பர்சவ பத்மாவதியம்மன் கோவில்

பர்சவ பத்மாவதியம்மன் கோவில் (Shree Parshwa Padmavathi Shaktipeet) தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் குஜராத்தி மக்கள் கூடுதலாக வழிபடும் ஒரு கோவிலாகும். கிருட்டிணகிரி மாவட்டம், பருகூர் ஊராட்சி ஒன்றியம், சுண்டம்பட்டி அருகில் இக்கோவில் அமைந்துள்ளது.[1]

அன்னதானம் வழங்குமிடம், சொற்பொழிவு அரங்கம், பூங்கா, சிறுவர் விளையாட்டு மைதானம் போன்றவை இக்கோவிலைச் சுற்றி அமைந்துள்ளன. கருவரையின் சுவரில் கண்ணாடி வேலைப்பாடும் தரையில் பளிங்கு கற்களும் இடம்பெற்றுள்ளன. காலை 7 மணியளவில் கருவரையைத் துாய்மைசெய்து பிறகு அம்மனுக்கு சாம்பிராணி காட்டி தீபம் ஏற்றப்படுகிறது. நண்பகல் 12 மணியளவில் உச்சிவேளை பூசை நடைபெறுகிறது. பக்தர்கள் தேங்காய், பழம், பூ, இனிப்புகள் வைத்து வழிபடுவர். ஆண்டுதோறும் நவராத்திரி 9 நாட்களில் காலை, மாலை, நண்பகல் என மூன்று வேளையும் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அப்பொழுது குஜராத்தி மக்கள் கூடுதலாக விழாக்களில் கலந்துகொள்வர்.

இக்கோவிலுக்கு யாரும் கருப்புநிற ஆடை அணிந்து செல்லக்கூடாது. இஞ்சி, பூண்டு போன்று பூமிக்கடியில் விளையும் பொருட்களை உண்டுவிட்டு இக்கோவிலுக்குள் செல்லக்கூடாது.

மேற்கோள்கள்

  1. தினத்தந்தி (2018-03-03), "துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகை", www.dailythanthi.com, retrieved 2024-07-22
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya