மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரி
மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரி (Pakkiyam National College) என்பது இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியாகும். இது ஒரு பெண்கள் கல்லூரி. மகாத்மா காந்தி இலங்கை வருகை தந்தபோது, மாத்தளை வந்து 1927ஆம் ஆண்டு மே 16ஆம் நாள் இப்பாடசாலைக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார். அதன் நினைவுச்சின்னமாக காந்தி மண்டபம் என்னும் ஒரு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.[1] இக்கல்லூரியானது கந்தசாமி, பாக்கியம் கந்தசாமி ஆகியோரால் நிறுவப்பட்டதாகும்[2]. இது 1929 செப்டெம்பர் 9 அன்று சேர் பொன்னம்பலம் இராமநாதனால் திறந்து வைக்கப்பட்டது. இப்பாடசாலையின் முதல் மாணவி விமலராணி கந்தசாமி ஆவார். 1929இலிருந்து கல்லூரி முதல்வர்கள்
1929 முதல் 1962 வரை இருந்த நான்கு அதிபர்கள்
அரசுப் பள்ளியாக மாற்றப்பட்ட பின்னர்
இன்றைய பாக்கியம் கல்லூரிஇன்றைய பாக்கியம் தேசிய கல்லூரியின் அதிபராக, சுலோசனா பஞ்சேந்திரராசன் கடமையாற்றுகிறார். தற்போது அங்கே ஏறத்தாழ ஆயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருக்கின்றனர். எழுபதுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகள் வரை கலவன் வகுப்புகளாகவும் ஆறு முதல் உயர்தரம் வரை மாணவிகளை மட்டும் கொண்டதாகவும் இப்பள்ளியானது அமைந்துள்ளது. இங்கு மாற்றுத்திறனாளிப் பிள்ளைகளுக்கான வகுப்புகளும் 2015ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உயர்தர வகுப்புகள்மாத்தளையில் சிறந்த உயர்தரப் பெறுபேறுகளைப் பாக்கியம் தேசிய கல்லூரி பெற்றுள்ளது. இப்பாடசாலையில் உயர்தரத்தில் கலைப்பிரிவு, வர்த்தகப்பிரிவு, கணிதப்பிரிவு, விஞ்ஞானப்பிரிவு என்பன காணப்படுகின்றன. உயர்தரத்தில் மருத்துவபீடம், பொறியியற் பீடம், சட்டபீடம், கலைப்பீடம் போன்றவற்றுக்கு ஆண்டுதோறும் மாணவர்கள் இணைகின்றனர்.[சான்று தேவை] கல்லூரிக் கீதம்வளமிகு மாத்தளை மாநகர் நடுவே
பாக்கிய வித்தியாலயமென்னும் பெயரால்
தமிழொடு ஆங்கில சிங்கள மொழிகள்
மும்மதம் போற்று நற் கோயில்-பல
கலைகளை வளர்த்திடுமாமே
திகழ்ந்து நீ ஒளி விடுவாயே மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia