மு. கார்த்திகேயப் புலவர்
மு. கார்த்திகேயப் புலவர் (1819 - 1898) ஈழத்துத் தமிழறிஞரும், புலவரும், நாடகாசிரியரும், இதழாசிரியரும் ஆவார். வேதாகமங்களை நன்கு கற்றறிந்தவர். 1886 ஆம் ஆண்டில் உதயபானு என்ற இதழை ஆரம்பித்து வெளியிட்டு வந்தார்.[1] வாழ்க்கைக் குறிப்புயாழ்ப்பாணம், காரைநகரில் முருகேசையர் என்பவருக்குப் பிறந்தவர் கார்த்திகேயப் புலவர்.[2] தனது தந்தையிடம் இருந்து தமிழையும், காரைநகரைச் சேர்ந்த சுவாமிநாத தேசிகரிடம் இருந்து வடமொழியையும் கற்றார்.[2] பின்னர் தமதூரைச் சேர்ந்த சண்முகம்பிள்ளை என்பவரிடம் கல்வி கற்றார்.[2] ஆறுமுக நாவலரின் ஆசிரியரான இருபாலை சேனாதிராச முதலியாரிடம் தமிழ் இலக்கணத்தை முறையாகப் பயின்றார்.[2] தமது ஊரிலேயே பாடசாலை ஒன்றை ஆரம்பித்து அதன் ஆசிரியராக இருந்து பல மாணவர்களைப் பயிற்றுவித்தார்.[2] நாடகங்கள்கார்த்திகேயப் புலவர் கந்த புராணத்தில் வரும் சூரபதுமனின் சரித்திரத்தை நாடகமாக இயற்றி நடிப்பித்தார்.[1] மகாபாரதக் கதாபாத்திரமான சந்திரவண்னனின் சரித்திரத்தையும் நாடகமாக எழுதினார்.[1] எழுதிய நூல்கள்இளமையிலேயே கவிகள் இயற்றும் ஆற்றல் பெற்றிருந்த இவர் தமது தந்தையால் பாடப்பெற்ற தன்னையமகவந்தாதியின் கடைசி 30 செய்யுள்களையும் பாடி நிரப்பினார்.[2] இவர் இயற்றிய நூல்கள்:[1]
மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia