முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி61
முனைய துணைக்கோள் ஏவுகலம் சி-61 (PSLV-C61) என்பது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முனைய செயற்கைக்கோள் ஏவூர்தி திட்டத்தின் 63 வது வாகனம் ஆகும். எக்ஸ்எல் கட்டமைப்பில் அதன் 27 வது வாகனமாகவும் இருக்கும். இந்த ஏவுகல இயக்கம் 2025 மே 18 அன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த ஏலுவுதல் ஈஓஎஸ்-09 (EOS-09 - RISAT 1-B) ஐக் கொண்டு செல்ல இருந்தது.[1] ஏவுசுமைEOS-09 ஆனது, ரிசாட் 1-பி (RISAD 1-B) என்றும் அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் ரிசாட் தொடரில் ஏழாவது செயற்கைக்கோளாக இருக்கும். இது ஒரு சி-வரிசை செயற்கை தொகுவில்லை வீவாணி செயற்கைக்கோள் ஆகும். இது பகலோ அல்லது இரவோ வானிலை நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் பூமியின் மேற்பரப்பின் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களைப் பிடிக்க உதவுகிறது. இந்தச் செயற்கைக்கோள் ஐந்து தனித்துவமான உருவரைவு படிமமாக்கல் முறைகளைக் கொண்டுள்ளது, இது மீஉயர் படப்புள்ளிச் செறிவுடன் படிமமாக்கல், சிறிய பொருட்களைக் கண்டறியும் திறன், பெரிய பகுதி கண்காணிப்புக்கான பரந்த ஊடுகதிர் மேவுதலுக்கிடையில் மாற உதவுகிறது. இந்த செயற்கைக்கோள் இந்தியாவின் விண்வெளி கண்காணிப்புத் திறன்களை அதிகரிக்கும் என்றும், சிறந்த நிர்வாகம், பேரிடர் தொடர்பான விரைவான துலங்கலுக்குப் பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்தியா-பாக்கித்தானிய எல்லை பதட்டங்களுக்கு மத்தியில் இது சூரிய-ஒத்தியங்கும் வட்டணையில் செலுத்தப்பட உள்ளது. [2][3][1][4] ஏவுகலம் - கண்ணோட்டம்
ஏவுதல் தோல்விமுனைய துணைக்கோள் ஏவுகலம்-சி61 சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 18 மே 2025 அன்று காலை இந்திய சீர் நேரம் 05.59-இற்கு விண்ணில் ஏவப்பட்டது. முதல் இரண்டு அடுக்குகள் வெற்றிகரமாகப் பிரிந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூன்றாவது அடுக்கு பிரியாத நிலையில் இந்த ஏவுதல் தோல்வி அடைந்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், இந்தத் தோல்விக்கான காரணம் குறித்து இந்திய விண்வெளி மையம் மதிப்பீடு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[5][6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia