பர்வதமலை மல்லிகார்சுனசுவாமி கோயில்
பர்வதமலை மல்லிகார்சுனசுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பர்வதமலை பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[2][3][4] கடல் மட்டத்திலிருந்து சுமார் 844 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பர்வதமலை மல்லிகார்சுனசுவாமி கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 12°26′18″N 78°58′19″E / 12.438465°N 78.971945°E ஆகும். இக்கோயிலில் மூலவர் மல்லிகார்சுனசுவாமி மற்றும் தாயார் பிரமராம்பிகை ஆவர். இக்கோயிலின் தீர்த்தம் பாதாள சுனை தீர்த்தம் ஆகும்.[5] மல்லிகார்சுனசுவாமி, பிரமராம்பிகை, தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், அகத்தியர், வீரபத்திரர் ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். சித்ரா பௌர்ணமி, ஆடிப்பெருக்கு, மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிசேகம், ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia