மணிகர்னிகா பன்னாட்டுத் திரைப்பட விழா (Manikarnika International Film Festival) இந்தியாவின்உத்தரபிரதேச மாநிலம்வாரணாசியில் ஆண்டுதோறும் நடைபெறும் திரைப்பட விழாவாகும்.[1][2][3] 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வை மணிகர்னிகா திரைப்பட விழா அறக்கட்டளை ஏற்பாடு செய்தது.[4][5][6]
வரலாறு
இந்திய திரைப்பட இயக்குநரும் ஓவியருமான சுமித் மிசுராவால் 2022 ஆம் ஆண்டு இந்த விழா தொடங்கப்பட்டது. இதனை பாலிவுட் நடிகர் சஞ்சய் மிசுரா திறந்து வைத்தார்.[7][8] முதல் நிகழ்வு 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 15 முதல் 18 ஆம் தேதி வரை இந்தியாவின் வாரணாசி நகரத்தில் நடைபெற்றது.[8]
இந்த விழாவின் நோக்கம் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுத் திரைப்படங்களை ஒரு கலை வடிவமாகவும், பொழுதுபோக்கு வடிவமாகவும், திறந்த மற்றும் உரையாடல் கலாச்சாரத்துடன் கூடிய ஒரு துறையாகவும் வழங்குவதாகும்.[9]
2022
2022 ஆம் ஆண்டில், நடைபெற்ற விழாவில் 14 நாடுகளில் இருந்து 113 திரைப்பட உள்ளீடுகள் கிடைத்தன. இதில் 21 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. 60 குறும்படங்கள் விழாவில் திரையிடப்பட்டன.[10][11]
2023
2023 ஆம் ஆண்டில், விழாவில் 18 நாடுகளில் இருந்து 130 திரைப்பட உள்ளீடுகள் கிடைத்தன, அவற்றில் 18 திரைப்படங்கள் மற்றும் 37 குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.[12]