பேச்சு:சிலுவைப் போர்கள்சிலுவைப் போர்கள் கிறிஸ்தவம் சார்ந்தவையல்ல. இவை வரலாற்று நிகழ்வுகள். இவை வரலாற்றில் இடம்ப்ற்றுள்ள உண்மையான போர்களாகும். அத்தோடு இக்கட்டுரை கிறிஸ்தவத்தைச் சார்ந்து எழுதப்பட்டுள்ளது..--G.Kiruthikan (பேச்சு) 06:03, 6 சூலை 2013 (UTC) சிலுவைப் போர்களின் விளைவுகள் நன்மைகள் போன்றே இங்கு பெரிதும் இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது. அப் போர்களே ஐரோப்பிய அறிவெளிக் காலத்துக்கும், தொழிற்புரட்சிக்கும் காரணமாக அமைந்தன என்பது போன்று இங்கு செய்திகள் எவ்வித ஆதாரங்களும் இன்றி சேர்க்கப்பட்டுள்ளன. இப் போர்கள் ஐரோப்பாவின் மிகவும் ஒடுக்குமுறைகள் நிறைந்த ஒரு காலப் பகுதிக்கே காரணம் அமைந்தன. Middle Ages என்று அறியப்படும் இக் காலம் ஐரோப்பிய வரலாற்றில் இருண்ட காலம் ஆகும். இதில் இருந்து அறிவெளிக் காலத்தின் பின்பே ஐரோப்பா மீண்டது. அறிவெளிக் காலத்தை சிலுவைப் போர்கள் cause பண்ணின என்று கூற முடியாது, ஆய்வாளர்கள் அவ்வாறு கருதுவதாக அறியமுடியவில்லை. --Natkeeran (பேச்சு) 12:49, 6 சூலை 2013 (UTC) தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது; சிலுவைப் போர்களே மறுமலர்ச்சிக்குக் காரணமாய் இருந்தன. அதனாலேயெ ஐரோப்பியர்களால் இஸ்லாமியர்களிடமிருந்து பல்வேறு விடயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. உதாரணமாக இந்து அராபிய எழுத்து வடிவம், திசைகாட்டி, அச்சிடல் முறை. தரம் 10 இலங்கை வரலாற்றுப் புத்தகத்திலேயே இவற்றைக் கற்றேன். எனக்கு மேற்கோளிடத் தெரியாததாலேயே நான் மேற்கோள்களைச் சேர்க்கவில்லை. எனவே தயவு செய்து இம்மேற்கோளை சேர்க்கவும்.--G.Kiruthikan (பேச்சு) 09:45, 19 சூலை 2013 (UTC)
குறிப்புகள் - சிலுவை யுத்தத்தின் விளைவுகள்
முரண்பாடுசிலுவைப்போர் தோல்விக்கான காரணங்கள், சிலுவைப் போரின் விளைவுகள் ஆகிய உபதலைப்புகள் குழப்பமான கருத்துக்களைக் கொண்டுள்ளன. சிலுவைப்போர்கள் பல இடம்பெற்றன. அவை ஒவ்வொன்றின் விளைவுகளும் வேறுபட்டவை. ஆனால் இங்குள்ள உபதலைப்புப்பின் கீழ் எழுதப்படுபவை அவற்றுக்கு முரண்பாடானவை. ஆகவே, இவற்றை நீக்கப் பரிந்துரைக்கிறேன் அல்லது திருத்தி எழுதப்பட வேண்டும். --AntanO 05:58, 28 சூன் 2017 (UTC) சிலுவைப் போர்கள் குறித்துத் தாங்கள் குறிப்பிட்டுள்ளவற்றைக் கவனமுடன் கருத்தில்கொண்டு விக்கிநடைக்கேற்ப சில திருத்தங்களைச் செய்துள்ளேன். மேலும், உபதலைப்புகள் அனைத்தும் பாடநூலில் உள்ளவையே. அவை சிலுவைப் போர்கள் குறித்த பொதுவான முடிபுகளையே வெளிப்படுத்தியுள்ளன. தனிப்பட்ட கருத்து எதுவும் இங்கு இற்றைச் செய்யப்படவில்லை. வரலாறுகள் என்பது மெய்மையான கருத்துக்களை மட்டுமே உள்ளீடாகக் கொண்டிருக்கும் என்று நினைக்கவியலாது. தனிநபர் மனநிலை, அவ்வக்கால அரசியல் சூழ்நிலைகள் எல்லாம் வரலாற்றை நிர்ணயம் செய்திடும் காரணிகள் என்பதும் வெளிப்படை. கிடைக்கக் கூடியவற்றில் அதிக நம்பகத்தன்மையுடைய தரவுகள்தாம் நல்ல கட்டுரை உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைகின்றன. எனவே, முரணான கருத்துக்களை இற்றைப்படுத்துவது என்பது என்னுடைய தனிப்பட்ட நோக்கமல்ல என்பதைத் தெளிவுபடுத்துதல் என் கடன். நன்றி! மணி.கணேசன்
|
Portal di Ensiklopedia Dunia