குடமுழுக்கும், 2007ம் ஆண்டு பங்குனி மாதம் 22ம் நாள் ஆறாவது குடமுழுக்கும் நடைபெற்றது. அம்மனின் அமைப்புபொதுவாக கோயில்களில் மாரியம்மன் இடது காலை மடித்து வலது காலை ஊன்றியபடிதான் இருக்கும். ஆனால் இந்தக் கோயிலில் இருக்கும் மாரியம்மனோ வலது காலை மடித்து இடது காலை ஊன்றியிருக்கிறார். இந்த அமைப்பு இங்கிருக்கும் மாரியம்மனின் சிறப்பம்சம். துதிகள்விநாயகர் துதி(வெண்பா)
பத்திரகாளி மாரியம்மன் துதி(எண்சீர் ஆசிரிய விருத்தம்)
பரிவார தேவதைகள் துதி(பதினான்கு சீர் ஆசிரிய விருத்தம்)
கோயில் அமைந்துள்ள இடம்வைகையாற்றின் கிளை நதியான திருமங்கலம் விழியாக பாயும் குண்டாற்றின் கிழக்கு ஆற்றங்கரையில் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் வடக்கு திசையை பிராதான வாயிலாகவும், கிழக்கு திசையை உற்சவர் வெளியேறும் வாயிலாகக் கொண்டு, திராவிடக் கட்டிடக்கலை அமைப்பில் காணப்படுகின்றது. திருமங்கலம் பெயர்க்காரணம்மீனாட்சியை திருமணம் செய்ய, கயிலையில் இருந்த சிவன் மதுரைக்கு வந்தார். அவர்களின் திருமணம் மதுரையில் நடந்தது. திருமணத்திற்கு முன்பு, தேவர்கள் மதுரை அருகிலுள்ள ஒரு பகுதிக்கு வந்து, பொன்னை உருக்கி மாங்கல்யம் செய்தனர். மாங்கல்யம் செய்வதற்கு முன்பு, சிவனை வழிபட தேவர்கள் விரும்பினர். அவர்களின் விருப்பத்தை உணர்ந்த சிவன், இவ்விடத்தில் தனது திருமணத்திற்கு முன்பே பார்வதி சமேதராக எழுந்தருளி காட்சி தந்தார். இங்கு திருமாங்கல்யம் செய்யப்பட்டதால், இப்பகுதியை தேவர்கள் "திருமாங்கல்யபுரம்' என அழைத்தனர். காலப் போக்கில் "திருமங்கலம்' என பெயர் மாறியது மேற்படி கதைக்கு எந்த ஆதாரமும், ஆவணமும் இல்லை. புணையப்படும் வரலாறு! https://kidcha.blogspot.com/2015/12/blog-post.html?m=1 திருவிழாக்கள்இக்கோவில் நடக்கும் ஒவ்வொரு திருவிழாவும் பிரசித்தம். வைகாசி திருவிழாவைகாசி மாத அம்மாவாசையைத் தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமையன்று முதல் 13நாட்கள் வரை நடக்கும் திருவிழா வைகாசித் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதுவே இக்கோவிலின் முக்கிய திருவிழாவாகும். கொடியேற்றத்திற்கு முந்தய ஞாயிற்றுக்கிழமை இரவு திருவிழாவிற்கான பூச்சொரிதல் விழா நடைபெறும். ![]() ஸ்ரீ மாரியம்மன் (உற்சவர்) திருமங்கலம் ![]() ஸ்ரீ பத்திரகாளியம்மன் (உற்சவர்) திருமங்கலம் ![]()
திருவிழாவின் 5ஆம் நாளான குதிரையோட்டம், 6ஆம் நாளான சமணர் கழுவேற்றம், 9ம் நாளான முளைப்பாரிகை, 10ம் நாளான சூரசம்ஹாரம், 13ம் நாளான அம்மன் குண்டாற்றில் எழுந்தருளுவதும் முக்கிய நிகழ்ச்சிகளாகும். இப்பதிமூன்று நாட்களிலும்இ கோயிலுக்கு அருகில் அமைத்துள்ள பி.கே.என் பெண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் பொருட்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் (பாட்டு கச்சேரி, ஆடல் பாடல், பட்டி மன்றம்) நடை பெறும். நவராத்திரி திருவிழாபுரட்டாசி மாதத்தில் நவராத்திரி கொலு. திருவிழா தொடங்கிய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் மாரியம்மன் அலங்கரிக்கப்பட்டு மாலை முதல் இரவு வரை ஓதுவார்களால் மந்திரங்கள் ஓதப்படும். விழாவன் கடைசி நாளான விஜயதசமியன்று மாரியம்மன் புறப்பாடாகி, இங்குள்ள பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலுள்ள வன்னி மரத்தடியில் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறும். ![]() ஸ்ரீ மாரியம்மன் (உற்சவர்) திருமங்கலம்
பெரிய கார்த்திகைத் திருவிழா![]() ஸ்ரீ மாரியம்மன் (உற்சவர்) திருமங்கலம் கார்த்திகை மாதத்தில் தீப உற்சவம். கார்த்திகை தீபதினத்தன்று மாலை வள்ளி தெய்வாணை சமேதராய் முருகர் வெள்ளி மயில் வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டு கோவிலின் வடக்கு வாசலில் உள்ள ஆறுகால் மண்டபத்தில் எழுந்தருளுவார். பின்னர் கோவிலின் முன்புள்ள திடலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு சுவாமி நகர்வலம் நடைபெறும் திருவாதிரை திருவிழாமார்கழி மாதத்தில் வரும் பவுர்னமியன்று திருவாதிரை திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை விடியும் முன்பு, கோவிலின் உள் மணடபத்தில் பத்திரகாளியம்மன் சிம்ம வாகனத்திலும் மற்றும் மாரியம்மன் ரிஷப வாகனத்திலும் அலங்காரமாகி பூசை நடைபெற்று பிராசதமாக திருவாதிரைக் களி தரப்படும். பின்னர் இரு அம்மனும் செவ்வந்திப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் புறப்பாடாகி நகர்வலம் வருவர். சுவாமி கோவில் வந்தடைந்தவுடன் செவ்வந்திப் பூக்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்படும். இதனால் இத்திருவிழாவை, செவ்வந்திப்பூ திருவிழா என்று அவ்வூர் மக்கள் கூறுகின்றனர். தைப்பூசத் திருவிழாதை மாதத்தில் வரும் பவுர்னமியன்று தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று மாலை வள்ளி தெய்வாணை சமேதராய் முருகர் வெள்ளி மயில் வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டு கோவிலின் கிழக்கு வாசலில் எழுந்தருளுவார். பின்னர் உற்சவருக்கு பூசை நடைபெற்று சுவாமி நகர்வலம் நடைபெறும். பங்குனி உத்திரத் திருவிழாபங்குனி மாதத்தில் வரும் பவுர்னமியன்று பங்குனி உத்திரத் திருவிழா கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தன்று மாலை வள்ளி தெய்வாணை சமேதராய் முருகர் வெள்ளி மயில் வாகனத்தில் அலங்காரம் செய்யப்பட்டு கோவிலின் கிழக்கு வாசலில் எழுந்தருளுவார். பின்னர் உற்சவருக்கு பூசை நடைபெற்று சுவாமி நகர்வலம் நடைபெறும். போக்குவரத்து![]() சாலை வசதிமதுரையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையான NH-7ல் திருமங்கலம் அமைந்திருப்பதால், இராஜபாளையம், குற்றாலம்,திருநெல்வேலி, நாகர்கோவில்,தூத்துக்குடி, விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட அனைத்து ஊர்களில் இருந்தும், பேருந்து வசதிகள் உள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையம், ஆரப்பாளைய பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்தும் 24மணி நேர நகர் பேருந்து வசதி உள்ளது. திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோக்கள் கிடைக்கும். தொடருந்து வசதிமதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கொல்லம் இடையே இயங்கும் அனைத்து பயணிகள் தொடருந்துகளும் திருமங்கலம் தொடருந்து நிலையத்தில் நின்று செல்கின்றன. மைசூர் விரைவு தொடருந்து, தூத்துக்குடி விரைவு தொடருந்து, முத்து நகர் விரைவு தொடருந்து, அனந்தபுரி விரைவு தொடருந்து போன்ற விரைவுத் தொடருந்துகளும் இங்கு நின்று செல்கின்றன. திருமங்கலம் தொடருந்து நிலையத்திலிருந்து கோவிலுக்கு செல்ல ஆட்டோக்கள் கிடைக்கும். இவற்றையும் பார்க்க |
Portal di Ensiklopedia Dunia