பூளை (Aerva lanata) அல்லது தேங்காய்ப்பூக் கீரை அல்லது சிறுபீளை என்னும் பூவை இக்காலத்தில் பூளாப்பூ என்பர். இதற்கு பொங்கப்பூ, சிறுகண்பீளை, பீளைசாறி, கற்பேதி, பாஷாணபேதி, கண்பீளை என வேறு பெயர்களும் உண்டு. பொங்கல் திருவிழாவின்போது இது காப்புக் கட்டவும், வீடுகளுக்கும் மாடுகளுக்கும் தோரணம் கட்டவும் இக்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது. இச்செடி சாப்பிடக்கூடியவை. இதன் இலைகளை ரசம் தயாரிக்கும் பொழுது சேர்க்கின்றனர்.
பெயர் காரணம்
கற்களைக் கரைக்கும் ஆற்றல் உடையதால் கற்பேதி என்றும், கண்களிலிருந்து வெளியாகும் பீளைபோல இதன் பூக்கள் இருப்பதால் கண்பீளை என்றும் பெயர் உருவாயின.
விளக்கம்
இது சில அடிகள் உயரம்வரை நிமிர்ந்து வளரக்கூடிய சிறுசெடி வகை ஆகும். இதன் இலைகளுக்கு இடையில் சிறுசிறு வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டிருக்கும். இலை, தண்டில் வெள்ளை நிற ரோம வளரிகள் காணப்படும்.[4]
சங்கப்பாடல்களில் பூளை
குறிஞ்சிநிலக் கோதையர் குவித்து விளையாடியதாகக் காட்டப்பட்டுள்ள 99 மலர்களில் பூளை மலரும் ஒன்று. இது குருவி அமர்ந்திருப்பது போலப் பூத்திருக்கும்.[5]
வேளை வெண்பூவை மேயும் மான் பூளையை மேயாமல் ஒதுக்கும்.[12]
கண்ணகி மதுரையை எரியூட்டியபோது நான்கு வருணப் பூதங்களும் வெளியேறின. அவற்றுள் ஒன்றாகிய வேளாண் பூதம் அணிந்திருந்த பூக்களில் ஒன்று பூளை.[13]
சிறுபீளையால் அசிர்க்கர நோய்வாதம்,மூத்திர கிரிசம், முத்தோடம்,மூத்திரச்சிக்கல் பித்தவாதம் ஆகிய நோய்கள் குணமாகும்.
சிறு நெருஞ்சில் (TRIBULUS TERRESTRIS) இது மிகச்சிறந்த சிறு நீர் பெருக்கி ஆகும். கரைக்கப்பட்ட கல்லை வெளியேற்ற தனது சிறுநீர் பெருக்கும் செயலால் இம் மூலிகை முதலிடம் பெறுகிறது.
படக்காட்சியகம்
பூளாப்பூவைப் போல் காணப்படும் பேப்பூளாப் பூ
பொங்கல் திருநாளில் காப்புக் கட்டுதல் முதலான சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் பூளாப்பூ(பூளைப்பூ)
↑"Aerva lanata (L.) Juss. ex Schult. record n° 177". African Plants Database. South African National Biodiversity Institute, the Conservatoire et Jardin botaniques de la Ville de Genève and Tela Botanica. Archived from the original on 2007-10-12. Retrieved 2008-04-27.
↑டாக்டர் வி. விக்ரம் குமார் (9 சூன் 2018). "சிறுபீளையின் பெரும்பயன்!". கட்டுரை. தி இந்து தமிழ். Retrieved 10 சூன் 2018.