தெற்கு ஆசியாவில் ஏற்பட்ட வெள்ளங்கள் 2017 (2017 South Asian floods) என்பது, தெற்காசிய நாடுகளான வங்காளதேசம், இந்தியா, நேபாளம் மற்றும் பாக்கித்தான் ஆகிய நாடுகளில் 2017ஆம் ஆணு சூலை முதல் செப்டம்பர் வரை பரவலான பருவமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. ஆகத்து 30 வரை, 410 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையானது 3 தினங்களில் 10 சதவிகிதமாக ஆக அதிகரித்துள்ளது.[1]
கடந்த இரண்டு தசாப்தங்களில் தெற்காசியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 2,000 பேர் வெள்ளம் காரணமாக இறந்துள்ளனர் என்று த நியூயார்க் டைம்ஸ் ஆய்வு மையத்தின் பேரிடர்களின் தொற்றுநோயியல் பேரிடர் தரவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2017ஆம் ஆண்டில் குசராத்தில் ஏற்பட்ட வெள்ளப் பகுதிகளில் மீட்பு குழுவினர்[2] மீட்பு பணியில்
பின்னணி
ஒவ்வொரு ஆண்டும் சூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையே பருவமழை தெற்காசியாவை தாக்குகிறது. ஆனால் 2017ஆம் ஆண்டு பெயத பருவமழையானது சராசரியை அளவைவிட மிக அதிகமாக இருந்தது.[3] சமீபத்திய ஆண்டுகளில் காணப்படாத அளவில் வெள்ளம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிலச்சரிவுகள் இதனால் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை, பல தசாப்தங்களில் ஏற்பட்ட மிக மோசமான தெற்காசிய வெள்ளம் என்று வல்லுநர்கள் அழைத்துள்ளனர். வெள்ளத்தால் சேதமடைந்த விளைநிலங்கள் காரணமாக நீண்ட கால உணவு விநியோகம் கேள்விக்குறியாகியுள்ளது.[4] செப்டம்பர் 2 வரை, 1,288 பேர் வெள்ளத்தால் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 450 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.[5] 2017 ஆகத்து கடைசி வாரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.4 கோடியிலிருந்து இருந்து 4.1 கோடியாக அதிகரித்துள்ளது.[6][7][8]
காலநிலை மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்கான பன்னாட்டு மையம் மற்றும் பிறர் இந்த வெள்ளம் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதாக கவலைத் தெரிவித்துள்ளனர்.[9][10]