மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு முகமைச் சட்டம் 2022
மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு முகமைச் சட்டம் 2022 (Advanced Research and Invention Agency Act 2022) என்பது ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள ஒரு சட்டமாகும். மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு முகமையை இச்சட்டம் உருவாக்குகிறது. வர்த்தகம், எரிசக்தி மற்றும் தொழில்துறை உத்திக்கான மாநில செயலாளர் குவாசி குவார்டெங்கால் 2021 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 2 ஆம் தேதியன்று அந்நாட்டு பொதுச்சபையில் அறிமுகப்பட்டுத்தப்பட்டது. பின்னணிஅமெரிக்கா, செருமனி மற்றும் சப்பான் போன்ற நாடுகளின் மேம்பட்ட ஆராய்ச்சி திட்ட முகமை நிறுவனங்களை பின்பற்றுவதற்கான முயற்சியாக மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் நிறுவப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியம் கூறியுள்ளது.[1] இந்தக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல அரசாங்கத்தை ஊக்கப்படுத்திய பெருமைக்குரியவர் பிரதம மந்திரி போரிசு இயான்சனின் முன்னாள் ஆலோசகர் தொமினிக் கம்மிங்சு ஆவார்.[2] இம்முகமையின் திட்டங்கள் குறித்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் தேர்வுக் குழுவின் விசாரணைக்கு முன் கம்மிங்சு அழைக்கப்பட்டார்.[3] குறிப்பிடத்தக்க சட்டத்திருத்தங்கள்நோக்கம்இசுக்காட்டிய தேசியக் கட்சியின் வணிக செய்தித் தொடர்பாளர் இசுடீபன் பிளைனும் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் எண்ணிமத் துறையின் நிழல் அமைச்சருமான சி ஒன்வுராவும் நிகர சுழிய தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவதற்கு இம்முகமையின் முதன்மை நோக்கத்தை மாற்றியமைக்கும் பிரிவிற்கு ஒரு திருத்தத்தை முன்வைத்தனர். சில கட்சிகள் தவிர அனைத்து கட்சிகளும் திருத்தத்தை ஆதரித்தன என்றாலும் திருத்தங்கள் தோல்வியடைந்தன.[4] தகவல் சுதந்திரம்தொழிலாளர் சட்டத்திற்கு விதிவிலக்கு உள்ளதால் தகவல் அறியும் சட்டத்தின் வரம்பிற்குள் இம்முகமையை வைக்கும் ஒரு திருத்தமும் முன்வைக்கப்பட்டு இந்தத் திருத்தமும் தோல்வியடைந்தது.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia