நிருபேன் சக்கரபர்த்தி
நிருபேன் சக்கரபர்த்தி (Nripen Chakraborty)(ஏப்ரல் 4, 1905 - திசம்பர் 25, 2004[1]) இந்திய இடதுசாரி அரசியல்வாதி. இவர் 1978-லிருந்து 1988 வரை திரிபுரா மாநில முதலமைச்சராகவும் இருந்துள்ளார். நிருபேன் சக்கரபர்த்தி ஆறு தசாப்தங்களாக இந்திய பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபட்டார்[2][3]. வாழ்க்கைஇவர் பிரித்தானிய இந்தியாவின் (இன்றைய வங்காளதேசம் ) வங்காள மாகாணத்தின் டாக்கா மாவட்டத்தில் உள்ள பிக்கரம்பூர் என்ற இடத்தில் பிறந்தார்[4]. இவர் ராஜ்குமார் மற்றும் உத்தம்சுநாதரி சக்கரபர்த்தி ஆகியோரின் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்தார். 1925இல் அவுட்சாஹி உயர்நிலைப் பள்ளியில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். டாக்கா பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை விட்டுவிட்டு இந்திய சுதந்திர இயக்கத்தில் சேர்ந்தார். 1931-ஆம் ஆண்டில், இவர் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். 1934இல் இந்திய பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்தார். 1937இல் கட்சியின் வங்காளப் பிரிவுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1950இல், கட்சியால் திரிபுராவுக்கு அனுப்பப்பட்டார், மேலும் அங்கு ஒரு முக்கிய அமைப்பாளராக ஆனார். 1964இல் கட்சியின் பிளவுக்குப் பிறகு, இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் (மார்க்சிஸ்ட்) சேர்ந்தார்.[5]. 1967இல் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மாநிலப் பிரிவின் செயலாளராக ஆனார். 1972இல் கட்சியின் மத்தியக் குழுவிற்கும், சூன் 1984 இல் அதன் ஆட்சி மன்ற குழுவிற்கும்[6] தேர்ந்தெடுக்கப்பட்டார். திரிபுராவில்நிருபேன் சக்கரபர்த்தி 1957இல் திரிபுரா பிராந்திய குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் 1962இல் எதிர்க்கட்சித் தலைவராக ஆனார். திரிபுரா முழு மாநில அந்தஸ்தை அடைந்த பிறகு, இவர் 1972இல் திரிபுரா சட்டமன்ற உறுப்பினரானார். 1977இல், இரண்டு குறுகிய கால கூட்டணி அரசாங்கங்களில் அமைச்சராக இருந்தார், முதலில் இடது கட்சிகள் மற்றும் ஜனநாயகத்திற்கான காங்கிரஸ் (CFD) கூட்டணி அரசு, அதன் பின்னர் இடது மற்றும் ஜனதா கட்சி இடையிலான கூட்டணி அரசு. 31 திசம்பர் 1977 அன்று திரிபுரா மாநிலத்தின் சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் இடது முன்னணி (திரிபுரா) வெற்றி பெற்றபோது, இவர் முதலமைச்சரானார். மற்றும் 1988 வரை பதவியில் தொடர்ந்தார். இடது முன்னணி தோல்விக்குப் பிறகு 1988 தேர்தல்களில், இவர் 1988 முதல் 1993 வரை திரிபுரா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். 1993 தேர்தலில், இடது முன்னணி மீண்டும் திரிபுராவில் ஆட்சிக்கு வந்தது. இவர் மாநில திட்ட வாரியத்தின் தலைவரானார். 1995இல் இந்தியப் பொதுவுடமைக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார், ஆனால் 1998 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[4] ஒரு பத்திரிகையாளராக1939-41 காலகட்டத்தில், ஆனந்த பஜார் பத்திரிக்கைக்கு துணை ஆசிரியராகப் பணியாற்றினார். வங்காள மொழியில் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் அங்கமான சுவாதிநதாவின் இணை ஆசிரியராகவும் இருந்தார். பின்னர், இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் திரிபுரா மாநில அலகின் ஊதுகுழலான 'தேஷர் கதா' நாளிதழில், 1995 வரை இவரது புனைப்பெயரான 'அரூபு ராய்' என்ற பெயரில் அடிக்கடி கட்டுரையாளராக இருந்தார். கடைசி நாட்கள்திசம்பர் 2004இல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு கொல்கத்தாவில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். 24 திசம்பர் 2004 அன்று, கட்சியின் அரசியல் குழு இவரை மீண்டும் சேர்க்க முடிவு செய்தது. இவர் 25 திசம்பர் 2004 அன்று மாரடைப்பு காரணமாக இறந்தார்.[7].[4] சான்றுகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia