பாக்கித்தான் தேசிய நாள் அல்லது பாக்கித்தான் நாள் (Pakistan Day, Urdu: یوم پاکستان, lit. யோம்-இ-பாகிஸ்தான்) அல்லது பாக்கித்தான் முன்மொழிவு நாள், அல்லது குடியரசு நாள், 1940ஆம் ஆண்டில் மார்ச் 23 அன்று முதன்முதலாக தனிநாடு முன்மொழியப்பட்டதைக் கொண்டாடும் வகையில் பின்பற்றப்படும் தேசிய விடுமுறை நாளாகும்.[1] தவிரவும் இதேநாளில் 1956இல் பாக்கித்தான் உலகின் முதல் இசுலாமியக் குடியரசாக மாறியதையும் குறிக்கின்றது. [2] இந்த நாளில் பாக்கித்தானின் படைத்துறைகள் இணைந்து படையிடை அணிவகுப்பை நடத்திக் கொண்டாடுகின்றன.[3]
1940ஆம் ஆண்டில் மார்ச் 23ஆம் நாள் இலாகூரில் தற்போதைய மினார்-இ-பாக்கித்தான் (பொருள். பாக்கித்தான் கோபுரம்) உள்ள இடத்தில் கூடிய முசுலிம் லீக் பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கிலிருந்த நான்கு மாகாணங்களின் கூட்டமைப்பாக தன்னாட்சியுடைய கூட்டமைப்பு நிறுவப்பட வேண்டுமென்று அரசியல் தீர்மானம் நிறைவேற்றியது;[4][5][2][6] அந்தத் தீர்மானத்தில் பாக்கித்தான் என்ற பெயர் இடம்பெறவில்லை எனினும் அந்நாளை நினைவுகொள்ளும் வண்ணமே இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளைக் கொண்டாடும் விதமாக பாக்கிதானியப் படைகள் அனைத்தும் இணைந்து படையணிவகுப்பை நடத்துகின்றன.[3][7]
ஒளிப்படங்கள் தொகுப்பு
பாக்கித்தானிய படைகளின் அணிவகுப்பு.
பாக்கித்தானிய கடற்படையின் அணிவகுப்பு.
பாக்கித்தானிய வான்படையின் செர்டில் வானூர்திகள் அணிவகுப்பில் பங்கேற்பது வழமையாக உள்ளது.
↑அலுவல்முறை பெயராக (Urdu: Urdu: یوم پاکستان, lit. யோம்-இ-பாகிஸ்தான்) அல்லது பாக்கித்தான் நாள் எனப்படுகின்றது. இந்த நாள் பாக்கித்தான் தீர்மான நாள், குடியரசு நாள் (Urdu: يوم جمهوريه) அல்லது இணைந்த படையிடை அணிவகுப்பு. அலுவல்சாராது, இந்த நாள் மார்ச் 23 என்றும் அறியப்படுகின்றது.