முத்துமலை முருகன் கோயில், ஏத்தாப்பூர்
ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் சேலம் மாவட்டத்தில் ஏத்தாப்பூர் பகுதியின் புத்திரகவுண்டன்பாளையம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு முருகன் கோயில் ஆகும்.[1] உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் உயரம் 111 அடி ஆகும். பீடம் 35 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 146 அடி உயரம் கொண்டதாக விளங்குகிறது.[2][3] கடல் மட்டத்திலிருந்து சுமார் 329 மீட்டர் உயரத்தில், 11°39′24″N 78°29′08″E / 11.656545°N 78.485505°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் சுப்பிரமணியர் ஆவார். ஆண்டுதோறும் சூரசம்காரம் நிகழ்வு இக்கோயிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.[4][5] 2022ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் ஆறாம் நாள், இக்கோயிலின் கும்பாபிசேகம் நடைபெற்றது.[6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia