தொழுவூர் வேலாயுத முதலியார்தொழுவூர் வேலாயுத முதலியார் 1832 ஆம் ஆண்டு (நந்தன, ஆவணி 9) செங்கல்பட்டு மாவட்டம், ஈக்காட்டுக் கோட்டம், சிறுகடல் (தொழுவூர் அஞ்சல் நிலையம் அருகிலுள்ளது) எனும் ஊரில் பிறந்தார்.[1] பெற்றோர்: செங்கல்வராய முதலியார் - ஏலவார்குழலி. வடலூர் இராமலிங்க சுவாமிகளின் மாணவராக இருந்து அவரிடம் தமிழ் கற்றார். சிறப்புகள்இராமலிங்க அடிகள் எனும் பெயருக்குச் சிறப்புப் பெயராக, திருவருட்பிரகாச வள்ளலார் எனும் பெயரிட்ட பெருமை வேலாயுதத்தையேச் சாரும். இவர் காலத்தில் நிகழ்ந்த அருட்பா மருட்பாக் கட்சிகளில், மருட்பாக் கட்சியார் எழுதிய போலியருட்பா மறுப்பு எனும் நூலுக்கு மறுப்பாக, போலியருட்பா மறுப்பென்னும் குதர்க்காரண்ய நாசமகாபரசு எனும் நூலை எழுதினார். சென்னை பிரசிடென்சி கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவருக்கு, இராமலிங்க அடிகளார், உபய கலாநிதி எனும் பட்டம் தந்துள்ளார். இயற்றிய வசனநூல்கள்
செய்யுள் நூல்கள்
சமாதிஇவர் 21-02-1889 அன்று திருவொற்றியூரில் சமாதி அடைந்தார். மேற்கோள்கள்
உசாத்துணை
|
Portal di Ensiklopedia Dunia