பெருங்குடி, திருச்சிராப்பள்ளி
பெருங்குடி என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின், ஆண்டநல்லூர் வட்டத்துக்கு உட்பட்ட, உள்ள ஒரு சிற்றூராகும். மல்லியம்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊர் திருச்சிராப்பள்ளியிலிருந்து, வயலூர் செல்லும் வழியில் 7 கிலோமீட்டர் தொலைவிலும், ஆண்டநல்லூரிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில், சோமரசம் பேட்டைக்கு அருகில் அமைந்துள்ளது. வரலாறுசோழர் காலக் கல்வெட்டுகளில் இந்த ஊரானது பெருமுடி, திருப்பெருமுடி என்று அழைக்கப்பட்டுள்ளது. அது இப்போது மருவி பெருங்குடி என்று அழைக்கப்படுகிறது. கல்வெட்டுகளில் இந்த ஊரில் உள்ள சிவன் பெருமுடி பரமேசுவரனார் என்று அழைக்கப்படுகிறார்.[1] 13 ஆம் நூற்றாண்டில் போசள மன்னன் வீர இராமநாதன் ஆட்சிக் காலத்தில் பெருங்குடியானது ஜகதேகவீரச் சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப்பட்டது. அவன் காலக் கல்வெட்டுகளால் அறியப்படுகிறது.[2] போக்குவரத்துதிருச்சிராப்பள்ளி கோட்டை தொடருந்து நிலையமும், திருச்சிராப்பள்ளி தொடருந்து நிலையமும் அருகிலேயே உள்ளன. கல்வி
பெருங்குடிக்கு அருகே உள்ள பள்ளிகள்
கோயில்இந்த ஊரில் சோழர் காலத்தில் கட்டபட்ட பழமையான அகத்தீசுவரம் கோயில் என்னும் சிவன் கோயில் உள்ளது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia