ரோசா வித்யாதர் தேசுபாண்டே
ரோசா வித்யாதர் தேசுபாண்டே (Roza Vidyadhar Deshpande) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1929 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார்.[1] ஐக்கிய இந்திய பொதுவுடைமை கட்சியின் இந்திய அரசியல்வாதியாகச் செயல்பட்டார். 1980 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை அகில இந்திய பொதுவுடைமைக் கட்சியிலும் அதற்கு முன்பு இந்திய பொதுவுடைமைக் கட்சியிலும் தொடர்பு கொண்டிருந்தார்.. குடும்ப பின்னணி மற்றும் கல்விஇந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் நிறுவன உறுப்பினரும் இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் தீவிரமானவருமான சிறீபாத் அம்ரித் தாங்கேவின் மகளாக இவர் பிறந்தார். இவரது தாயார் பெயர் உசாபாய் தாங்கே என்பதாகும். உசாதை என்று இவர் பிரபலமாக அறியப்பட்டார். பொதுவுடைமை தொழிற்சங்கத் தலைவராகவும் இவர் செயல்பட்டார். தனது தந்தையின் முதல் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.[1] பொதுவுடைமை கட்சித் தலைவர் வித்யாதர் இலட்சுமண் தேசுபாண்டே என்ற பானி தேசுபாண்டேவை ரோசா வித்யாதர் திருமணம் செய்து கொண்டார்.[2] அரசியல் வாழ்க்கைரோசா வித்யாதர் பொதுவுடைமைக் கட்சி வேட்பாளராக பம்பாய் மத்திய தொகுதியில் இருந்து 5 ஆவது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] ரோசா வித்யாதர் தேசுபாண்டே மகாராட்டிரா மாநிலத்தை உருவாக்குவதற்கான இயக்கமான சம்யுக்த மகாராட்டிரா இயக்கத்திலும் கோவா விடுதலைப் போராட்டத்தில் அகில இந்திய மாணவர் கூட்டமைப்பின் உறுப்பினராகவும் பங்கேற்றார்.[4][5][6] இறப்புரோசா தேசுபாண்டே 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதியன்று மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அப்போது அவளுக்கு 91 வயது.[7] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia