மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை
மிஸ்டர் அண்ட் மிசஸ் என்பது 20 சனவரி 2019 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உண்மைநிலை போட்டி விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.[1] இந்த நிகழ்ச்சியின் முதல் பருவத்தை மா கா பா ஆனந்த் என்பவர் தொகுத்து வழங்க, பிக் பாஸ் தமிழ் 2 புகழ் விஜயலட்சுமி, நடிகை தேவதர்சினி, கோபிநாத் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.[2][3] இதன் இரண்டாம் பருவம் 8 மார்ச்சு முதல் 11 அக்டோபர் 2020 வரை ஒளிபரப்பானது. மா கா பா ஆனந்த் மற்றும் நிஷா ஆகியோர் தொகுத்து வழங்க, தேவதர்சினி மற்றும் கோபிநாத் ஆகியோர் நடுக்கவர்களாக இருந்தனர்.[4][5] இதன் மூன்றாம் பருவம் 24 ஏப்ரல் 2021 முதல் வரை ஒளிபரபபிக்கின்றது. மா கா பா ஆனந்த், அர்ச்சனான் மற்றும் நிஷா ஆகியோர் தொகுத்து வழங்க, தேவதர்சினி மற்றும் கோபிநாத் ஆகியோர் நடுக்கவர்களாக இருந்தனர். நிகழ்ச்சியின் கதைச்சுருக்கம்இது சின்னத்திரை நடிகர்கள் திரைக்கு பின்னால் அவர்களது திறமை, அன்பு, காதல் ஆகியவை எப்படி உள்ளது என்பதைப் பற்றிய நிகழ்ச்சியாகும். ஒவ்வொரு சுற்றும் வெவ்வேறு மாதிரி இருக்கும். இவை அனைத்தும் நட்சத்திர ஜோடிகளின் திறமைகள், காதல், மன உறுதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் சுற்றுகளாக அமைந்து அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும். இறுதியில் ஒரு ஜோடிக்கு மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை பட்டம் வழங்கப்படும். ஒளிபரப்பு
நிகழ்ச்சியின் பருவங்கள்
போட்டியாளர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia