முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி1
முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி1 (PSLV-C1) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் செயல் திட்டமான முனைய துணைக்கோள் ஏவுகலத்தின் நான்காவது திட்டம் ஆகும். இது ஐ. ஆர். எஸ்.-1டி எனும் செயற்கைக்கோளை ஏந்திச்சென்றது.[1][2][3][4] இது உருசியாவின் உதவி இல்லாமல் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் செலுத்து வாகனம் மற்றும் பி. எஸ். எல். வி.-யின் முதல் செயற்பாட்டு விமானம் ஆகும். இது ஐ. ஆர். எஸ்.-1 டியை ஒரு துருவச் சுற்றுப்பாதையில் செலுத்தியது. இதன் ஒரு பகுதியில் இருந்து ஹீலியம் வளி வெளியேறியதால், இதனைத் திட்டமிட்டபடி வட்டச் சுற்றுப்பாதையில் வைக்க இயலாமல் நீள் வட்டச் சுற்றுப்பாதையில் செலுத்தினர். செயற்கைக்கோளைத் தக்க உயரத்தில் வைக்க முடியாமல் போனதால் இந்தத் திட்டம் பகுதியளவு தோல்வி அடைந்ததாகவே கருதப்படுகிறது.[2][5] [6] திட்டத்தின் அளவுருக்கள்
ஏவுதல்பி. எஸ். எல். வி-சி1 ஆனது, 29 செப்டம்பர் 1997 அன்று, ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பின்பு ஒத்திசைவான கோளப்பாதையில் இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டது.[1][2][3][5][4] மேற்கோள்கள்
இவற்றையும் காண்க |
Portal di Ensiklopedia Dunia