மயிலாடுதுறை-மைசூர் விரைவு வண்டி
மயிலாடுதுறை-மைசூர் எக்ஸ்பிரஸ் கர்நாடகாவில் உள்ள மைசூரு சந்திப்பு, மற்றும் தமிழ்நாட்டிலுள்ள மயிலாடுதுறை சந்திப்பை இணைக்கும் இரயில் சேவை ஆகும். இவை தஞ்சாவூர் சந்திப்பு வழியாக திருச்சிராப்பள்ளி சந்திப்பு,ஈரோடு சந்திப்பு மற்றும் பெங்களூர் சிட்டி வழியாக மைசூரை சென்றடைகிறது. வரலாறுதொடக்கத்தில், 31/32 எனற எண் கொண்ட, இந்த சேவையானது உறங்கும் படுக்கை வசதியுடன் தீவு எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஈரோடு வரை இணைக்கப்பட்டது. பின்ன ரயில்வே அமைச்சராக இருந்த சி.கே.ஜாபர் ஷெரீஃப், வண்டி எண் 6531/6532 பெங்களூரு மற்றும் திருச்சி இடையே பிரத்யேக சேவை வழங்கப்பட்டதுர், , .[3] விரிவாக்கம்மதுரையிலிருந்து கரூர், 6531 ஏ / 6532 ஏ என பல ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டன. 6531/6532 எண்ணிலிருந்து முதல் 6231/6232 வரையிலான ரயில் எண்ணாக மாற்றப்பட்ட பிறகு, அது முதலில் மைசூருக்கும், பின்னர் தஞ்சாவூருக்கும், நாகூருக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.[4] 29 ஜூன் 2002 அன்று, ரயில் எண் 6231/6232 என்பதை 6831/6832 வண்டி எண்ணாக மாற்றப்பட்டு மைசூரூ இரயில்வே பிரிவிலிருந்து திருச்சிராப்பள்ளி ரயில்வே பிரிவுக்கு மாற்றப்பட்டது.[5] திருச்சி-நாகூர் பிரிவில் திருச்சி-நாகூர் சேவையானது திருச்சி-நாகூர் பிரிவில் பாதை மாற்றத்தை செயல்படுத்த 1995-1996-ல் ரயில்வே பட்ஜெட்டில் அனுமதிக்கப்பட்டது.பின்னர் 1998-ல் திருச்சி-தஞ்சாவூர் பாதை நிறைவுபெற்றதும், மீண்டும் தஞ்சாவூருக்குச் இரயில் சேவை செயல்படுத்தியதுதஞ்சாவூர்-கும்பகோணம் பாதை முடியு பெற்ற பிறகு சென்னை எழும்பூர்-தஞ்சாவூர் வழியில் தஞ்சாவூர்-கும்பகோணம் பகுதியில் வண்டி எண் 6231/6232, என்ற தொடர் வண்டியை ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி முதல் கும்பகோணம் வரை நீட்டிக்கப்பட்டார்.[6][7] மேலும், இந்த சேவை மயிலாடுதுறை சந்திப்பு வரை நீட்டிக்கப்பட்டு 2006 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த ரயில் எண் 6231/6232 இலிருந்து 16231/16232 ஆக மாற்றப்பட்டது. இது இந்திய இரயில்வே நெட்வொர்க் முழுவதிலும் ரயில் மேலாண்மை அமைப்பின் ஒரு பகுதியாகும்.[8][9] 2025ம் ஆண்டு முதல் இந்த ரயில் கடலூர் வரை நீட்டிக்கப்பட்டு இயங்கி வருகின்றது. சீர்காழி, சிதம்பரம் ஆகிய ஊர் மக்களுக்கு ம் இதன் மூலம் மைசூர் மற்றும் பெங்களூர் நகரங்களுக்கு செல்ல பயனுள்ளதாக இந்த ரயில் அமைந்துள்ளது. பெட்டிகள்இந்தத் தொடரில் ஆரம்பத்தில் 16 பெட்டிகள் இருந்தன, ஜூலை 1, 2005 இல் ஒரு கூடுதல் படுக்கை பெட்டி சேர்க்கப்பட்டது. 2013 ஜூன் 6 ஆம் தேதி ஒரு படுக்கை பெட்டி சேர்க்கப்பட்டது மற்றும் கூடுதலாக படுக்கை பெட்டிஜூன் 8 இல் சேர்க்கப்பட்டன. தற்போது 21 பெட்டிகள் ஏசி 2-அடுக்கு (2 ஏ), இரண்டு ஏசி 3-அடுக்கு (3 ஏ), பன்னிரண்டு இரண்டாம் படுக்கை பெட்டிகள் (எஸ்.எல்.), நான்கு பதிவுசெய்யப்படாத (பொது) பெட்டிகள்/ ஜி.எஸ்) மற்றும் இரண்டு பொருள் வைக்கும் பெட்டிகள் (எஸ்எல்ஆர்) உள்ளன. [a]
அட்டவணைகும்பகோணம், தஞ்சாவூர் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்தி, ஈரோடு சந்திப்பு, சேலம் சந்தி மற்றும் பெங்களூர் நகரங்கள் ஆகிய நிறுத்தங்கள் அடங்கும். மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில், மைசூர் சந்திப்பில் இருந்து புறப்பட்டு, 16232 ரெயில்களில், அதே வழியில் செல்கிறது, ஈரோடு சந்திப்பு மற்றும் திருச்சிராப்பள்ளி சந்திப்பில் இருமுறை திருப்பப்பட்டு, அடுத்த நாள் காலை மயிலாடுதுறை சந்திப்புக்கு வந்து சேருகிறது..[10][b] மேலும் பார்க்க
குறிப்புகள்பார்வை நூல்கள்
|
Portal di Ensiklopedia Dunia