மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம்
![]() மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் (Central Drug Research Institute) இந்தியாவின் இலக்னோவில் உள்ள பலபிரிவுகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆய்வகமாகும். இங்கு உயிரியல் மருத்துவ அறிவியலின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பணிபுரிகின்றனர். பேராசிரியர் தபஸ் குமார் குண்டு, மூலக்கூறு உயிரியலாளர், கல்வியாளர் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசைப் பெற்றவர், மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் தற்போதைய இயக்குநராக உள்ளார். வரலாறுமத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு நிறுவப்பட்ட முதல் ஆய்வகங்களில் ஒன்றாகும். இந்திய அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் கீழ் செயல்படும் முப்பத்தொன்பது ஆய்வகங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஆராய்ச்சி நிறுவனம் 1951 பிப்ரவரி 17 அன்று அன்றைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களால் முறையாகத் திறந்து வைக்கப்பட்டது.[2] பிரிவுகள்நிர்வாக மற்றும் அறிவியல் நோக்கங்களுக்காக இந்நிறுவனத்தில் 17 ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவுகளும், தொழில்நுட்ப மற்றும் அறிவியல் ஆதரவை வழங்கும் பல பிரிவுகளும் செயல்படுகின்றன. பின்வரும் பிரிவுகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ளன:
கூடுதலாக, ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வெளியே அமைந்துள்ள இரண்டு தரவு மையங்கள் மற்றும் ஒரு கள ஆய்வு நிலையமும் இந்நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகின்றன. சாதனைகள்
மேற்கோள்கள்
26°51′37″N 80°55′51″E / 26.8602°N 80.9309°E வெளி இண் ஐப்புகள் |
Portal di Ensiklopedia Dunia